உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பணி தொடரும்: செயற்குழுக் கூட்டத்தில் கார்கே பேச்சு

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பணி தொடரும்: செயற்குழுக் கூட்டத்தில் கார்கே பேச்சு

புதுடில்லி: டில்லியில் நடந்த காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டத்தில், சோனியா, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பணி தொடரும் என செயற்குழுக் கூட்டத்தில் கார்கே பேசினார்.டில்லியில் தனியார் ஹோட்டலில் இன்று (ஜூன் 08) காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் முடிவுகள், அரசியல் வியூகங்கள், எதிர்க்கட்சி தலைவர் பதவி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. லோக்சபா தேர்தலுக்கு பிறகு, முதல்முறையாக செயற்குழு கூட்டத்தை காங்கிரஸ் கட்சி கூட்டியுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gef0aasa&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

உழைப்பும்.....! உறுதியும்.....!

கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் சோனியா, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜெயராம் ரமேஷ், ராகுல், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் , மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கார்கே பேசியதாவது:பொருளாதார ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட பிரச்னைகளை மக்கள் பிரச்னைகளாக மாற்றினார் ராகுல். கடின உழைப்பும், உறுதியும் இருந்தால் பெரிய எதிரிகளை வீழ்த்த முடியும். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நமது பணி தொடரும். காங்கிரசுக்கு பாதகமான முடிவுகள் வந்த மாநிலங்களில் நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

ஒற்றுமை

பார்லிமென்டிற்கு வெளியேயும் நமது இண்டியா கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையை தொடர வேண்டும். நாம் அனைவரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும். அதேநேரம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். காங்கிரசுக்கு பாதகமான முடிவுகள் வந்த மாநிலங்களில் நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 10 ஆண்டு கால பா.ஜ.,வின் பிரிவினை, வெறுப்பு அரசியலை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர். எங்கள் மீது நம்பிக்கை வெளிப்படுத்தியதால் சர்வாதிகார சக்திகளுக்கு மக்கள் பதிலடி தந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

140 கோடி மக்கள் விருப்பம்

கூட்டத்தில் பங்கேற்க வந்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நிருபர்கள் சந்திப்பில், ''எங்கள் விருப்பமும், 140 கோடி மக்களின் விருப்பமும் ஒன்று தான். காங்கிரஸ் எம்.பி., ராகுல் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்க வேண்டும்” என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

theruvasagan
ஜூன் 08, 2024 17:47

சந்தடி சாக்குல அடிச்சு விட்டாரையா ரேவந்த் ரெட்டி. 140 கோடி மக்களோட விருப்பம் ராகுல் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்பதேவாம். அதாவது. அவர் ஆளும் கட்சித் தலைவராவது யாருக்கும் விருப்பமில்லை.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 08, 2024 17:01

நடைப்பயணத்தைச் சொல்றாரு ...


சிவம்
ஜூன் 08, 2024 16:11

ஒரு குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய், மாதாமாதம் 8500 ரூபாய் என்று நடக்கவே நடக்காத வாக்குறுதியை கொடுத்து.... . இது என்ன மாதிரியான பிழைப்பு. ஒன்று காங்கிரஸ் ஆட்சியில் நடந்த சாதனைகளை சொல்லு. அல்லது பிஜேபி ஆட்சில் நடந்த உழல்களை சொல்லி ஓட்டு கேட்டிருக்க வேண்டும். இந்த பணியை தொடரபோவதாக வேறு அறிவிப்பு.


என்றும் இந்தியன்
ஜூன் 08, 2024 15:46

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்கள் "உளறும்" பணி தொடரும்: செயற்குழுக் கூட்டத்தில் கார்கே பேச்சு என்று அறிந்து கொள்ளவும்


Lion Drsekar
ஜூன் 08, 2024 14:31

செயற்குழு, குழு , எல்லாமே ஒரு குடும்பத்துக்கு தனது முழு ஆதரவு கொடுப்பது என்பதை எல்லோரும் அறிவார்கள் . வாழ்த்துக்கள் . அப்படியே மக்களையும் கொஞ்சம் சிந்தித்தால் நன்றாக இருக்கும், பல ஓடி மக்களில் எங்கள் கருத்து கடுகை விட சிறியது , ஆனால் எங்களுக்கு கொடுத்திருக்கும் ஆதரவோ மிகப்பெரியது , அதனால்தான் யார் வீட்டு கேட்டை உடைத்தாலும் தாராமல் கறுத்து பதிவு செய்து வருகிறேன் .


நரேந்திர பாரதி
ஜூன் 08, 2024 14:18

""ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பணி தொடரும்"... என்ன பெருசா பணி ?? இந்தியாவை எப்படி ஒழிச்சு கட்றதுன்னா?


Kasimani Baskaran
ஜூன் 08, 2024 13:24

ஐந்தில் ஒரு பங்கு எம்பிக்கள் கூட வைத்திருக்காத ஒரு கட்சி ஆட்சிப்பீடத்தில் அமரத் துடிக்கிறது - அதுவும் அவர்களைப்போல கிட்டத்தட்ட ஒன்றரை மடங்கு எம்பிக்கள் வைத்திருக்கும் இண்டியா கூட்டணியின் தலையில் ஏறி அமர்ந்து. கண்டிப்பாக நிதீஷும், நாயுடுவும் பிரதமர் பதவி கொடுத்தால் கூட வர மாட்டார்கள். அப்படியே ஒருவர் மாறினாலும் அடுத்தவர் மாற வாய்ப்பு குறைவு.


Anand
ஜூன் 08, 2024 12:58

140 கோடி மக்கள் விருப்பம் என்றால் பிறகு ஏன் தோல்வியை தழுவினீர்கள்? ஒரு வேலை 140 கோடி என்பது இங்குள்ள சில ஜென்மங்கள் கூடவே பாகிஸ்தான் மற்றும் சீனா மக்களை சேர்த்து சொல்கிறீர்களா?


Krish
ஜூன் 08, 2024 12:02

99 சீட் = 140 கோடி மக்களா ??


மேலும் செய்திகள்