உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன்னேற்றப்பாதையில் பி.எஸ்.என்.எல்.,; கடன் தொல்லை குறையுதுப்பா; பயனர் எண்ணிக்கை விர்ர்...!

முன்னேற்றப்பாதையில் பி.எஸ்.என்.எல்.,; கடன் தொல்லை குறையுதுப்பா; பயனர் எண்ணிக்கை விர்ர்...!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு சேவை நிறுவனம், பி.எஸ்.என்.எல்., கடந்த மூன்று ஆண்டுகளில் தனது கடனைக் குறைப்பதில் முன்னேற்றம் அடைந்துள்ளது. பயனர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் போன்ற முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கட்டண உயர்வைத் தொடர்ந்து பி.எஸ்.என்.எல்., சேவைக்கு வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. அதற்குத் தகுந்தபடி, பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் குறைந்த விலையில் திட்டங்களை வழங்குகிறது. கடந்த காலங்களில் கழுத்தை நெரிக்கும் வகையில் இருந்த கடன் தொகையை குறைப்பதில், பி.எஸ்.என்.எல்., கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது: பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு, கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி கடன் ரூ.40,400 கோடியாக இருந்தது. 2 ஆண்டுகளில், கடந்த 2024ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி ரூ.23,297 கோடியாக குறைந்துள்ளது.2025-26ம் நிதியாண்டில் ரூ.28,476 கோடி வருவாய் இலக்கு நிர்ணயித்துள்ளது. கடனைக் குறைப்பதுடன், பல ஆண்டுகளில் முதல் முறையாக, நிறுவனம் அதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் கண்டுள்ளது. 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். 4G மற்றும் 5G சேவைகளை இன்னும் முழுமையாக வெளியிடவில்லை. அக்டோபர் 31ம் தேதி 2024ம் ஆண்டு வரை மொத்தம் 50,708 4G தளங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஏற்கனவே, 41,957 தளங்கள் செயல்படுகின்றன. 5ஜி சேவையை அறிமுகப்படுத்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பி.எஸ்.என்.எல்., மீட்சிக்கு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

T ANANTHA BABU
நவ 30, 2024 01:25

திரம்பட செயல்பட பிஸ்னல்-க்கு எங்கள் வாழ்த்துக்கள்


Subash BV
நவ 28, 2024 18:55

YET IN GOVT HANDS. LAZIEST GUYS ON EARTH. BE ALERT.


K Raveendiran Nair
நவ 28, 2024 14:42

பிஎஸ்என்எல் க்கு எனது வாழ்த்துக்கள்


RAMAKRISHNAN NATESAN
நவ 28, 2024 14:31

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாளேடும், இன்றைய துக்லக் ஆசிரியராக இருக்கும் குருமூர்த்தியும் பி எஸ் என் எல் இணைப்புக்களை தனியார் தொலைக்காட்சிக்கு திருட்டுத்தனமாகப்பெற்ற ஒரு மாஜி அமைச்சர் மீது நடந்துவந்த வழக்கில் ஆதாரங்களுடன் மனு அளித்தார்கள்... அதே நாளேட்டில் முறைகேடு எவ்வாறு நடைபெற்றது என்று கட்டுரை கூட வெளிவந்தது... இன்றும் கூட அந்த கேபிள்கள் சென்னை போட்கிளப் பகுதியில் அகற்றப் படவில்லை ..... ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை, இவர்களால் அந்த மாஜியை தொட்டுப் பார்க்கவும் முடியவில்லை ....


Barakat Ali
நவ 28, 2024 13:41

பாஜக அரசு பி எஸ் என் எல் க்கு தேவையான முக்கியத்துவம் கொடுத்து வருகிறது... பி எஸ் என் எல் ஊழியர்கள் பிரச்னைகளை சரி செய்ய வேண்டியிருந்தால் அதைச் செய்துவிட்டு அகன்று விடுகிறார்கள்.... பணம் கேட்டு தற்போதெல்லாம் தலையைச் சொறிவதில்லை ..... நல்ல மாற்றம்தான் .....


visu
நவ 28, 2024 19:47

அதற்கு காரணம் அவையெல்லாம் தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள்


Barakat Ali
நவ 28, 2024 13:38

பி எஸ் என் எல் இணைப்புக்களைத் தங்களது குடும்பத் தொலைக்காட்சிக்குப் பயன்படுத்திய திருடர்கள் தப்பித்து வருகிறார்கள் ..... பாஜக ஆட்சியிலும் ......


Rajarajan
நவ 28, 2024 13:36

நிர்வாக செலவுகள் குறைந்ததே, கடன் குறைய காரணம். இப்படி அரசுதுறைகளை சீரமைத்தால், எவ்வளவு கோடி மிச்சம். விலைவாசி / வரிசுமை குறையும். நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உபயோகித்தால், நாடு விரைவில் வளர்ச்சி அடையும். உண்மை தானே ?


visu
நவ 28, 2024 15:57

காலையில் பிஸ்னல் அலுவலகம் சென்றேன் 10 20 ,மணிக்கு பலரும் இருக்கையில் இல்லை இதுதான் அவர்கள் வேலை செய்யும் லட்சணம் தவிர ஒவ்வொரு வேலைக்கும் இன்னமும் தேவையற்ற தனி ஊழியர்கள்


Arun kumar
நவ 28, 2024 13:21

மாதம் 94 ரூபாய்க்கு நெட்டு + பேசிக்கலாம் 200 மினிட்ஸ் ஆவது பிஎஸ்என்எல் இருக்கு, நிறைய பேரு பிஎஸ்என்எல் தப்பா பேசுறீங்க இது வந்து ஏழைகளுக்காக உள்ளது, நிறைய காசு உள்ளவனுக்கு ஓகே கிராமத்துல 100 ரூபாய் கூட ரீசார்ஜ் பண்ண முடியாதவங்க இருக்காங்க


Arun kumar
நவ 28, 2024 13:16

நிறைய பேரு bsnl தப்பா பேசுறீங்க, bsnl ஏழைகளுக்காக உள்ளது, நிறைய காசு உள்ளவனுக்கு ஓகே, கிராமத்துல 100 ரூபாய் கூட ரீசார்ஜ் பண்ண முடியாதவங்க இருக்காங்க,மாதம் 94 ரூபாய்க்கு நெட்டு கொஞ்சம் பேசிக்கலாம் 200 மினிட்ஸ் ஆவது bsnl இருக்கு


visu
நவ 28, 2024 19:46

ஹ்ம்ம் 180 ரூபாய்க்கு ரீ–சார்ஜ் செய்தால் 6 மாதம் பயன்படுத்தலாம் என்று இருந்தது இன்று 107 ரூபாய்–க்கு 35 நாள் என்ற அளவிற்கு குறைத்துவிட்டார்கள் . 180 ரூபாய் 6 மாதம் திட்டம் வேண்டுமானால் ஏழைகளுக்கு பயன்படலாம் .இதில் கவனிக்க வேண்டியது பிஎஸ்என்எல் மக்கள் வரிப்பணத்தில் நடக்கிறது.மற்றவை அவங்க சொந்த காச போட்டு தொழில் பண்ணுபவர்கள்


S.Martin Manoj
நவ 28, 2024 13:03

எஜமான் அம்பானியின் வளர்ச்சிக்காக BSNL ஐ ஒழிதுகட்டியதே பிஜேபி தான்


RAMAKRISHNAN NATESAN
நவ 28, 2024 14:12

நீங்கள் சொல்வது உண்மையென்றால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் BSNL நஷ்டத்தில் இயங்கியிருக்கக் கூடாதே?? தவிர BSNL ஐ நஷ்டத்தில் கிடத்தி வைக்கத்தானே டூ ஜி தனியாருக்கு முறைகேடாக திறந்து வைக்கப்பட்டது? அதுவும் உரிமங்கள் கொடுத்த நாளுக்கு பத்தாண்டுகள் முந்தைய ரேட் வைத்து..... விஷயம் தெரியாமல் பிஜேபி மீது குறை சொல்வது திராவிடக் கூமுட்டைகளின் வழக்கம் .....


sankar
நவ 28, 2024 14:32

இருநூறு தம்பி - கம்பெனி இப்ப லாபம் - நீ சொல்வதை எல்லாம் ஒருவனும் காது கொடுக்கமாட்டான்


S.Martin Manoj
நவ 28, 2024 16:36

Bsnl ன் வரலாறு தெரியாமல் பேசக்கூடாது 2014 வரை இந்நிறுவனம் லாபகரமான நிறுவனமாகவே இருந்தது அதாவது திரு வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக்காலம் தொட்டு 2014 வரை ,அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு மோடி அவர்கள் 4 ஜி கான உபகரணம் எதையும் அம்பானிக்காக எஜமான் விசுவாசம்வாங்கவில்லை என்பதுதான் உண்மை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை