உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் கொட்டும் கனமழை; கவர்னர், முதல்வர் இல்லத்தில் புகுந்த வெள்ளம்

பீஹாரில் கொட்டும் கனமழை; கவர்னர், முதல்வர் இல்லத்தில் புகுந்த வெள்ளம்

பாட்னா: பீஹாரில் பெய்து வரும் கனமழையால், கவர்னர் மாளிகை, முதல்வர் இல்லத்தில் வெள்ளம் புகுந்தது.பீஹாரில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது. தொடரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் பாய்ந்தோடுகிறது. நேற்றைய தினம் மழை வலுக்க, தலைநகர் பாட்னா வெள்ளத்தில் சிக்கியது. முதல்வர், கவர்னர் இல்லங்களில் வெள்ள நீர் புகுந்தது.சாலைகள், குடியிருப்புகள் என எங்கும் வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.இதனிடையே கனமழை இன்றும் (ஜூலை 29) நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 27 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பையும் வானிலை மையம் வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூலை 29, 2025 12:11

பீஹாரில் பெய்து வரும் கனமழையால், கவர்னர் மாளிகை, முதல்வர் இல்லத்தில் வெள்ளம் புகுந்தது. இது மாதிரி பெரியதலைகளின் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தால்தான், அவர்களுக்கு மக்கள் படும் திண்டாட்டம் தெரியும். அப்பத்தான் ஏதாவது வெள்ளத்தடுப்பு நடவடிக்கை எடுப்பார்கள். வொவொரு மாநிலத்திலும் இப்படி கவர்னர், முதல்வர் மற்றும் ஒன்றுக்கும் லாயக்கில்லாத அமைச்சர்கள் வீட்டில் மழை வெள்ளம் புகவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை