உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பருப்பு விலையை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல்

பருப்பு விலையை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மொத்த சந்தையில், பருப்பு வகைகளின் விலை குறைந்துள்ள நிலையில், சில்லரை விற்பனை விலையை குறைக்கும்படி, சில்லரை வியாபாரிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.துவரம் பருப்பு, உளுந்து, கடலை பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளின் விலை, மொத்த சந்தையில், 5 - 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஆனாலும், சில்லரை விற்பனை விலை குறையவில்லை. இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுஉள்ளதாவது:பருப்பு வகைகளின் விளைச்சல் இந்தாண்டு மிகச் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேவையான அளவுக்கு இறக்குமதியும் செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த விலை கடந்த சில மாதங்களில், 5 - 20 சதவீதம் வரை குறைந்துள்ளது.அதே நேரத்தில், சில்லரை விலை குறைய வில்லை. இது தொடர்பாக, சில்லரை விற்பனை தொழில் துறையினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. உடனடியாக சில்லரை விற்பனை விலையை குறைக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அவ்வாறு குறையாவிட்டால், குறைந்த விலையிலான, 'பாரத்' பிராண்டு பருப்பு வகைகளின் விற்பனையை மத்திய அரசு அதிகரிக்கும் என, கூறப்பட்டுள்ளது. இதனால், அடுத்த சில நாட்களில் பருப்பு வகைகளின் விலை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
டிச 24, 2024 17:31

காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்த உற்பத்தி பாதிப்பால் ஏற்படும் விலையுயர்வுக்கு சில்லறை விற்பனையாளர்களை வம்புக்கு இழுப்பது தவறு. பாரதம் போன்ற பெரிய நாட்டின் தேவைக்கேற்றளவுக்கு உணவுப்பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்க எந்த நாடாலும் முடியாது.


Dharmavaan
டிச 24, 2024 10:23

ஜெயா செய்தது போல கலப்பு பொருளாதாரமே வழி .போட்டிக்கு அரசு குறைந்த விலையில் விற்க வேண்டும்


பாமரன்
டிச 24, 2024 08:12

எங்க உத்தரவு போட்டு கண்கானிக்கனுமோ அங்கே கெஞ்சறாங்க... எங்க கண்கானிக்கனுமோ அங்கே அதிகாரம் பண்றானுவ... என்னா டிசைனோ... நிம்மிகிட்ட சொல்லி பெஷல் டேக்ஸ் வரப்போதுன்னு சொல்ல சொன்னால் போதும்... அவாத்துலேயும் சாப்பிடும் ஐட்டம்... தெரியாதுன்னு சொல்லா மாட்டா...


Dharmavaan
டிச 24, 2024 10:21

கண்காணிக்க செலவு என்ன .அவன் லஞ்சம் வாங்கி விட்டால் என்ன செய்ய


Dharmavaan
டிச 24, 2024 07:20

எல்லா உணவு பொருளுக்கும் அரசு இதை செய்ய வேண்டும்.. விலை நிரனயம் அரசே செய்ய வேண்டும் அப்போது பற்றாக்குறை இருக்காது. சம்பளமும் ஏற்ற வேண்டாம் பண வீக்கம் இருக்காது


நிக்கோல்தாம்சன்
டிச 24, 2024 05:58

சீக்கிரம் இதனை செய்யுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை