உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னை அவமரியாதை செய்துவிட்டனர்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

என்னை அவமரியாதை செய்துவிட்டனர்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹார் தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை அவமரியாதை செய்துவிட்டார்கள் என பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார்.பீஹார் மாநிலம், முசாபர்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: சாத் பண்டிகை என்பது நாடகம் என்று காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் கூறியுள்ளனர். பீஹார் மக்கள் இந்த அவமானத்தை பல ஆண்டுகளாக மறக்க மாட்டார்கள். பீஹார் தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை அவமரியாதை செய்துவிட்டார்கள். சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bfw6otz1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஊழல், கொடுமை, தவறான ஆட்சி உள்ளிட்டவை தான் பீஹாரில் ஆர்ஜேடியின் காட்டாட்சி ராஜ்ஜியத்தின் ஐந்து அடையாளங்கள். ஆர்ஜேடி-காங்கிரஸ் உறவு தண்ணீர் மற்றும் எண்ணெய் போன்றது. அம்பேத்கரை காங்கிரஸ்-ஆர்ஜேடி தலைவர்கள் அவமதித்தனர். பீஹாரைக் கொள்ளையடிக்க, எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தைக் கைப்பற்ற ஆர்ஜேடி-காங்கிரஸ் ஒன்றிணைந்தது. பீஹாரில் காட்டாட்சி ராஜ்ஜியத்தின் போது ஆர்ஜேடி கட்சியினர் கொள்ளையடித்தனர். அவர்களது ஆட்சிக் காலத்தில் ஏராளமான குற்றச்சம்பவங்கள் நடந்தது. பீஹாரின் கலாசாரத்தை உலகின் ஒவ்வொரு மூலையிலும் பரப்புவது, மாநில வளர்ச்சியை உறுதி செய்வதற்கு தேஜ கூட்டணி அரசு முன்னுரிமை அளிக்கிறது. ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியினரால் ஒருபோதும் பீஹாரை வளர்ச்சியடையச் செய்ய முடியாது. அவர்களது ஆட்சியில் ஊழல் செழித்து வளர்ந்தது. ஏழைகளின் உரிமைகள் சூறையாடப்பட்டன. அதே நேரத்தில் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே செழித்து வளர்கின்றன. இவர்களால் பீஹார் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

naranam
அக் 31, 2025 07:16

இப்படி ராஹூல் பேசப் பேசத் தான் பிரதமருக்கு மவுசு கூடுது.. ஆனால் நாட்டின் பிரதம மந்திரி இந்த மாதிரி புலம்புவது எரிச்சலைத் தான் தருகிறது. மோடியின் கம்பீர பிம்பம் எங்கே என்றும் கேள்வி எழுகிறது.


Rathna
அக் 30, 2025 21:00

பேச பேச வோட்டு எண்ணிக்கை அதிகமாகும்.


V Venkatachalam, Chennai-87
அக் 30, 2025 20:44

காங்கிரஸை துடைத்து எறிய வேண்டுமென்றால், அன்னை என்கிற சோனியா, பப்பு ராவுல், இரும்பு மனுஷி இந்தியாவின் பேத்தி பிரியங்கா, திரை மறைவு ராப்பர்ட் வதேரா மேலும் 5000 கோடி மல்லிகார்ஜுன் கார்கே இவிங்களை நாடு கடத்தணும். இவிங்க சொத்துக்களை அரசு கஜானாவில் சேர்த்தப்புறம்.


ஈசன்
அக் 30, 2025 15:59

10 வருட உங்கள் ஆட்சியில் இந்த தீய சக்திகளை வேரோடு பிடுங்கி ஏறிந்திருக்க வேண்டாமா. உங்கள் ஆட்சியில் உங்களுடைய பொறுமை எரிச்சலடைய வைக்கிறது. பக்கத்து வீட்டுகாரர்களுடன் நல்ல பெயர் வாங்க வேண்டியது அவசியம் தான். ஆனால் வீட்டுக்குள் உள்ள அடங்கா பிடாரிகளையும் அடக்கி வையுங்கள்


ஜெய்ஹிந்த்புரம்
அக் 30, 2025 19:34

பெத்த வாசிங் மெசின் உந்தி.. அன்னி முரிக்கினி வாசிங் மெசின்லு கடகவச்சு..


abdul kareem
அக் 30, 2025 15:24

இன்னும்எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ...


V Venkatachalam, Chennai-87
அக் 30, 2025 20:53

எவ்வளவு முடியுமோ அவ்வளவு காலம் ஏமாற்றலாம். குடி மக்கள் தங்கள் சொந்தப் பொறுப்பில் ஏமாறாமல் இருந்துக்கோணும். மு கஸ் இடம் ஏமாறலாம். அது பெருமை.


ஆரூர் ரங்
அக் 30, 2025 15:22

இருபத்தொன்றாம் பக்க சகவாசம் இப்படிப் பேச வைத்திருக்கிறது. போகட்டும். விடுங்க.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 30, 2025 19:43

போஸ்டர் ஒட்டி மெடல் குத்தி விழா எடுத்து நம்ம காதிலே ரத்தம் வர வர அதை பெருமையா பேசி .. மறுபடியும் வோட்டு தான் கேப்பாய்ங்க.


Nathansamwi
அக் 30, 2025 15:15

இப்போ சாத் பூஜை கு யுனெஸ்கோ அங்கிகாரம் வாங்கி யாருக்கு லாபம் ?


V Venkatachalam, Chennai-87
அக் 30, 2025 20:49

ஈ வெ ராமசாமி நாயக்கர் படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஒரு வாடகை கட்டிடத்தில் மாட்டி போட்டோ எடுத்துக் கொண்டதால் என்ன பிரயோஜனம்?


முருகன்
அக் 30, 2025 14:32

இன்னொரு பத்து வருடத்திற்கு இப்படி தான்


vivek
அக் 30, 2025 16:44

மானம் கெட்ட கொத்தடிமைகள் அப்படிதான் முருகா


Kumar Kumzi
அக் 30, 2025 17:40

எப்போதும் நீ இன்பநிதிக்கும் போஸ்டர் தான் ஓட்டணும்


sengalipuram
அக் 30, 2025 14:17

ஒரு நாட்டின் பிரதமரை எதிர் கட்சி தலைவர் தரக்குறைவாக பேசியது, எதிர் கட்சி தலைவரின் தரத்தை வெளிப் படுத்துகிறது. பா ஜா க விற்க்கு இந்த பேச்சு வலு சேர்க்கும். எதிர் கட்சி தலைவருக்கு வயதுக்கு ஏற்ற பக்குவம் இல்லை. அவரை வழி நடத்த காங்கிரஸில் ஒரு தலைவரும் உடன்படவில்லை.


Abdul Rahim
அக் 30, 2025 14:52

எதிர்க்கட்சிதலைவரை பற்றியும் அவரது குடும்பம் பற்றியும் ஒரு நாட்டின் பிரதமரும் உள்துறை அமைச்சரும் தினமும் பழித்து பேசுவது பற்றி உங்கள் கருத்து என்னவோ ????


Abdul Rahim
அக் 30, 2025 14:09

அனுதாப ஓட்டுக்கு...


angbu ganesh
அக் 30, 2025 15:01

இந்தியாவில இருக்கீங்க தானே


வாய்மையே வெல்லும்
அக் 30, 2025 15:09

ரவுலு வெளிநாட்டுக்கு போயிட்டு அழுத மாதிரி யாரும் நாடகம் ஆடமாட்டங்க .. அப்துல் உங்க பித்தலாட்ட ஆட்டத்தை உலகமே பார்த்துட்டு இருக்கு. வெச்சு செய்வோம் ஜாக்கிரதை


Kumar Kumzi
அக் 30, 2025 17:42

பங்களாதேஸ் கள்ளக்குடியேறி ரோஹிங்கிய பிச்சைக்காரன் ஸ்பொட்டட்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை