உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அமைச்சரின் உறவினர் சுட்டுக்கொலை; பீஹாரில் அதிர்ச்சி

மத்திய அமைச்சரின் உறவினர் சுட்டுக்கொலை; பீஹாரில் அதிர்ச்சி

பாட்னா: பீஹாரில் தண்ணீர் பிரச்னையில் மத்திய அமைச்சரின் உறவினர், அவரது சகோதரரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீஹார் மாநிலம், பஹால்பூர் மாவட்டத்தில் மத்திய அமைச்சர் நித்யானந்த் ராயின் மருமகன் குடும்பத்தில் தண்ணீர் குழாய் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. விஸ்வஜித், ஜெய்ஜித் ஆகிய இரு அண்ணன், தம்பி இடையே எழுந்த இந்த மோதல், கைகலப்பாக மாறியது. இதில், ஜெய்ஜித் துப்பாக்கியால் சுட்டதில் விஸ்வஜித் சம்பவ இடத்திலேயே இறந்தார்.ஜெய் ஜித் ஆபத்தான நிலையில் பாகல்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரின் மருமகன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து எஸ்.பி., பிரோணா குமார் கூறியதாவது: இன்று காலை 7.30 மணியளவில் ஜகத்பூர் கிராமத்தில் இரண்டு சகோதரர்கள் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இந்த சம்பவத்தில், ஒரு சகோதரர் காயமடைந்தார், ஒருவர் மருத்துவமனையில் இறந்தார். இறந்தவரின் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. அந்த இரண்டு பேரும் விஸ்வஜீத் மற்றும் ஜெய்ஜீத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இருவரும் மத்திய அமைச்சரின் உறவினர்கள் என்று தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

T.sthivinayagam
மார் 20, 2025 22:24

சட்டம் ஒழுங்கு பற்றி பேசும் அண்ணாமலை பையாஜீக்கு இது தெரியாதா


Ramesh Sargam
மார் 20, 2025 21:06

நாட்டில் எங்கு நோக்கினும் தினம் தினம் கொலை, கொலை, பாலியல் வன்கொடுமை. ஏன்? குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதில்லை. நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் குற்றவாளிகளுக்கு அதிக ஆதரவாக உள்ளது. முதலில் நாட்டில் உள்ள நீதிமன்றங்களின் போக்கு மாறவேண்டும், இப்படிப்பட்ட குற்றங்கள் குறையவேண்டுமென்றால். இப்பொழுது சட்டத்தில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்படவேண்டும். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப சட்டங்கள் திருத்தி எழுதப்படவேண்டும்.


Yes your honor
மார் 20, 2025 22:30

முதலில் போலீசார் சட்டத்தை மதிக்க வேண்டும். போலீசாரே மதிக்காததால் திருடனும் மதிக்க மாட்டேன் என்கிறான். நாம் அம்பை தான் குறை சொல்கிறோம். முதலில் திருந்த வேண்டியது அம்பை எய்பவனே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை