வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கெசரே கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் கிட்டத்தட்ட 20 கோடியா ? அம்மா , இது தெரிஞ்சிருந்தா நானும் அந்த கிராமத்துக்கு ரொம்ப முன்னாடியே போய், எப்படியானும் ஒரு ஏக்கர் நிலமாவது வாங்கியிருப்பேனே கடன் வாங்கியாவது ....... வடை போச்சே
"வீட்டுமனைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி, முடாவுக்கு என் மனைவி கடிதம் எழுதி இருப்பது ஆச்சரியமாக உள்ளது..." அப்படின்னு சித்தராமையா சொல்றது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது ... சிவாஜி கணேசன் பாடின மாதிரி "அவரா சொன்னார் இருக்காது ... அப்படி எதுவும் நடக்காது ... நடக்கவும் கூடாது .... நம்ப முடியவில்லை ... இல்லை .... இல்லை... "
பிற்காலத்தில் அந்த மனைகளை விற்கும்போதும், பத்திரவு பதிவு செய்யும்போதும் தெளிவு இருக்கவேண்டும், யார் யார் வாங்குகிறார்கள் என்று. மீண்டும் சித்துவோ, அவரின் மனைவியோ, அல்லது அவர்கள் குடும்பத்தினரோ அதை வாங்குகிறீர்களா என்று கண்காணிக்கவேண்டும்.
சட்டத்தை வளைத்து பெறப் பட்ட சொத்து க்களை வழக்கு நிலுவையில் இருக்கும்போது சொத்து பதிவாளர்கள் சொத்து பதிவை ரத்து செய்வது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த செயலும் சித்தராமையா வற்புறுத்தலின் பின் அணியில் இருப்பதாக தெரிகிறது. இதனையும் கருத்தில் கொண்டு அமுலாக்க துறை மற்றும் லோக அயுக்த செயல் படவேண்டும்.
மூடா வழக்கில் மூட முடியாமல் மாட்டிக்கொண்டு முழிக்கும் சித்து பதினான்கு மனைகளை திருப்பி கொடுத்தால் மட்டும் போதாது தான் வகிக்கும் ஊழல் அரசிலிருந்து விடுபட்டு நிரபராதி என்று நிறுபிக்கவும் வேண்டும் மேலும் விரைவில் கார்கேக்கும் இனி நில அபரகிப்பு ஆபத்து வர இருக்கிறது அவர்க்கும் இதே போன்று நில அபகரிப்பு வழக்கு விரைவில் வரும் அவரும் கட்சி பதவியை உதறி தள்ள வேண்டும்
கூட்டணி தர்மத்தை எப்படியாவது காப்பாத்தணும் அவங்க கொள்கைதான் எங்க கொள்கையும். எப்பிடி செந்தி பாலாஜி அவரு வாங்கின பணத்தையெல்லாம் கொடுத்துட்டேன் ஆளை விடுங்கடா சாமின்னு தப்பிக்கலாம்னு பாத்தாரு ஆனா அப்படியெல்லாம் தப்பிக்க முடியாதுன்னு தெரிஞ்சி போச்சி இங்கேயும் இவரு ஆட்டைய போட்ட நிலத்தெல்லாம் திருப்பி குடுத்துட்றேன் நானே முதல் மந்தியா இருந்துகிறேன்னு சொல்றாரு பாக்கலாம் சட்டம் என்ன சொல்லுதுன்னு ஆனா இது அசல் கலப்பிடமில்லாத அக்மார்க் திராவிட மாடல் நிலைப்பாடு ஆகும்
இங்கே வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து தப்பிக்க பார்த்தார் செந்தில் பாலாஜி. அதேபோல் சித்தராமையா மனைவியும் செய்துள்ளார். திருடிவிட்டு மாட்டிக்கொண்ட பிறகு திருடியதை திருப்பி கொடுத்தால் போதும். எல்லா திருடர்களும் வெளியே வந்த விடலாம். இதுதான் நீதிமன்றம் எதிர்பார்க்கிறதா. சட்டம் அனைவருக்கும் சமம் தானே
இது நம்ம பாலாஜி கேஸ் போலவே இருக்கே. லஞ்சம் வாங்கிட்டு திருப்பி கொடுத்தால் தண்டனை கிடையாதா?