உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜன.,31ல் பார்லியில் உரையாற்றுகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

ஜன.,31ல் பார்லியில் உரையாற்றுகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜன.,31ம் தேதி துவங்குகிறது. அன்றைய தினம் பார்லிமென்டின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 31ல் துவங்குகிறது. அன்றைய தினம் லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்., 1ல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியானது, பிப்ரவரி 13ம் தேதி நிறைவு பெறும். கூட்டத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் மோடி பதில் அளிப்பார். பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிப்பார்.பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி, மார்ச் 10ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும். கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு, ஜனவரி 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தரும்படி அரசு தரப்பில் எதிர்க்கட்சிகளிடம் வலியுறுத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

guna
ஜன 29, 2025 08:37

ஜனாதிபதி மேல.தனி விமர்சனம் செய்ய உனக்கு என்ன அருகதை இருக்கு


Narayanan Muthu
ஜன 28, 2025 21:42

தேவை இல்லாத ஒரு சம்பிரதாயம். இதனால் எந்த பயனும் இல்லை. பார்லியில் உரையாற்றுகிறார் என்பது அலங்கார பொம்மையின் அரசின் விளம்பர பிரச்சாரம் மட்டுமே.


vishu
ஜன 28, 2025 22:39

laughing stocks


V வைகுண்டேஸ்வரன்
ஜன 28, 2025 21:11

இங்க பாரு, ஒண்ணு சொந்தமா கருத்து போடு, இல்லையா என் கருத்துக்கு விமர்சனம் போடு. அதை விட்டு விட்டு அறிவுகெட்டத் தனமா என் மேல் தனிமனித விமர்சனம் எழுதாதே. பைத்தியக்காரத்தனமா இருக்கு. பாஜக விற்கு எதிராக எழுதினால் அவன் கொத்தடிமை யா? அப்போ நீ யாரு?? நீ பாஜக கொத்தடிமை தானே?. சொந்த மூளை இல்லவே இல்லியா??


K.n. Dhasarathan
ஜன 28, 2025 20:53

பாவம், பட்டியல் இனத்தில் இருந்து வந்து பொம்மையாகி போனார், மணிப்பூரில் மலைவாழ் , மற்றும் பட்டியல் இந படுகொலைகளுக்கு ஒரு வார்த்தை பேசவில்லை நமது பொம்மை சனாதிபதி பொய் ஜே பி யினருக்கு அவர் ஒரு அடையாளம், அவ்வளவுதான், மற்றபடி கோயிலுக்கு உள்ளே அஸ்வினி வைஷ்ணவ போகும்போது இவரை வெளியே நிறுத்தி விட்டார்கள், புதிய பாராளுமன்ற திறப்பு ஒரு அழைப்பு இல்லை, ராமர் கோயில் திறந்ததும் வேறு யாரோ, ஆனாலும் அவரது பொறுமையை பாராட்டுகிறேன்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 28, 2025 15:42

உரையாற்றுகிறார் அல்ல, கட்டுரை வாசிக்கப் போகிறார். அதாவது ஒன்றிய அரசு எழுதிக் கொடுத்ததை ஜனாதிபதி படிக்கப் போகிறார். இது தான் மரபு. இதே மாதிரி, தமிழ் நாடு அரசு எழுதிக் கொடுப்பதை வாசிக்கக் கூட திராணி இல்லாத ஒரு ஜென்மம் இங்கே இருக்கிறது. ஜகஜகாநந்தா ஆசிரமத்துக்கெல்லாம் போய் அரசியல் பண்ணிக்கிட்டிருக்கு.


guna
ஜன 28, 2025 17:26

வைகுண்டம் , உனக்கு ஒரு கணக்கு...89 6 எவ்ளோ...95 என்று சொன்னா நீ கொத்தடிமை கிடையாது....97 என்று சொன்னால் நீ தான் தலை சிறந்த திராவிட கொத்தடிமை....பதில் சொல்லு பாப்போம்...சந்தேகம் இருந்தா யூடியூப் பாரும் அய்யா


A.C.VALLIAPPAN
ஜன 28, 2025 17:46

CHIEF MINISTER SAID 2500+1500 IS 5000 if you write you will ready any body educated person IAS cadre will not ready rs.200 take and go to tasmac and repeat same


Oviya Vijay
ஜன 28, 2025 14:30

ஒவ்வொரு மாநிலத்துக்கும் கவர்னர் என்பவர் எப்படி ரப்பர் ஸ்டாம்போ, அதே போல் இந்தியாவை பொறுத்தவரையில் குடியரசுத் தலைவர் என்பவர் மத்திய அரசின் ஒரு தலையாட்டு பொம்மை. அவ்வளவே... மத்திய அரசால் என்ன எழுதிக் கொடுக்கப்படுகிறதோ அதை அப்படியே வாசிப்பது ஒன்றே அவரது வேலை. எதிர் கேள்வி கூட கேட்க முடியாத ஒரு அலங்கார சம்பிரதாயப் பதவி அது.


vivek
ஜன 28, 2025 17:45

இங்கன ஒரு துண்டு சீட்டு.....அங்கன ஒரு துண்டு சீட்டு...சரியா போச்சு...கெளம்பு....கெலம்புபு


முக்கிய வீடியோ