உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அனுராக் தாக்கூரிடம் பிரமாண பத்திரம் கேட்டீர்களா: தேர்தல் கமிஷனை கேட்கிறார் ராகுல்

அனுராக் தாக்கூரிடம் பிரமாண பத்திரம் கேட்டீர்களா: தேர்தல் கமிஷனை கேட்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அவுரங்காபாத்: 'ஓட்டு திருட்டு குறித்து பேசியதால் தேர்தல் ஆணையம் என்னிடம் ஒரு பிரமாணப் பத்திரத்தை கேட்கிறது. ஆனால் பாஜ எம்பி அனுராக் தாகூர் இதே மாதிரியான கருத்தைச் சொன்னால், அவரிடம் எந்த பிரமாணப் பத்திரமும் கேட்பதில்லை,' என்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.பீஹார் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பீஹாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையிலும், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இன்று யாத்திரையை துவங்கினார். இதில் பீஹார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவுரங்காபாத்தில் ராகுல் பேசியதாவது; மஹாராஷ்டிராவில் நடந்த லோக் சபா தேர்தலில் இண்டி கூட்டணி வெற்றி பெற்றது. அதன்பிறகு, 4 மாதங்கள் கழித்து இதே மஹாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜ கூட்டணி முழு வெற்றியை பெற்றது. எங்களின் கூட்டணி காணாமல் போய் விட்டது. இது பற்றி விசாரணை நடத்தியதில், 4 மாதங்களில் ஒரு கோடி வாக்காளர்களை உருவாக்கி தேர்தல் ஆணையம் மேஜிக் செய்துள்ளது. எங்கெல்லாம் புது வாக்காளர்கள் வந்துள்ளார்களோ, அங்கெல்லாம் பாஜ வெற்றி பெற்றுள்ளது. எங்களின் ஓட்டு குறையவில்லை. லோக் சபா தேர்தலில் பெற்ற ஓட்டுகளை, சட்டசபை தேர்தலிலும் இண்டி கூட்டணி பெற்றுள்ளது. புதிய ஓட்டுகளை பாஜ பெற்றுள்ளது. இது தான் எங்களுக்கு சந்தேகத்தை உருவாக்கியது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டோம். ஒரு கோடி வாக்காளர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை கேட்டோம். ஆனால், தேர்தல் ஆணையம் விளக்கம் கொடுக்க மறுத்து விட்டனர். எங்களுக்கு நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டாம். சட்டவிதிகளுக்குட்பட்டு பூத்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை கொடுக்குமாறு கேட்டோம். ஆனால், அதற்கும் மறுப்பு தெரிவித்து விட்டனர். இதனால், வாக்காளர் பட்டியலை தர கேட்டோம். ஆனால், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வழங்க மறுத்து விட்டனர். தேர்தல் ஆணையமும், பாஜவும் இணைந்து மத்திய பெங்களூருவில் ஓட்டு திருட்டில் ஈடுபட்டனர். நான் உங்களுக்கு உத்தரவாதத்துடன் சொல்கிறேன். தேர்தல் ஆணையம் என்னிடம் ஒரு பிரமாணப் பத்திரத்தை கேட்கிறது. ஆனால் அனுராக் தாகூர் இதே கருத்தைச் சொன்னால், அவரிடம் எந்த பிரமாணப் பத்திரமும் கேட்பதில்லை, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

தமிழன்டா
ஆக 18, 2025 19:11

அது எப்படிங்கன்னா இந்த தகவல் எல்லாம் உங்களுக்கு தர முடியும்? எங்க மொள்ளமாரித்தனம் எல்லாம் வெளியே தெரிஞ்சுடுமே !


Rajasekar Jayaraman
ஆக 18, 2025 09:42

இண்டி கூட்டணியின் பூத் ஏஜென்ட்கள் எங்கே போனார்கள் அவர்களிடம் வாக்காளர் பெயர்கள் அனைத்தும் இருந்ததல்லவா அதை வைத்து அவர்கள் அப்பொழுது எதிர்ப்பு தெரிவிக்கலாமே அதை விடுத்து தோல்வி அடைந்த பிறகு வாயில் வந்தபடி புறம் பேசுவது ஒரு சரியான எதிர்கட்சிக்கு அழகல்ல.


பேசும் தமிழன்
ஆக 18, 2025 09:25

வாய்க்கு வந்தபடி உளறி கொண்டு இருக்கிறார்..... பப்பு என்ன தான் முயற்சி செய்தாலும்... மக்கள் யாரும் நம்ப தயாராக இல்லை !!!


பேசும் தமிழன்
ஆக 18, 2025 08:20

பப்பு அவர்களின் கான்கிராஸ் கட்சியை தேர்தலில் மக்கள் விரட்டி.. விரட்டி.. அடிப்பதால்... மக்கள் மீதான கோபத்தில்.... பதவி கிடைக்காத நிலையில் .... பேசுகிறார்.


பேசும் தமிழன்
ஆக 18, 2025 08:16

முதலில் குற்றச்சாட்டு கூறிய நீங்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுங்கள். பிறகு அவர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வார். முதலில் புரளியை கிளப்பியது நீங்கள் தானே ???


Shivakumar
ஆக 18, 2025 06:24

முதலில் யார் சொன்னது. நீங்க ஒழுங்கா கொடுத்து இருந்தால் அனுராக் டாகூரிடம் கேட்கலாம். நீங்களே பயந்து ஓடி ஒளிந்துகொண்டீர்கள். முதலில் நீங்க சரியாக இருங்க. பிறகு மற்றவரை பற்றி பேசலாம்.


vadivelu
ஆக 18, 2025 06:38

அனுராக் தேர்தல் கமிஷனிடம் கேட்கும் பொது அப்படி கேட்பார்.


visu
ஆக 18, 2025 07:30

இல்லை இருவரும் சொல்லும் நோக்கங்கள் வேறு அனுராக் நீங்கள் பிஜேபி ஏமாற்றி வெற்றிபெற்றதாக சொல்லுகிறீர்கள் உங்கள் தொகுதியிலும் இப்படி நடந்துள்ளதே என்று 96 கோடி வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருக்க வாய்ப்புண்டு என்று யதார்ததை சொல்கிறார் ராகுல் போல திருடன் என்ற கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தை குறைசொல்லவில்லை ராகுல் வென்றால் சரி பிஜேபி வென்றால் தேர்தல் ஆணையம் தவறா


தாமரை மலர்கிறது
ஆக 18, 2025 05:03

அனுராக் தாக்குர் தேர்தல் கமிஷனுக்காக பேசியுள்ளார். அவரிடம் ஏன் பிராமண பாத்திரம் கேட்க வேண்டும்? ராகுல் தினந்தோறும் உளறுவதை யாரும் கண்டுகொள்ளபோவதில்லை. தொடர்ந்து தோற்றுவரும் விரக்தியில் ராகுல் கதறுகிறார். இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இப்படியே கதறி கொண்டே இருக்கே வேண்டியது தான்.


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 18, 2025 06:06

இரண்டே இரண்டு வேண்டுகோள் தானே? டிஜிட்டல் வாக்காளர் தரவுகள், வாக்குச்சாவடி சிசிடிவி பதிவுகள். நீ யோக்கியன் என்றால் கேட்ட உடன் கொடுத்திருப்பாய்.


vivek
ஆக 18, 2025 07:31

குடுக்கமுடியாது


nv
ஆக 18, 2025 00:22

சில பைத்தியங்களுக்கு வைத்தியம் செய்தாலும் தெளியாது !! இந்த பப்புவும் அந்த வகை தான்


ManiMurugan Murugan
ஆக 17, 2025 22:44

அருமையான பதிவு போட்டுள்ளார்கள் 4 மாதத்தில் மும்பையில் ஒரு கோடி பேரா அவ்வளவு இடம் உள்ளதா புதியவர்களுக்கு 4மாதத்தில் வாக்காளர் அட்டை கிடைக்கிறதா அதுவும் அங்குள்ள உங்கள் கட்சி காரர் களுக்கு தெரியாதவர்கள் பொய் எவ்வளவு பொய் மக்கள் இனி ராகுல் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள்


Rajan A
ஆக 17, 2025 22:38

சுயபுத்தி இல்லை. ஸ்வாதீனம் இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை