உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் செயற்கை மழை பொழிய வைக்கும் முயற்சிக்கு பலன் இல்லை!

டில்லியில் செயற்கை மழை பொழிய வைக்கும் முயற்சிக்கு பலன் இல்லை!

புதுடில்லி: மேக விதைப்புக்கு பிறகும் டில்லி இன்னும் வறண்டே இருப்பதுக்கான காரணம் குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, கான்பூர் ஐஐடி இயக்குநர் மணிந்திர அகர்வால் விளக்கம் அளித்துள்ளனர்.டில்லியில் காற்று மாசு மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால் குழந்தைகள், முதியோர் மற்றும் நோயாளிகள் நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக அக்டோபர் முதல் ஜனவரி வரை காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vuinvcrv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 ஈரப்பதம் அண்டை மாநிலங்களில் பயிர் கழிவுகளை எரிப்பது, குளிர்காலத்தில் காற்றோட்டம் குறைவு போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்படுகிறது. இந்த சமயத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்த செயற்கை மழையை ஏற்படுத்த டில்லி அமைச்சரவை முடிவு செய்தது.கடந்த மே 7-ல், 3.21 கோடி ரூபாய் செலவில், ஐந்து செயற்கை மழை சோதனைகள் மேற்கொள்வதற்கான திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்தது. கடந்த வாரம் புராரி பகுதியின் மேல் இந்த சோதனை நடந்தது. 2வது முறையாக நேற்று டில்லி அரசு, ஐ.ஐ.டி., கான்பூருடன் இணைந்து டில்லியின் சில பகுதிகளில் செயற்கை மழைக்கான சோதனையை நடத்தியது. இருந்தாலும் மழை பொழியவில்லை.

ஈரப்பதம் இல்லை

இது குறித்து டில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் சர்தார் மஜீந்தர் சிங் சிர்சா கூறியதாவது: 10-15% ஈரப்பதம் உள்ள நிலையில் மேக விதைப்பு செய்ய முடியுமா என்பதைச் சரிபார்க்க நடத்தப்பட்டது. மேக விதைப்புக்குப் பிறகும் டில்லி இன்னும் வறண்டே உள்ளது. ஈரப்பதம் குறைவாக இருப்பதே காரணம். செயற்கை மழை சோதனை இதுவரை எந்த பலனைத் தரவில்லை. பொதுவாக, நமக்கு 50% க்கும் அதிகமான ஈரப்பதம் தேவை. ஐஐடி கான்பூர் இந்த பரிசோதனையை மேற்கொண்டது. ஐஐடி கான்பூர் நம்பிக்கையுடன் இருந்ததால், நாங்கள் அதைத் தொடர்ந்தோம். சோதனைகள் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

ஐஐடி இயக்குநர் சொல்வது என்ன?

கான்பூர் ஐஐடி இயக்குநர் மணிந்திர அகர்வால் கூறியதாவது: நாங்கள் மூன்று முறை மேக விதைப்பு சோதனை செய்தோம். தற்போது விமானம் மீரட்டுக்குத் திரும்பியது. இதுவரை மழை பெய்யவில்லை. எனவே, அந்த வகையில், இந்த சோதனை முழுமையாக வெற்றி பெறவில்லை, என்றார்.மொத்தம் மூன்று முறை மேக விதைப்பு முயற்சி நேற்று மேற்கொள்ளப்பட்டது. குட்டி விமானத்தில் சென்று மேகங்களின் மீது சில்வர் அயோடைடு எனப்படும் ரசாயனத்தை தூவி விட்டனர். இப்படி ஒவ்வொரு முறையும் விமானத்தில் சென்று ரசாயனத்தை தூவி விடுவதற்கு 64 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மூன்று முறை முயற்சித்தும் மழை இல்லாத நிலையில், அரசு அதிகாரிகளும் விஞ்ஞானிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

M. PALANIAPPAN, KERALA
அக் 29, 2025 16:12

இறைவன் நியதியை வேறு எந்த சக்தியாலும் மற்ற முடியாது, மழை பெய்ய வேண்டும் என்று இயற்க்கை முடிவு செய்தால் மட்டுமே மழை பெய்யும்


vbs manian
அக் 29, 2025 14:59

உலகில் பல இடங்களில் முயன்று தோல்வி கண்ட விஷயம். பண விரயம். சில்வர் iodaid ரசாயன கேண்டில்களை விமானத்தில் எடுத்து சென்று எரிக்கிறார்கள். இது மழை மேகங்கள் உருவாவதற்கு தேவையான கருப்பொருளை உற்பத்தி செய்யவில்லை. இயற்கையும் ஒத்துழைக்க வேண்டும்.


Ajrjunan
அக் 29, 2025 15:24

பாலைவன தேசமான அமீரகத்தில் சோதித்த அனைத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களிடம் கேட்டு பெறலாமே?


சத்யநாராயணன்
அக் 29, 2025 14:55

இதே முயற்சியை திமுக அரசு செய்திருந்தால் ஒவ்வொரு முயற்சிக்கும் 62 கோடி என்று கணக்கு காண்பித்து இருப்பார்கள் கொள்ளையடிக்க தெரிந்தவர்கள்


Ajrjunan
அக் 29, 2025 15:22

இப்ப பி ஜெ பி அரசு மட்டும் சும்மா இலவசமா முயற்சி செய்டாங்களா? தமிழக அரசு முயற்சி செய்ந்திருந்தா மழை பேய்ந்திருக்கும். பான்பராக் வாயன்கள் முயற்சி எச்சி துப்பியதுபோல் கூட இல்ல நாராயணா


அப்பாவி
அக் 29, 2025 14:45

டில்லிக்கு எத்தனை விமானங்கள் வந்து செல்கின்றன.. ஒவ்வொண்ணிலேயும் கொஞ்சம் கொஞ்சமா தூவி பாக்கலாமே. எதுக்கு ஐ.ஐ.டி அட்வைசெல்லாம்?


RAMESH KUMAR R V
அக் 29, 2025 14:35

செயற்கை மழை என்ன செயற்கை குடிநீரும் வருங்காலம் நாம் பார்க்கலாம்.


r ravichandran
அக் 29, 2025 12:48

நேற்று இரவு டெல்லியில் மழை பெய்ததாக செய்திகள் வருகின்றன.


Indian
அக் 29, 2025 12:39

பெய்யிற மழையை முறையாய் சேமிக்க வழி கிடையாது . இதுல செயற்கை மழை வேற ??


ஆரூர் ரங்
அக் 29, 2025 11:53

சென்னையில் 1970களிலேயே விமானம் மூலம் வெள்ளி அயோடைட் தெளித்து செயற்கை மழைக்கு முயற்சி நடந்ததாம். அதை விட கொடுமை. தி.மு.க ஆட்சியில் விமானம் மூலம் விவசாய நிலங்களுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் திட்டத்தை நிறைவேற்றுவதில் ஊழல் செய்தார்கள். முக்கிய பயனாளி யார் என்பதை அழுவாச்சி மகேஸ் அறிவார்.


அப்பாவி
அக் 29, 2025 11:21

இதுக்கு பதிலா யமுனா நதி தண்ணீரை ஹெலிகாப்டரில் தூக்கிச் சென்று ஊத்தியிருக்கலாம்.


Venugopal S
அக் 29, 2025 10:30

பாஜக ஆட்சியில் விஞ்ஞானம், தொழில்நுட்ப வளர்ச்சியின் லட்சணம் இது தான்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை