உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சி.பி.எஸ்.இ., 8ம் வகுப்பு புதிய பாட புத்தகம்: பாபர், அக்பர் அட்டூழியங்கள் விவரிப்பு

சி.பி.எஸ்.இ., 8ம் வகுப்பு புதிய பாட புத்தகம்: பாபர், அக்பர் அட்டூழியங்கள் விவரிப்பு

புதுடில்லி : சி.பி.எஸ்.இ., 8ம் வகுப்புக்கு புதிதாக வெளியிடப்பட்டுள்ள சமூக அறிவியல் பாட புத்தகத்தில், டில்லி சுல்தான் மற்றும் முகலாயர்கள் ஹிந்துக்களுக்கு எதிராக நிகழ்த்திய அட்டூழியங்கள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.பள்ளி சமூக அறிவியல் பாட புத்தகங்களில் முகலாயர்கள், சுல்தான்கள் உள்ளிட்ட முஸ்லிம் மன்னர்கள் குறித்த பாடங்களில், அவர்கள் கட்டிய வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள், வென்ற போர்கள் குறித்து உயர்வான கருத்துக்கள் மட்டுமே இதுவரை இடம் பெற்றுவந்தன.

கொடுமைகள்

இந்நிலையில், சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பள்ளிகளின், 8ம் வகுப்புக்கான புதிய சமூக அறிவியல் பாட புத்தகத்தை என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சமீபத்தில் தயாரித்து வெளியிட்டுள்ளது.அதில், அக்பர், பாபர், அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள் விவரிக்கப்பட்டுள்ளன.'எக்ஸ்ப்ளோரிங் சொசைட்டி: இந்தியா அண்டு பியாண்ட்' என்ற தலைப்பில் வெளியாகி உள்ள இந்த புத்தகத்தில், 'வரலாற்றின் சில இருண்ட பக்கங்கள்' என்ற சிறப்பு குறிப்புடன் சில பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.அதில், டில்லி சுல்தான்களின் எழுச்சி, வீழ்ச்சி பற்றியும் அவர்களை எதிர்த்து நின்ற விஜயநகர பேரரசு, மராட்டியர்கள் மற்றும் சீக்கியர்களின் எழுச்சி பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. ஹிந்துக்களுக்கு எதிராக மாலிக் கபூர் செயல்பட்டதாகவும், அவர் மதுரை, ஸ்ரீரங்கம், சிதம்பரம் கோவில்களை அழித்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்சி கொடூரம்

முதல் முகலாய மன்னரான பாபர் மக்களை அழித்து, அவர்களின் மண்டை ஓடுகள் மீது தன் சாம்ராஜ்யத்தை நிறுவியதாக விவரிக்கப்பட்டுள்ளது. 'அக்பரின் ஆட்சி கொடூரமும், சகிப்புத்தன்மையும் கலந்ததாக இருந்தது. கோவில்கள் சூறையாடப்பட்டன. ராஜஸ்தானின் சித்தோர்கரில், 30,000 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கோவில்கள், குருத்வாராக்களை அழித்தவர் அவுரங்கசீப்' என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம், இந்த வரலாற்று நிகழ்வுகளுக்கும், தற்போது இருக்கும் சமூகங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற முன்னெச்சரிக்கை வாசகமும் அந்த பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ஆரூர் ரங்
ஜூலை 17, 2025 11:40

ஆங்கிலேயர்கள் நம்மை சுரண்டி தங்களது நாட்டை வல்லரசாக ஆக்கியது, எதிர்த்து கேள்வியெழுப்பின தலைவர்களை சிறையில் அடைத்தது போன்றவற்றை வரலாற்றில் சேர்த்தபோது எதிர்காத முஸ்லிம் தலைவர்கள் இப்போது முகலாயர்கள் செய்த அட்டூழியங்களை பாடத்தில் சேர்த்ததை கண்டிக்கிறார்கள். இரட்டை நிலைப்பாடு.


Srinivasan Srisailam Chennai
ஜூலை 17, 2025 06:06

இந்திய சுதந்திரம் பெற்றதற்கு பிறகு வந்த கல்வித்துறை அமைச்சர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களாக இருந்ததனால் அவர்கள் முகலாயர்களையும் பிரிட்டிஷர்களையும் உயர்த்தியே படங்கள் அமைத்து இருந்தனர் அந்த நிலை இன்று மாற்றப்படுகிறது உண்மையான வரலாறு எழுதப்படுகிறது. இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் மதம் மாற்றப்பட்டவர்கள் அவர்களுக்கும் அன்றைக்கு கொடுங்கோல் ஆட்சி செய்த முகலாயர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை


ramani
ஜூலை 17, 2025 06:04

உண்மை சரித்திரம் தானே. பாடப்புத்தகத்தில் சேர்ந்திருப்பது தவறில்லை.


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 17, 2025 05:31

அட இப்படியாவது தென்னகத்தை பற்றி ஓரிரு வரிகள் வந்துள்ளனவே தென்னக மன்னர்கள் குறித்து விரிவாக எப்போது சிபிஇசி பாடத்திட்டத்தில் பாடங்கள் சேர்க்கப்படும் ?? தமிழர்கள் நாகரீகமான கீழடி குறித்து எப்போது பாடத்திட்டத்தில் சேர்ப்பீர்கள் ????


MARUTHU PANDIAR
ஜூலை 17, 2025 10:56

கீழடி சமாச்சாரத்துக்கு மிஞ்சின மேட்டர் இப்போ நாட்டுல எதுவும் இல்ல. லஞ்சம் வாங்கிக்கொண்ட பின்பு கூட கொள்முதல் செய்த பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டை ஒரு தர்ப்பை ,சிமெண்ட் பிளாட்பாரமுக்கு கூட வழி இல்லாமல் வெட்ட வெளியில் மழையில் நனைந்து நாற்றாக மாறும் மேட்டர், வருடக்கணக்கில் தூர் வாரப்படாமல் ஆகாயத்தாமரையும் குப்பை கழிவுகளும் மண்டிக்கிடக்கும் நீர்நிலைகள் சுருங்கி மழை நீரெல்லாம் கடலுக்கு செல்கிறது. இப்போ கீழடி, எழுதுகோல் சிலை, மணிமண்டபம் இவை தான் டாப் பிரியரிட்டி


Indhuindian
ஜூலை 17, 2025 05:12

Great Better late than never. The distorted and politically motivated history of the leftist historians have to be rewritten and correctly portrayed so that the new generation would clearly sift between the chalk and the cheese


நிக்கோல்தாம்சன்
ஜூலை 17, 2025 04:56

இவர்களோடு திப்பு சுல்தானின் பெயரையும் சேர்க்காமல் எப்படி விட்டிங்


நிக்கோல்தாம்சன்
ஜூலை 17, 2025 04:55

நெபொடிசா மன்னர்களின் விஞ்ஞான ஊழல்களையும் பாடப்புத்தகத்தில் சொல்லுங்க


Mani . V
ஜூலை 17, 2025 04:50

அத்துடன் ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் தந்தை கருணாநிதி வரலாறையும் சேர்த்து இருக்கலாம்.


Kasimani Baskaran
ஜூலை 17, 2025 03:49

அருமை. சிக்குலர் இந்துக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது.


MARUTHU PANDIAR
ஜூலை 17, 2025 02:44

அன்றைக்கு கத்தி முனையில் நேரடியாக ஆட்சி செய்தவர்கள் இன்றைக்கு ஜனநாயகத்தின் மூலமும் ஆட்சி செய்கிறார்கள் என்று மக்கள் கூறுகிறார்கள். கத்தி முனையில் சித்ரவதைக்கு ஆளாகி மதம் மாறியவர்கள் அதை உணராமல் இன்று எப்படியோ காரியங்கள் செய்வதாக மக்கள் கூறுகிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை