உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர் பட்டியல் திருத்தம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: தேர்தல் கமிஷன் விளக்கம்

வாக்காளர் பட்டியல் திருத்தம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: தேர்தல் கமிஷன் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து, மாறுப்பட்ட தகவல்கள் வெளியான நிலையில், 'ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பில் மாற்றம் எதுவும் இல்லை' என தேர்தல் கமிஷன் விளக்கமளித்துள்ளது.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை பீஹார் தேர்தல் கமிஷன் துரிதப்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பீஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ளும்படி, கடந்த மாதம் 24ல் தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.ஒவ்வொரு வாக்காளரின் ஓட்டுரிமையை உறுதி செய்யவும், பிழைகள் இல்லாத வாக்காளர் பட்டியலை உருவாக்கவும் இந்த நடவடிக்கை அவசியமானது என, தலைமை தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்தது.

எதிர்ப்பு

இது தொடர்பான அறிவிப்பில், '2023ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத அனைவரும், தங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் தொடர்பான சான்றுகளை இந்த திருத்தப் பணிகளின் போது சமர்ப்பிக்க வேண்டும். 'இவர்களில், 1981, ஜூலை 1ம் தேதிக்கு பின் பிறந்தவர்கள் தங்களுடைய பெற்றோரின் பிறப்பிடம் சார்ந்த சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். 'ஆதார் மற்றும் பான் அட்டை அல்லாத வேறு ஆவணங்கள் சான்றாக இணைக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி ஜூலை 25' என தெரிவிக்கப்பட்டது.நம் அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசத்தைச் சேர்ந்தோர், பீஹாரில் பல ஆண்டுகளாக வசித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, ஆவணங்கள் சமர்ப்பிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டதாக கூறப்பட்டது.பீஹாரின் முக்கிய எதிர்க்கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்டவை தேர்தல் கமிஷன் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தன. 'இதனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சிறுபான்மையினர் ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்படும். ஆகையால், இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்' என, அக்கட்சியினர் வலியுறுத்தினர்.ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அரசுசாரா அமைப்பு, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தது.

மாற்றமில்லை

தேர்தல் கமிஷன் அறிவிப்பை திரும்பப் பெறாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எதிர்க்கட்சியினர் எச்சரித்தனர்.இதையடுத்து, பீஹாரில் நேற்று வெளியான அனைத்து நாளிதழ்களிலும், மாநில தேர்தல் கமிஷன் சார்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில், 'வாக்காளர் திருத்தப் பணியின் போது, விண்ணப்பங்களை மட்டும் தற்போது பூர்த்தி செய்து தரலாம். தேவையான சான்றுகள் மற்றும் ஆவணங்களை வரும் 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.இதற்கிடையே, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின் போது, விண்ணப்பங்கள் மட்டும் சமர்ப்பித்தால் போதும்; அதற்கான சான்றுகள் மற்றும் ஆவணங்கள் இணைக்கத் தேவையில்லை' என, சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.இது, பீஹார் மக்களிடையே கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில், இது தொடர்பாக தேர்தர் கமிஷன் நேற்று விளக்கம்அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த ஜூன் 24ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பை முழுமையாக படிக்காமல், பலர் தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். தவறான அறிக்கைகளால், மக்களை அவர்கள் குழப்புகின்றனர். வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிக்கையில் மாற்றம் எதுவும் இல்லை. விண்ணப்பங்களை இப்போதும், அது தொடர்பான ஆவணங்களை வரும் 25ம் தேதி வரையும் சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மே.வங்கத்திலும் நடத்த வேண்டும்

பீஹாரில் நடத்தப்படுவது போல், மேற்கு வங்கத்திலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் வாயிலாக, போலி ஆதார் அட்டைகள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்களை சட்டவிரோதமாகப் பெற்று வங்கதேசத்தில் இருந்து வந்த ரோஹிங்கியாக்கள் கண்டறியப்பட வேண்டும். போலி ஆவணங்கள் வாயிலாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் நீக்கப்பட வேண்டும்.சுவேந்து அதிகாரிமேற்கு வங்க பா.ஜ., தலைவர்

திரிணமுல் எம்.பி., மஹுவா வழக்கு

பீஹாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி, திரிணமுல் காங்., - எம்.பி., மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 'தேர்தல் கமிஷனின் உத்தரவு அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது.இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால், தகுதியான பல லட்சம் வாக்காளர்கள் ஓட்டுரிமையை இழக்க நேரிடும். பிற மாநிலங்களில் இதே போன்ற உத்தரவை தேர்தல் கமிஷன் பிறப்பிக்கக் கூடாது என, உத்தரவிட வேண்டும்' என, அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.தேர்தல் கமிஷன் அறிவிப்புக்கு எதிராக தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 07, 2025 09:28

முதலில் இந்த தேர்தல் ஆணையம் எந்த கட்சிக்கு ஆதரவாக பீகாரில் செயல்படப்போகிறது என்பது தெரிந்தால்தான் யாருக்கு வாக்குரிமை உண்டு என்பது தீர்மானிக்க முடியும்


GMM
ஜூலை 07, 2025 08:56

வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் திருத்தம். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சிறுபான்மையினர் ஓட்டளிக்க முடியாத நிலை எப்படி ஏற்படும்? முதல் முகவரியில் பட்டியலில் பெயர் நீக்கி, புதிய முகவரியில் பதிவு செய்ய முடியும். கேஸ் இணைப்பு ரேஷன் அட்டை இப்படி தான் மாற்றப்படுகிறது. தேர்தல் ஆணையம் அரசியல் சாசன அமைப்பு. ஆவணங்கள் இல்லாமல் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் அரசியல் கட்சி கிடையாது.


Kasimani Baskaran
ஜூலை 07, 2025 03:53

பிறப்பு சான்று இல்லாதோருக்கு ஓட்டுரிமை இல்லை என்று சொல்லவேண்டிய நிலை கூட வரலாம். அடிப்படை அடையாள அட்டை பாகிஸ்தானில் கூட உண்டு - இந்தியாவை காங்கிரஸ் ஆண்டதன் நோக்கமே கள்ளக்குடியேறிகளை தாராளமாக விட்டதுதான் காரணம். சிறுபான்மை வாக்குகளை வைத்தே அவர்கள் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டு இருந்தார்கள். மம்தா அவர்களை பின்பற்றி அதே வழியில் ஆட்சியில் இருக்கிறார். ஆகா பாஜக இதற்க்கு ஒரு தீர்வு கண்டுபிடித்து அன்னியர்களை வெளியேற்ற வேண்டும். இல்லை என்றால் சிறுபான்மை வாக்குகளை வைத்து திரும்பவும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும். ஓட்டுக்காக தீம்க்காவும் எதை வேண்டுமானாலும் செய்து வங்கதேசத்தவர்களை இறக்குமதி செய்யவும் கூட வாய்ப்பு இருக்கிறது.


தாமரை மலர்கிறது
ஜூலை 07, 2025 01:34

இந்திய குடிமகன் மட்டுமே வாக்கு செலுத்த முடியும். அதற்கான பதினோரு ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பிப்பது மிக மிக அவசியம். இல்லையெனில் பங்களாதேஷிகள் இந்தியாவிற்குள் வந்து ஓட்டுபோட்டு போய்விடுவார்கள். போலி ஓட்டுக்களை ஊக்குவிக்க, எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் பண்ணுகின்றன.


Iyer
ஜூலை 07, 2025 01:18

 பிஹாரில் 70 லக்ஷம் சட்டவிரோத பங்களாதேஷிகளும், ரொஹிங்யாக்களும் RJD க்கு ஓட்டளிக்க தயாராகி உள்ளனர்   மேற்குவங்கத்தில் மம்தா 1 கோடி பங்களாதேஷிகளை கைவசம் வைத்துள்ளார்.   கழிந்த டெல்லி தேர்தல் முன் வாக்காளர் பட்டியல் திருத்தியிருக்கவிட்டால் AAP ஜெயித்து இருக்கும்.


Iyer
ஜூலை 07, 2025 01:11

 நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் திருத்தம் மிகவும் தேவை.  EMERGENCY பிரகடனம் செய்து நாட்டில் சட்டவிரோத 5 கோடி வங்காளிகள் மற்றும் ரோஹிண்யாக்களை கண்டுபிடித்து விரட்டவேண்டும்.  இந்தியாவில் பலமாநிலங்கள் MINI PAKISTAN , MINI BANGLADESH ஆகிவிட்டன. இதில் தீவிரம் காட்டாவிட்டால் ஜெர்மனி பிரான்ஸ் போல் நம் நாடும் கட்டுப்பாடு இன்றி தீவிரவாதிகள் கையில் சிக்கும்


புதிய வீடியோ