உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் பணியை துவக்குங்கள்: தொண்டர்களுக்கு இ.பி.எஸ்., வேண்டுகோள்

தேர்தல் பணியை துவக்குங்கள்: தொண்டர்களுக்கு இ.பி.எஸ்., வேண்டுகோள்

சேலம்: அடுத்து வரும் தேர்தல் விடியா திமுக அரசை வீட்டிற்கு அனுப்பக்கூடிய தேர்தலாக இருக்க வேண்டும். இதற்கென தொண்டர்கள் பணியாற்ற துவங்க வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பேசினார்.அதிமுக சேலம் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் ஓமலூர், திண்டமங்கலம் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கலந்துகொண்டு 108 பானைகளில் வைக்கப்பட்ட பொங்கலை கண்ணனூர் மாரியம்மனுக்கு படையலிட்டு வழிபட்டார். பின்னர் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் பொங்கல் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் இபிஎஸ் பேசியதாவது: தைபிறந்தால் வழிபிறக்கும் என்பது போல், இந்தாண்டு நாட்டு மக்களுக்கு நல்ல வழி பிறக்கும். இரவு, பகல், மழை, வெயில் என்று பாராமல் நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாய மக்களின் உன்னதமான நாள் தை திருநாள். நானும் ஒரு விவசாயி. எனது இல்ல நிகழ்ச்சியாக இதை பார்க்கிறேன். இன்று எனது குடும்பத்தினர் பொங்கல் கொண்டாடிவரும் வேளையில் உங்களுடன் நான் பொங்கல் கொண்டாடுகிறேன்.இரண்டரை ஆண்டு திமுக ஆட்சியில் மக்கள் என்ன நன்மை அடைந்தனர்? மக்களுக்கு அவர்கள் என்ன செய்தார்கள்? கொள்ளை அடித்ததுதான் அவர்களின் சாதனை. 30 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்து சம்பாதித்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் உதயநிதியும், சபரீசனும் உள்ளனர் என்று திமுக அமைச்சரே கூறி உள்ளார். கொள்ளையடித்து ஆட்டம் போட்டவர்கள் சிறையில் உள்ளனர். இன்னும் சிலர் சிறை செல்ல உள்ளனர்.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி மிக மோசமான ஆட்சியாக மக்கள் எண்ணுகின்றனர். இந்த ஆட்சி எப்போது அகலும் என்று மக்கள் எதிர்பார்கின்றனர். லோக்சபா தேர்தல் விடியா அரசுக்கு பாடமாக இருக்க வேண்டும். இந்த தேர்தலில் விடியா அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். ஸ்டாலின் தமிழக முதல்வராக இருக்கலாம். சேலம் மாவட்டத்தில் 11 தொகுதியில் 10 தொகுதி அதிமுக வெற்றி பெற்றுள்ளது. பிப்ரவரி மாதத்தில் தேர்தல் அறிவிக்கப்படலாம். நமது கட்சியினர் எப்போதும் தயாராக இருந்து தேர்தல் பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Rpalnivelu
ஜன 16, 2024 02:49

இது தேசியத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல். இவனுங்க யார் பேரை சொல்லி ஒட்டு கேட்பானுங்க? தன்னுடைய பேராசைக்காக கட்சியையே பலிக்கடாவாக்கும் குறுக்கு புத்தி இபிஸ். பாஜக அழுத்தம் கொடுத்தால் ரெட்டை எல பறிபோயிடும்.


Vijay D Ratnam
ஜன 15, 2024 22:12

எடப்பாடியார் அவர்களே, திமுகவின் சரித்திர சாதனையை தமிழக மக்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருங்கள். நம்மாளுங்களுக்கு மறதி ஒரு தீரா வியாதி. அதிமுகவின் மாநாடு ஆகட்டும், பொதுக்கூட்டம் ஆகட்டும், தெருமுனைக்கூட்டம், முட்டுச்சந்து மீட்டிங் ஆகட்டும் உங்க கட்சி பேச்சாளர்களிடம் இரண்டு விஷயங்களை மறக்காமல் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க சொல்லுங்கள். 2 ஜி ஸ்பெக்ட்ராமில் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூவா அளவுக்கு கொள்ளையடித்து வசமாக சிக்கிய விவகாரத்தையும், இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழ் மக்களை பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என்றும் பாராமல் துடிக்க துடிக்க கொன்று குவிக்க உறுதுணையாக இருந்த கருணாநிதியின் மூன்று மணி நேர மெரினா பீச் உண்ணாவிரத டிராமா குறித்தும் தமிழக மக்களுக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருங்கள். தவிர காவிரி விவகாரத்தில் கருணாநிதி செய்த பச்சை அயோக்யத்தனங்களையும், ரெண்டு வருஷத்தில் உதயநிதியும் சபரீசனும் அடித்த முப்பதாயிரம் கோடி ரூவா கொள்ளை விவகாரத்தையும், திமுக மந்திரி கும்பல் கொள்ளையடித்து குவிக்கும் கோடிகளை பற்றியும், அண்ணா ஆரம்பித்த கட்சி இன்று ஒரு குடும்பத்தின் கீழ் வந்து, ஒரு மாஃபியா கேங் ஆக உருமாறி இருப்பதையும் மேடை தவறாமல் எடுத்து சொல்லிக்கொண்டே இருங்கள். வாரிசு அரசியலை, குடும்ப அரசியலை, பரம்பரை அரசியலை எடுத்து பேசுங்கள். ஆமா அது சரி ஒங்க கட்சிலயும் திமுக மாதிரி வாரிசுகளுக்கு எம்.பி சீட் கொடுக்க போறீங்களாமே. பார்த்துங்க. வாரிசு அரசியலுக்கு ஆப்படிக்க இருக்கும் மக்கள் ஒங்களுக்கும் சேரத்து அடிச்சி உட்டுடுவாய்ங்க. வாரிசுக்கு சீட் கொடுத்தே ஆக வேண்டுமென்றால் அப்பனுக்கு பதவியை பிடுங்குங்கள். சாதாரண தொண்டனா இருந்து பணியாற்றட்டும். அப்பன் மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ அல்லது எம்.பியாக இருக்கும் பட்சத்தில் வாரிசுகளை தலை தூக்க விடாதீர்கள். ஜெயக்குமார் மவனுக்கு, நத்தம் விஸ்வநாதன் மறுமவனுக்கு என்று ஆரம்பிச்சீங்கன்னா காணாபூடுவீங்க.


தத்வமசி
ஜன 15, 2024 21:50

ஐயாயிரம் கோடி சிலவு செய்து மாசெக்களை வளைத்து கட்சியை கைப் பற்றலாம். ஆனால் மக்களின் மனதை வெல்ல முடியாது எடப்பாடியாரே.. நீங்கள் மாபெரும் தவறை செய்துள்ளீர்கள்.


ராஜா
ஜன 15, 2024 19:22

தள்ளு தள்ளு தள்ளு தள்ளு...


அப்புசாமி
ஜன 15, 2024 19:13

தேர்தல் மனி யை அனுப்புங்க. உடனே தொடங்கிறலாம்.


panneer selvam
ஜன 15, 2024 15:45

It is bit shocking how a seasoned politician like EPS made a fatal mistake by severing the alliance of BJP that too at the time of Parliament election. Misguided by his advisors that by moving away from BJP , his party will reap the votes of minorities where the total population of minorities ( both Muslims and Christians are 10% of population ) very less comparing Hindus. EPS should remember how madame JJ put up a Hindu candidate in Muslim majority area like Vaniampadi assembly and won the election . EPS will pay heavy price for his folly .


ராமகிருஷ்ணன்
ஜன 15, 2024 14:47

தனிமனிதனின் ஈகோவினாலும், திறனின்மாயிலும் ஒரு கட்சி அழிய போகிறது. எடப்பாடி தோற்பது பெரிதல்ல. அதனால் களவாணி குடும்ப கட்சி பலனடைய கூடாது. அதுதான் முக்கியம். பி ஜே பி யை கூட்டணி வேண்டாம் என்று சொன்னது எவ்வளவு பெரிய தவறு என்று புரிந்து கொண்டனர்


Kumar
ஜன 15, 2024 14:00

எடப்பாடி சூப்பர் தலைவர்


Kumar
ஜன 15, 2024 13:59

EPS


Jysenn
ஜன 15, 2024 13:56

ADMK mudanki vittathu thanks to EPS.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை