உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்களுக்கு மாதம் ரூ.2,100 ஜார்க்கண்டில் பா.ஜ., வாக்குறுதி

பெண்களுக்கு மாதம் ரூ.2,100 ஜார்க்கண்டில் பா.ஜ., வாக்குறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: ''பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், ஜார்க்கண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். ஆனால், பழங்குடியினர் அதன் வரம்பிற்குள் கொண்டு வரப்பட மாட்டார்கள்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.இம்மாநில சட்டசபைக்கு, வரும் 13, 20ல் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 23ல் முடிவுகள் வெளியாகின்றன. இந்நிலையில், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:ஹேமந்த் சோரன் ஆட்சியில், அண்டை நாட்டவர்களின் ஊடுருவலால் ஜார்க்கண்ட் மக்கள் பாதுகாப்பு இன்றி தவிக்கின்றனர். பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல்காரர்களை தடுத்து நிறுத்துவோம். பழங்குடியின பெண்களை ஊடுருவல்காரர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். அவர்களின் நிலத்தை அபகரிக்கின்றனர். இதனால், பழங்குடியினத்தவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. இதை உடனடியாக தடுத்து நிறுத்தவில்லை எனில், ஜார்க்கண்டின் கலாசாரம், வேலை வாய்ப்பு, நிலம் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. தாஜா செய்யும் அரசியலுக்காக ஜார்க்கண்ட் அரசு எல்லை மீறி செயல்படுகிறது. லோஹர்தாகாவில் பக்தர்கள் தாக்கப்பட்டனர். ராமநவமியின் போது, கீர்த்தனைகள், பஜனைகளுக்கு தடை விதிக்கப்பட்டன. ராமநவமி ஊர்வலத்தில் கற்கள் வீசப்பட்டன. சாஹிப்கஞ்ச் மற்றும் ஜம்ஷெட்பூரில் கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன. இதற்காக மாநில அரசு வெட்கப்பட வேண்டும்.பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், ஜார்க்கண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். அதே நேரம், பழங்குடியினர் அதன் வரம்பிற்குள் வரமாட்டார்கள்.பெண்களுக்கு மாதம், 2,100 ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர்கள் 500 ரூபாய்க்கு வழங்கப்படும். தீபாவளி மற்றும் ரக் ஷா பந்தன் பண்டிகைகளின்போது ஆண்டுக்கு இரண்டு இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும். இளைஞர்களுக்கு 5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். வினாத்தாள் லீக் விவகாரத்தால் மாநில இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், குற்றவாளிகளை தலைகீழாக தொங்கவிடுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

500 ரூபாய்க்கு சிலிண்டர்

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் 500 ரூபாய்க்கு வழங்கப்படும். ஆண்டுக்கு இரண்டு இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் ஊடுருவல்காரர்களால் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு, பழங்குடியினரிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும் பழங்குடியினரை திருமணம் செய்யும் ஊடுருவல்காரர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, பழங்குடியினர் அந்தஸ்து வழங்கப்படாது பொது சிவில் சட்ட வரம்பில் இருந்து பழங்குடியினருக்கு விலக்கு அளிக்கப்படும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் அரசுத்துறைகளில், 2.87 லட்சம் பணியிடங்கள் வெளிப்படைத் தன்மையுடன் நிரப்பப்படும் அனைத்து தேர்வுகளுக்கான ஆண்டு அட்டவணை வெளியிடப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Mario
நவ 04, 2024 09:10

வாழ்க திராவிட மாடல்


INDIAN
நவ 04, 2024 08:24

தத்தி, பப்பு இப்படியெல்லாம் நீங்கள் அடைமொழி வைக்கலாம், உண்மையான தத்தி பப்பு என்பது யார் என்பது மக்களுக்கு தெரியும், தமிழகத்தில் இலவசங்களால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துவிடும் என்று கூறியவர்கள் இன்று அதையே காப்பியடிக்கிறார்கள் என்றால் யார் தத்தி ,


அப்புசாமி
நவ 04, 2024 07:39

எங்களுக்கு வாக்களியுங்க. இன்னும்.கொஞ்சமதிகமா பிச்சை போடறோம் ஹைன்.


Sakthi,sivagangai
நவ 04, 2024 12:47

ஏற்கனவே நீ அந்த பாஞ்சி லட்சத்துக்கு பிச்சை எடுத்துக்கிட்டுதான இருக்க?


Oviya Vijay
நவ 04, 2024 07:06

இலவசங்களினால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப் படும் என்று பெங்களூரு வந்து உங்கள் கட்சி வாயால் வடை சுடும் தலைவர் கூவ வேண்டியது... அதே கட்சியைச் சேர்ந்த நீங்கள் இன்னொரு இடத்தில் அதே இலவச திட்டங்களை ஆட்சி பிடிக்கும் நோக்கில் வாக்குறுதியாக கொடுக்க வேண்டியது... ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு பேச்சு...


Kasimani Baskaran
நவ 04, 2024 05:30

அந்நியர்கள் வருவதால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஜார்கண்டும் ஒன்று. சிபு சேரன் கோஷ்டி - கள்ளக்குடியேறிகளை பயன்படுத்தி வாக்கு வங்கியை நிரப்புகிறார்கள்.


Priyan Vadanad
நவ 04, 2024 03:24

கேவலம். தமிழ்நாட்டை மட்டமாக கருத்து போடும் புண்ணியவான்கள் இப்ப என்ன எழுதப்போகிறார்கள்?


Sakthi,sivagangai
நவ 04, 2024 07:07

கேவலம் உன்னைப் போன்று அப்பத்துக்கு மதம் மாறியவர்களால்தான் இந்த அவலம்.


மோகனசுந்தரம்
நவ 04, 2024 03:10

நம்முடைய மாண்புமிகு தத்தி கூறியதைப் போல் இந்த திருட்டு திராவிட அயோக்கிய மாடல் அகில இந்தியாவிலும் பரவி விட்டது. இந்த தத்திக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்


Smba
நவ 04, 2024 02:10

வேறவழி இல்ல திரவிட மாடலிண் வழி


Smba
நவ 04, 2024 02:10

வேறவழி இல்ல திரவிட மாடலிண் வழி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை