உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் கூட்டத்தில் ஒலித்த வங்கதேச தேசியகீதம்; கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு

காங்கிரஸ் கூட்டத்தில் ஒலித்த வங்கதேச தேசியகீதம்; கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கவுகாத்தி: அசாமில் காங்கிரஸ் கூட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் வங்கதேச தேசியகீதத்தை பாடியது பெரும் சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வங்காளிகள் அதிகம் வாழும் ஸ்ரீபூமி மாவட்டத்தில் பராக் பள்ளத்தாக்கில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வங்கதேசத்தின் தேசிய கீதமான 'அமார் சோனார் பாங்லா' பாடலை காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் பாடியுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் பெரும் சர்ச்சை வெடித்தது. பாஜ உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து பேசிய அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, 'வங்கதேச தேசிய கீதத்தை பாடியதை ஒருபோதும் ஏற்க முடியாது. தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்ய டிஜிபிக்கு அறிவுறுத்தியுள்ளேன். சட்டத்தில் உள்ள விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்,' என்றார். அதேவேளையில், இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு தேசிய கீதங்களை எழுதிய ரவீந்திரநாத் தாகூருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, வங்கதேச தேசிய கீதத்தின் இரு வரிகள் மட்டுமே பாடப்பட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

சிந்தனை
அக் 30, 2025 15:10

இவ்வளவு பெரிய Muட்டாள்gaள் கூட காங்கிரஸில் இருக்கிறார்கள் என்றால்...


N S
அக் 30, 2025 12:09

வேறொன்றுமில்லை. "அசாமில் காங்கிரஸ் கூட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் வங்கதேச தேசியகீதத்தை பாடியது" அவருடைய நாட்டு பாடல். திராவிட மாடல் "எம்மதமும் சம்மதமே" என்பது போன்று, அந்த கட்சிக்கு "எந்நாட்டவரும் சம்மதமே".


SUBBU,MADURAI
அக் 30, 2025 11:11

In a shocking display, Assam Congress leaders sang Bangladeshs national anthem at an utive meeting, with state chief Gaurav Gogoi defending it as a bid to woo the Miya vote bank.


D Natarajan
அக் 30, 2025 10:01

மத்திய அரசு நடவடிக்கை எடுக்காது. வேடிக்கை மட்டும் பார்க்கும். இந்த 11 ஆண்டுகளில் யாராவது லஞ்ச வழக்குகளில் தண்டனை பெற்றார்களா. இல்லை இதுதான் பிஜேபி அரசின் பலவீனம்


தலைவன்
அக் 30, 2025 11:26

எப்படி நடவடிக்கை எடுக்கிறது??


N Sasikumar Yadhav
அக் 30, 2025 14:11

எப்படி நடவடிக்கை எடுக்க முடியும். திமுக நிர்வாகி ஆர்எஸ் பாரதி சொன்ன கோட்டாவில் வந்தவர்கள் இன்னும் பதவிகளை காலி செய்யாமல் ஆக்கிரமிப்பு செய்துக்கொண்டு இருக்கிறார்களே


c.mohanraj raj
அக் 30, 2025 09:21

காங்கிரஸ் வெளிநாட்டில் தோன்றிய கட்சி ஆகவே அது வெளிநாட்டு ஆதரிப்பதில் வியப்பு ஏதும் இல்லை


visu
அக் 30, 2025 08:51

அவனுங்களுக்கு எந்த நாடு பிடிக்குதோ அங்க பேக் பண்ணி அனுப்பிடுங்க


Appan
அக் 30, 2025 08:01

காங்கிரசில் இதெல்லாம் சகஜமே, தலைமையே உடம்பு இந்தியாவில் உள்ளம் ரோமில் இருக்கும் பொது இவர்கள் செய்வதில் என்ன தப்பு. இந்திய இந்து நாடு .. இந்தியாவில் தான் காஸ்மீரில் பெரும்பான்மை இந்துக்களை துரத்தி அடித்தார்கள். அப்போது ஆட்சி செய்த காங்கிரஸ் என்ன செய்தது தெரியுமா ..? கைகட்டி வேடிக்கை பார்த்தது. ஏனெற்றால் காங்கிரஸ் ஒரு சிறுபான்மை கட்சி. சிறுபான்மைகாலை பாது காப்பது தான் இவர்களின் கொள்கை . அதாவது காங்கிரஸ் இந்தியாவை சிறுபான்மை நாடாக ஆக்க வேண்டும். இந்தியா 70 வருடம் கழித்து காஸ்மீரை தன் வசம் கொண்டு வந்தது. பிஜேபி போல் ஏன் காங்கிரஸ் நாட்டு பற்றுடன் செயல் படவில்லை ..?. காங்கிரஸ் எப்போ ரோமன் தலைமையில் இருந்து விடு படும் ?


உண்மை கசக்கும்
அக் 30, 2025 07:51

இத்தாலி நாடு பாடலை பாடுங்க


Sun
அக் 30, 2025 07:40

கூடிய விரைவில் பாகிஸ்தான் தேசிய கீதமும் காங்கிரஸ் கூட்டங்களில் ஒலிக்கும். அப்பவும் மத்திய அரசு வெறுமனே வேடிக்கை மட்டும்தான் பார்க்கும்.


Arjun
அக் 30, 2025 07:16

தாய்நாட்டுக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ இல்லையோ பக்கத்து நாடுகளுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் .


புதிய வீடியோ