உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கானாவில் காங்கிரசுக்கு பிரச்னை!

தெலுங்கானாவில் காங்கிரசுக்கு பிரச்னை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: பஞ்சாப், உ.பி.,யை தொடர்ந்து, தெலுங்கானாவிலும் காங்கிரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கு காங்., ஆட்சியில் இருந்தாலும், பிரச்னை தொடர்கிறது. முதல்வர் ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் வனம், சுற்றுச்சூழல் மற்றும் அறநிலையத் துறை அமைச்சராக இருப்பவர் கோண்டா சுரேகா.கடந்த வாரம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. வெளிநாடு பயணம் மேற்கொண்டிருந்த இவர், அமைச்சரவைக் கூட்டம் நடக்கும் தினத்திற்கு முன்தினம், ஹைதராபாத் திரும்பி விட்டார். எனினும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.இது, கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 'முதல்வர் ரேவந்த் ரெட்டி உடனான பிரச்னையால் தான், கூட்டத்தில் சுரேகா பங்கேற்கவில்லை' என, கட்சிக்குள் பேசப்படுகிறது. இதற்கு காரணம் ஒரு கோவில்.ஹைதராபாதிலிருந்து, 60 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது, லட்சுமி நரசிம்ம ஸ்வாமி எழுந்தருளியுள்ள யாதகிரிகுட்டா என்கிற, 1,000 ஆண்டுகள் பழமையான குகைக்கோவில். இந்த கோவில் அறக்கட்டளைக்கு, சிலரை நியமிக்கும்படி முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு கடிதம் எழுதியிருந்தார் அறநிலையத் துறை அமைச்சர் சுரேகா. ஆனால், முதல்வரோ துறை அமைச்சரை கலந்து ஆலோசிக்காமல், தன் விருப்பப்படி ஆட்களை நியமித்துள்ளார். இது, அமைச்சர் சுரேகாவுக்கு கோபத்தை ஏற்படுத்த, அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.ஏற்கனவே காங்., - எம்.எல்.ஏ., ஒருவர், இந்த கோவில் அறக்கட்டளைக்கு சிபாரிசு செய்தவர்களை, முதல்வர் ரேவந்த் ரெட்டி நிராகரித்து விட்டார். இதனால் அந்த, எம்.எல்.ஏ.,வும் கோபத்தில் உள்ளாராம். முதல்வர் தரப்போ, 'இ தெல்லாம் ஒரு பிரச்னையே அல்ல; அரசியலில் இதெல்லாம் சகஜம்' என்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
ஜூலை 05, 2026 12:18

கோவில் விஷயங்களில் தலையிடுவது என்றால் அரசியல்வாதிகளுக்கு ஒரே குழிதான். அவர்களுக்கு உண்மையிலேயே தைரியமிருந்தால் ஒரு முஸ்லீம் அல்லது ஒரு கிறிஸ்துவ பிரார்த்தனை இடத்தில தலையிடட்டும் பார்க்கலாம். திமுக தலைவர்கள் ஹிந்து கோவில் சொத்துக்களைஆட்டை போட்டுபோட்டுத்தான், இன்று ஆட்சியே பறிபோய் அதிகாரமிழந்து இருக்கிறார்கள். ஞாபகமிருக்கட்டும் காங்கிரஸ் கட்சியினரே.


NALAM VIRUMBI
ஜூலை 05, 2026 12:13

எப்படியாகிலும் காங்கிரஸ் கட்சி நாட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். ராகுல் வின்சி வெளிநாடுகளுக்கு கைக்கூலி ஆகிவிட்டார். நமது பாரத தேசத்தில் குழப்பம் உண்டுபண்ணி குளிர் காய நினைக்கும் அவரது கட்சி தொலைந்தால் தேசாபிமானிகள் மகிழ்வர்.


renga rajan
ஜூலை 05, 2026 07:54

கிருஸ்துவனை அதிகாரி ஆக்கி இருப்பான்.


Lakshminarasimhan
ஜூலை 05, 2026 06:51

காங்கிரஸ் ஆட்சி போனால் குறுக்கு வழியில் காவி ஆட்சி மலரும்


Keshavan.J
ஜூலை 05, 2026 12:19

ஏற்கனவே அது முத்ர சந்தில் தானே இருக்கு.


Barakat Ali
ஜூலை 05, 2026 06:40

ஓ ..... கோவில் சொத்தை ஆட்டயப்போட வேண்டியது யாருக்கிறதுல பிரச்னை ......


Ambika. K
ஜூலை 05, 2026 05:51

எது எப்படியோ கான் கிராஸ் ஆட்சி ஒழிந்தால் நல்லது அந்த லட்சுமி நரசிம்மர் அருளால் சீக்கிரமே ozhiyavendum.


sankaranarayanan
ஜூலை 05, 2026 05:40

போச்சுடா அங்கேயும் காங்கிஸு ஊசலாடுகிறதா அங்கேயும் பாஜாபா ஆட்சி விரைவில் மலரட்டும்


ஊர்குருவி
ஜூலை 05, 2026 03:02

அரசு ஹிந்து கோயில்களை சட்டத்திற்கு புறம்பாக நிர்வகிக்கும் தொற்றுநோய் தமிழகத்திலிருந்து எல்லா மாநிலங்களுக்கும் பரவிவிட்டது .ஏன் என்றால் அது ஒரு தேன்கூடு .கைநிறைய வழித்து நக்கலாம் என்பதுதான் . நமது நாட்டில் உள்ள எல்லா ஹிந்துகோவில் களையும் இணைத்து ஒரு கூட்டு நிர்வாக அமைப்பு ஏற்படுத்தி உள்ளூவர் மக்களையே அறங்காவலர்களை நியமித்து கோவில்க்ளை நிர்வகிக்கும் நடைமுறையை கொண்டுவந்து அரசு நிர்வாகங்களில் இருந்து விடுவிக்க நடவடிக்கை தேவை .கோவில்க்ளை அரசு நடத்த அரசியல் அமைப்பில் அனுமதியில்லை .


Barakat Ali
ஜூலை 05, 2026 06:41

கோவில் சொத்துக்களை ஆட்டயப்போட உருவானதே அறநிலையத்துறை ...... காரணம் ஹிந்துக்களின் சகிப்புத்தன்மை எல்லையில்லாதது .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை