வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அமைதி பூங்காவாக விளங்கிய மணிப்பூரை எதிர்க்கட்சிகள் வெளிநாட்டினருடன் சேர்ந்து சூழ்ச்சி செய்து சுடுகாடாக மாற்றிவிட்டார்கள்.
இம்பால்: மணிப்பூரில், பாதுகாப்புப் படையினரை வெளியேற்ற வலியுறுத்தி, பழங்குடியினர் நடத்திய திடீர் தாக்குதலில், போலீஸ் எஸ்.பி., படுகாயம் அடைந்தார். நிலைமையை கட்டுக்குள் வைக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, மெய்டி மற்றும் கூகி சமூகத்தினருக்கு இடையே, 2023 மே மாதம் மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு, கலவரமாக மாறியது. போராட்டம்
இதில், 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், கிழக்கு இம்பால் மாவட்டத்தில் முகாமிட்டுள்ள பாதுகாப்பு படையினரை திரும்பப் பெற வலியுறுத்தி சைபோல் கிராமத்தில், கூகி பழங்குடியினர் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 31ல், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்போக்பி மாவட்டத்தில் உள்ள எஸ்.பி., அலுவலகத்தை கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு முற்றுகையிட்டனர்.நள்ளிரவில், திடீரென வன்முறையில் இறங்கினர். துணை கமிஷனர் அலுவலகம் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தியவர்கள், பெட்ரோல் குண்டுகளை வீசியதால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இந்த தாக்குதலில், அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். போலீசார் குவிப்பு
இதில், போலீஸ் எஸ்.பி., பிரபாகர் மற்றும் போலீசார் காயம் அடைந்தனர். பல மணி நேர போராட்டத்துக்கு பின், வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், காங்போக்பி மாவட்டம் முழுதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, மாவட்டம் இடையே செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மணிப்பூர் விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளதாவது:கடந்த 600 நாட்களுக்கு மேலாக மணிப்பூர் பற்றி எரிகிறது. மாநிலத்தின் பல பகுதிகள், கிராமங்கள் அழிக்கப்பட்டதை செயற்கைக்கோள் படங்கள் தெளிவுப்படுத்தியுள்ளன. மீண்டும் அங்கு வன்முறை வெடித்துள்ளது. ஆனால், பிரதமர் இன்னும் மணிப்பூர் செல்லவில்லை. அது குறித்து அவர் வாய் திறக்கவில்லை. சுயநலம் காரணமாக, மணிப்பூரை பா.ஜ., எப்போதும் கொதிநிலையில் வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அமைதி பூங்காவாக விளங்கிய மணிப்பூரை எதிர்க்கட்சிகள் வெளிநாட்டினருடன் சேர்ந்து சூழ்ச்சி செய்து சுடுகாடாக மாற்றிவிட்டார்கள்.