உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு: ஆதாரமில்லை என மறுப்பு

எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு: ஆதாரமில்லை என மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு ஆதரமில்லை எனக்கூறியுள்ள எடியூரப்பா, தேர்தல் ஆதாயத்திற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.பெங்களூருவின் சதாசிவ நகர் போலீஸ் ஸ்டேசனில், பெண் ஒருவர், மோசடி வழக்கு தொடர்பாக உதவி கேட்க சென்ற தனது 17 வயது மகளுக்கு, கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜ, மூத்த தலைவருமான எடியூரப்பா பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக எடியூரப்பா கூறியதாவது: லோக்சபா தேர்தல் நெருங்க உள்ளதால் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. உதவி கேட்டு வந்த பெண்ணுக்கு நிதியுதவி அளித்தேன். மோசடி வழக்கு தொடர்பாக அவர் உதவி கேட்டு வந்தார். ஆனால், சரியாக அவர் எந்த விவரமும் தெரிவிக்கவில்லை. இதனால், மனநிலை சரியில்லாதவராக இருக்கலாம் என அவர் மீது சந்தேகம் வந்தது இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Nagercoil Suresh
மார் 16, 2024 08:49

"மனநிலை சரியில்லாதவராக இருக்கலாம் என அவர் மீது சந்தேகம் வந்தது இவ்வாறு அவர் கூறினார்" ஒரு கட்டத்திற்கு மேல போனா மன நிலை சரியில்லாமல் போனதுபோலதான் இருக்கும், இது சகஜம் தான்...


Ramesh Sargam
மார் 15, 2024 23:53

இது நூற்றுக்கு நூறு சித்தராமையாவின் அற்பத்தனமான போக்கு.


தாமரை மலர்கிறது
மார் 15, 2024 22:49

கர்நாடகாவில் ஜெயிக்க காங்கிரஸ் நடத்தும் தேர்தல் நாடகம்.


anbu
மார் 15, 2024 21:38

வந்த பெண் எதுவும் சரியாகப் பேசவில்லை. எனவே வந்த விடயத்தை விட்டு தடுமாறி பேசியுள்ளது. அந்தப் பெண் ஏதோ திட்டத்துடன் வந்துள்ளது தெரிகிறது. அவருக்கும் சந்தேகம் வந்துள்ளது. இப்படித்தான் அமர்பிரசாத் ரெட்டிக்கும் திமுகவினர் பெண்ணை வைத்து வழக்குப் பதிவு செய்தனர். இப்போது எடியூரப்பாவுக்கும் அதே மாதிரி பெண் மூலம் நாடகம். தேர்தல் வரும் நேரம் இது போன்ற நாடகங்கள் அரங்கேறும்.


panneer selvam
மார் 15, 2024 18:56

81 years old guy is molesting 17 years old girl while her mother is standing outside , somehow it doe not fit in to film .


Duruvesan
மார் 15, 2024 16:00

தப்பு செய்யலைன்னு சொல்லல ஆதாரம் இல்லயாம்


venugopal s
மார் 15, 2024 15:35

சேர்ந்த இடம் அப்படி! எண்பத்தோரு வயது கிழம் இது!


Oviya Vijay
மார் 15, 2024 15:25

பாரதிய ஜல்ஸா கட்சியில இதைத் தானே எதிர்பார்க்க முடியும்... ஆனா இங்க அதுக்கும் முட்டு கொடுக்க ட்ரை பண்ற நெனச்சா தான் பரிதாபமா இருக்கு... பாவம்... பாதிக்கப்பட்ட பொண்ணு... இந்த சம்பவம் உண்மைன்னா கூட ஒத்துக் கொள்ள மனசு வராது... அது தான் கொடுமை...


Oviya Vijay
மார் 15, 2024 14:57

இதற்கு முட்டு கொடுக்க நினைக்கும் சங்கிகள் ஒவ்வொருவராக வரிசையில் வந்து கதறவும்... பார்க்கவே சந்தோஷமாக உள்ளது... தொடரட்டும் உங்கள் கதறல்...


Raj
மார் 15, 2024 17:03

அப்பிடின்னு ஒரு கொத்தடிமை தும்பி கதறுது


Palanisamy Sekar
மார் 15, 2024 14:15

பொதுவாகவே ஒருவரை பழிதீர்க்க அல்லது அவரது பெயரை கெடுக்க முதலில் எதிரிகள் செய்வது பெண்களை வைத்து பாலியல் புகார் சொல்வதுதான். அது உண்மைக்கு மாறாகவே இருந்தாலும் அப்படிதான் செய்வார்கள். அதன் பின்னர் அது பொய்யான குற்றச்சாட்டு என்று தீர்ப்பே வந்தாலும் அந்த புகாரை சொல்லி சொல்லியே கேவலம் செய்வார்கள். அதனைத்தான் காங்கிரஸ் செய்துள்ளது.


தமிழ்வேள்
மார் 15, 2024 17:10

பெண்களை வைத்து அவதூறு கிளப்புவது திமுக ஸ்டைல் ...அதை கூட்டணியிலுள்ள காங்கிரசும் அட்சரம் பிசகாமல் பின்பற்றுகிறது ...கேவலம் ....


SANKAR
மார் 15, 2024 17:12

Same done by BJP to Gogoi when he was about do deliver damning judgement in Raphael case.Gogoi got the clue and delivered " correct judgement"


மேலும் செய்திகள்









புதிய வீடியோ