உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மசோதாக்களில் கவர்னருக்கு காலக்கெடு; தமிழக உத்தரவு கேரளாவுக்கு பொருந்துமா?: விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

மசோதாக்களில் கவர்னருக்கு காலக்கெடு; தமிழக உத்தரவு கேரளாவுக்கு பொருந்துமா?: விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

புதுடில்லி : மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, கேரளா தொடர்ந்துள்ள வழக்குக்கும் பொருந்துமா என விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் காலதாமதம் செய்வதாக, கவர்னருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மசோதாக்கள் மீது முடிவு எடுக்க கவர்னர்களுக்கு காலக்கெடு விதித்து சமீபத்தில் உத்தரவிட்டது. மேலும், கவர்னர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஜனாதிபதிக்கும் கால நிர்ணயம் செய்தது.இதற்கிடையே, தற்போது பீஹார் கவர்னராக உள்ள ஆரிப் முகமது கான் கவர்னராக இருந்தபோது, மசோதாக்கள் மீது முடிவு எடுப்பதில் காலதாமதம் செய்தது தொடர்பாக, கேரள அரசு, 2023ல் வழக்கு தொடர்ந்தது. கேரள கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.இந்நிலையில், தமிழகம் தொடர்ந்த வழக்கில் அளித்த உத்தரவு, இந்த வழக்குக்கும் பொருந்தும் என, உத்தரவிடக் கோரி, கேரள அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இது நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஜாய்மால்யா பகிச்சி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'கேரள அரசு தொடர்ந்த வழக்கின் சாராம்சம், தமிழக அரசின் வழக்கில் இருந்து வேறுபட்டது' என, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, கேரள கவர்னர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டனர்.இதையடுத்து, தமிழக அரசு வழக்கின் உத்தரவு, கேரள வழக்குக்கும் பொருந்துமா என்பது குறித்து விசாரிப்பதாக அமர்வு கூறியுள்ளது. வழக்கின் விசாரணை, மே 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

venugopal s
ஏப் 23, 2025 12:04

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானது, எல்லா மாநில ஆளுநர்களையும் கட்டுப்படுத்தும் என்பது கொஞ்சம் பொது அறிவு உள்ளவர்களுக்கு கூடப் புரியும்!


Balasubramanyan
ஏப் 23, 2025 11:07

Who will fix up accountability to judges. All govt employees and private employees work 365 days. But these judges want summer vacation.,winter vacation and all go to holidays.funny.


BHARATH
ஏப் 23, 2025 09:24

போங்க..


S MURALIDHARAN
ஏப் 23, 2025 08:20

மீண்டும் 142 சுப்ரீம் கோர்ட் உபயோகப்படுத்தவேண்டும்


GMM
ஏப் 23, 2025 07:52

மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்து தமிழக மாநில வழக்கு மீது உச்ச நீதிபதி தீர்வு செல்லுமா? செல்லாதா? என்ற முடிவு நிலுவையில் இருக்கும் போது, கால நிர்ணயம் நீதிபதி உட்பட நாடு முழுவதும் உள்ள அரசு அதிகாரிகளுக்கு பொருந்த மன்றம் முதலில் சட்டம் ஆக்க பரிந்துரை செய்ய வேண்டும். சூரியன் தெற்கு அல்லது வடக்கில் உதிக்குமா என்ற தவறான கேள்விக்கு பதில் கூற மத்திய அரசு அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணிகு அதிகாரம் இல்லை. கேரள அரசு தொடர்ந்த வழக்கின் சாராம்சம், தமிழக அரசின் வழக்கில் இருந்து வேறுபட்டது என, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி வாதிட்டது தவறு. விலகி இருக்க வேண்டும்.


Hari Sankar Sharma
ஏப் 23, 2025 05:55

அது எப்படி? கருவேப்பிலையா, கொசுறு மாதிரி தருவதற்கு? தமிழ் நாட்டிற்கே பொருந்துமா, பொருந்தாதா? என்பதை இனனும் முடிவு செய்த பாடில்லை


சமீபத்திய செய்தி