உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் தேர்தலில் பர்தா அணிந்த பெண்களை அடையாளம் காண ஏற்பாடு

பீஹார் தேர்தலில் பர்தா அணிந்த பெண்களை அடையாளம் காண ஏற்பாடு

புதுடில்லி: பீஹாரில் ஓட்டுப்பதிவு நடக்கும் நிலையங்களில் பர்தா அணிந்த பெண் வாக்காளர்களை மரியாதைக்குரிய முறையில் அடையாளம் காணும் வகையில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது.

இதுகுறித்து தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

ஓட்டளிக்க வரும் பர்தா அணிந்த பெண்களை அடையாளம் காணும் பணியில் அவர்களின் தனியுரிமை காக்கப்படும். 90,712 அங்கன்வாடி ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் பர்தா அணிந்து வரும் பெண்களை அடையாளம் காணும் பணியில் நியமிக்கப்படுவர். கண்ணியமான முறையில் அவர்களின் அடையாளம் உறுதி செய்யப்படும். இவ்வாறு அறிக்கையில் கூ றப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

lana
அக் 11, 2025 22:53

அப்படி ஒண்ணும் ஓட்டு போட வேண்டியது இல்லை. வீட்டில் இருக்கட்டும்.


VRM
அக் 11, 2025 19:45

வாக்குசாவடிக்கு பர்தா அணிந்து வந்தால் வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது. வாக்கு சாவடியில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது.


N Sasikumar Yadhav
அக் 11, 2025 19:32

த‌ற்போது நாட்டின் பாதுகாப்புக்கு இத்தாலி மாதிரி சட்டம் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய முக்கியமான தேவை


Venugopal S
அக் 11, 2025 17:55

ஆதாரில் கைரேகை பதிவு செய்யப் பட்டுள்ளது,எனவே ஓட்டுப் போட பர்தா அணிந்து வருபவர்கள் பர்தாவை நீக்கி முகத்தைக் காட்ட மறுத்தால் கைரேகையுடன் ஒப்பிட்டு அனுமதி அளிக்கலாமே!


RAMAKRISHNAN NATESAN
அக் 12, 2025 08:36

ஓட்டுப்பதிவு தாமதமாகும் ....


Rajasekar Jayaraman
அக் 11, 2025 14:23

அருமையிலும் அருமை கள்ள ஒட்டு தாடுக்கப்படும் ஆனால் அங்கன்வாடி ஊழியர்கள் ஆளும் கட்சிக்கு விசுவாசமாக கட்டாய படுத்த வாய்ப்பு உண்டு ஆகவே ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் பூத் ஏஜென்ட்கள் பெண்களை நியமிக்கலாம்.


Barakat Ali
அக் 11, 2025 09:31

பர்தா அவசியமே ...... அதை எந்த மதத்தினரும் அணிந்து கொண்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது ....


நிக்கோல்தாம்சன்
அக் 11, 2025 09:24

சமத்துவம் பேசும் மக்களெல்லாம் முன்னாடி வாங்கப்பு , மதத்தை வீட்டில் வைத்து விட்டு நாட்டுக்கு உழையுங்க பிராக்டிகல் தொந்திரவு ஏற்படுத்தும் எல்லாவற்றிலும் மதம் தான் பிரதானம் . தூக்கி குப்பையில் போடுங்கள்


பேசும் தமிழன்
அக் 11, 2025 08:41

முகத்தை மறைத்து கொண்டு வரும் யாராக இருந்தாலும்..... ஓட்டளிக்க உரிமையில்லை என்று கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்..... இல்லையேல் கான் கிராஸ் தலைமையிலான இந்தி கூட்டணி ஆட்கள் பங்காளதேஷ் மற்றும் பாகிஸ்தான் நாட்டில் இருந்து ஆட்களை கொண்டு வந்து போலி ஓட்டு போட வாய்புள்ளது.... அவர்கள் எப்படியாவது தில்லுமுல்லுகளை செய்தாவது தேர்தலில் வெற்றி பெற்று விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார்கள்.


GMM
அக் 11, 2025 07:51

பொது இடங்களில் இந்த நடைமுறை மறு பரிசீலனை செய்ய வேண்டும். தனி மத சடங்குகளில் இதனை ஏற்கலாம். வாக்கு செலுத்த, பள்ளியில் படிக்க மத சடங்கு கட்டாயம் என்றால் அது பொது விதிக்கு எதிராக அமையும். பிற மத மக்களிடம் இருந்து பெண்களை தனிமை படுத்தும். தற்போதைய கால கட்டத்தில் மத அமைப்புகள் இதனை மாற்ற வேண்டும்.


oviya vijay
அக் 11, 2025 07:47

அப்போ மதசார்பின்மை...? அதென்ன ஓட்டு போடும் இடத்திற்கு இவ்வாறான உடைகள்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை