உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொய்யான வீடியோக்களை பரப்பினால் கடும் நடவடிக்கை; எச்சரிக்கிறது ரயில்வே அமைச்சகம்

பொய்யான வீடியோக்களை பரப்பினால் கடும் நடவடிக்கை; எச்சரிக்கிறது ரயில்வே அமைச்சகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரயில்வே துறை குறித்து பொய்யான வீடியோக்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி எச்சரித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, ரயில்நிலையங்களில் பொதுமக்களின் கூட்டம் அலை மோதுகிறது. இந்த நிலையில், ரயில்நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக செய்யப்பட்டுள்ளனவா? என்பது குறித்து டில்லியின் அனந்த் விஹார் ரயில் நிலையத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகள் குறித்து பயணிகளிடம் அவர் கேட்டறிந்தார். அப்போது, அவர் கூறியதாவது; பயணிகளின் சவுகரியமும், பாதுகாப்பும் தான் எங்களுக்கு முக்கியம். ரயில்வே குறித்து பொய்யான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற செயல்களை மக்கள் ஈடுபடக் கூடாது, எனக் கூறினார்.நேற்று முன்தினம் டில்லி ரயில்நிலையத்தில் கட்டப்பட்டு வரும் பயணிகள் தங்குமிடத்தை ஆய்வு செய்த அவர், பயணிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Sesh
அக் 22, 2025 14:39

still south indian railway reserved passengers facing lot of problem by non reserved / no ticket north people. what action taken permantely, why reserved passengers always facing such problem. this man never ever responce to such big problem.


குடந்தை செல்வகுமார்
அக் 21, 2025 12:08

அஸ்வினி அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ரயில்வே நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் ரயில்வே ஸ்டேஷங்கள் அழகுபடுத்த செய்யும் நிதியை(உ. ம். எழும்பூர் நிலயத்திற்கு 700 கோடி திட்டம் ), இரட்டை பாதை, புதிய பாதைக்கு ஒதுக்கலாம். இவையே இப்போதைய தேவை.


தாமரை மலர்கிறது
அக் 20, 2025 23:22

பொய்யான வீடியோக்கள் தினமும் உலா வருகின்றன. வதந்தி பரப்புவர்களை ஒரு வருடம் ஜெயிலில் போடுவது நல்லது.


Varadarajan Nagarajan
அக் 20, 2025 19:56

1 லிட்டர் குடிநீர் வெளி சந்தையில் ரூ 20 க்கு விற்கப்படுகிறது. அதே குடிநீரை தங்களது பாட்டிலில் நிரப்பிக்கொண்டால் ரூ 8 க்கு ரயில்வே கொடுக்கின்றது. வண்டலூர் முதல் பாரிமுனைக்கு ரூ 10 க்கு பயண சேவையை ரயில்வே அளிக்கின்றது. ஆனால் அதை பயன்படுத்தும் பயணியர் பலர் தாங்கள் தின்பண்டங்கள் குப்பையைக்கூட குப்பைத்தோப்பிட்டியில் போடமாட்டார்கள். ரயில்களில் கழிவறையை பயன்படுத்தினால் தண்ணீர் விட்டு அடுத்தவர் பயன்படுத்துமளவிற்குக்கூட செய்யமாட்டார்கள். அங்கு வைக்கப்படும் கப்பைக்கூட இல்லாமல் செய்துவிடுவார்கள். ஆனால் ரயில் நிலையம் சுத்தமாக இல்லை என ஊடகங்களில் வீடியோ போடுவார்கள். பயனாளர்களுக்கு சுத்தம் பற்றிய பொறுப்பும் தேவை.


Venugopal S
அக் 20, 2025 17:54

இல்லேன்னாலும் இவர்களுக்கு இப்போது ரொம்ப நல்ல பெயர் இருக்கு கெடுப்பதற்கு!


முருகன்
அக் 20, 2025 13:09

உன்மையான விடியோ மீது இது வரை எடுத்து நடவடிக்கைகள் என்ன ஒரு சிலர் ரிசர்வேஷன் பெட்டிகளில் ஏறிக்கொண்டு செய்யும் பயணிகளிடம் செய்யும் தெந்தரவு க்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன


Gokul Krishnan
அக் 20, 2025 13:05

ஈரோடு ஜோக்பானி அம்ரித் பாரத் ரயிலில் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட உணவு அலுமினியம் டப்பாவை சாதாரண தண்ணீரில் அலசி விட்டு மீண்டும் பயன்படுத்த எடுத்து செல்லும் ரயில் கேண்டீன் பணியாளர் செய்யும் பொய் தானா சார். திருப்பூர் ட்ரைவ் நிலையத்தில் எர்ணாகுளம் பாட்னா விரைவு ரயிலில் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஓபன் டிக்கெட் எடுத்து அலிச்சாட்டியம் செய்யும் ஒரு சில வடக்கன்ஸ் வீடியோ அதுவும் பொய் தானா சார்


vivek
அக் 21, 2025 05:23

எல்லா ஊரிலும் உன்னை போல கிறுக்கங்கக் இருக்கத்தான் செய்யுது


pakalavan
அக் 20, 2025 11:05

நீங்க மட்டும்தான் பொய்யான தகவலை பரப்புவீங்களா ?


V Venkatachalam
அக் 20, 2025 12:13

டமில் நாட்டுல பொய்யான தகவலை பரப்ப மிகப்பெரிய கூட்டமே இருக்கு. மிகவும் அதிகமான மீடியாக்கள் இருக்கு. நண்டு குஞ்சுகள் கணக்கா உ.பி கள் இருக்கானுங்க.‌ தேர்தல் வாக்குறுதிகளில் ஆரம்பித்து கணக்கில்லாமல் போய்கிட்டு இருக்கு. மேலும் உ.பீஸ்ங்களுக்கு உடம்பில் சொரணையே கிடையாது.‌ வேணும்னால் மத்திய அரசு ன்னு பேசுவாய்ங்க.வேண்டாம் னால் ஒன்றிய அரசு ன்னு சொல்வாய்ங்க திருட்டு தீய முககாரனுங்க எவன் வாயை தொறந்தாலும் பொய்தான் முதலில் வரும்.ஆனா பாருங்க. மத்தவனை பொய் சொல்றவன்னு சொல்வானுங்க.


vivek
அக் 20, 2025 12:41

திராவிட சொம்புகளே இந்த வேலையை செய்யும் கொத்தடிமைகள்


vadivelu
அக் 20, 2025 12:55

அவங்க பொய்யான தகவல்களை கொடுத்தால் நீங்க கோர்ட்டில் மனு கொடுக்கலாமே. உண்மையில் உங்களுக்குத்தான் அதிக உரிமைகள் இருக்கு.


ஆரூர் ரங்
அக் 20, 2025 10:54

இதைவிட ஜிஎஸ்டி பற்றி உள் நோக்கத்துடன் திரிக்கபட்ட பதிவுகள் இடும் உ.பி ஸ் மீது தேசீயப் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். சென்ற வாரம் திமுக வுக்கு நெருக்கமான ஒருவரின் உணவகத்தில் இட்லி, சப்பாத்தி சாப்பிட்டேன். இரண்டுக்குமே ஜிஎஸ்டி போட்டு பில் தந்தார்கள்.


aaruthirumalai
அக் 20, 2025 10:50

ஜனத்தொகை மிகுந்த நாடு நூறு சதவீத சேவை வழங்க இயலாத சூழ்நிலையே இருக்கிறது. இது உங்களுக்கு நன்றாக தெரியும்.


vivek
அக் 20, 2025 12:42

அதில் நீ ஒருவனா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை