உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரம்பு மீறாதீர்கள்! சபாநாயகர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

வரம்பு மீறாதீர்கள்! சபாநாயகர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தெலுங்கானாவில், ஆளும் காங்கிரசுக்கு தாவிய பாரத் ராஷ்ட்ர சமிதி எம்.எல்.ஏ.,க்கள் 10 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்கும்படி அம்மாநில சட்டசபை சபாநாயகர் கடம் பிரசாத் குமாருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், சபாநாயகரின் முடிவுகள் மீது நீதிமன்றங்கள் தலையிடாது என்பதற்காக, அவர்கள் வரம்பு மீறிய அதிகாரத்தை அனுபவிப்பதை ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தெலுங்கானாவில், 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில், பாரத் ராஷ்ட்ர சமிதியிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை காங்., கைப்பற்றியது. அக்கட்சியின் ரேவந்த் ரெட்டி முதல்வரானார். இதையடுத்து, பாரத் ராஷ்ட்ர சமிதியின் 10 எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசில் இணைந்தனர். காலக்கெடு அவர்கள் அனைவரையும் கட்சி தாவல் சட்டத்தில் தகுதிநீக்கம் செய்யும்படி, தெலுங்கானா சட்டசபை சபாநாயகர் கடம் பிரசாத் குமாரிடம் பாரத் ராஷ்ட்ர சமிதி சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பாரத் ராஷ்ட்ர சமிதி, தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. விசாரித்த தனி நீதிபதி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பாரத் ராஷ்ட்ர சமிதி, பா.ஜ., ஆகிய கட்சிகள் மேல் முறையீடு செய்தன. அதில், 'கட்சி தாவிய எம்.எல்.ஏ.,க்களை தகுதிநீக்கம் செய்யாமல், தெலுங்கானா சட்டசபை சபாநாயகர் காலம் தாழ்த்துகிறார். முடிவெடுக்க அவருக்கு உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சவுகான் அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்ட தாவது: நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றால், அது சபாநாயகரை விமர்சிக்க வழிவகுத்து விடும். அதாவது, 'ஆப்பரேஷன் வெற்றிகரமாக நடந்தது; நோயாளி இறந்து விட்டார்' என்ற சொலவடைக்கு ஏற்றதாகிவிடும். இந்த விவகாரத்தில், தெலுங்கானா சட்டசபை சபாநாயகர் மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும். கட்சி தாவல் தேசிய அளவில் பேசப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது. அதை கட்டுப்படுத்தாவிட்டால் ஜனநாயகத்தை சீர்குலைத்து விடும். இது போன்ற விவகாரங்களில், சட்டசபை சபாநாயகர்கள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். சபாநாயகரின் முடிவுகள் மீது நீதிமன்றங்கள் தலையிடாது என்பதற்காக, அவர்கள் வரம்பு மீறிய அதிகாரத்தை அனுபவிப்பதை ஏற்க முடியாது. மறு ஆய்வு தகுதிநீக்க விவகாரங்களில், நீதிமன்றங்களில் தாமதம் ஏற்படும் என்பதால் தான், இதில் முடிவெடுக்கும் அதிகாரத்தை அரசியலமைப்பு சட்டம் சபாநாயகருக்கு வழங்கி உள்ளது. ஆனால், அதே தாமதத்தை சபாநாயகரே செய்வதை ஏற்க முடியாது. அரசியலமைப்பின் 10வது அட்டவணையின் கீழ், தகுதிநீக்க விவகாரங்களில் முடிவெடுப்பதில், ஒரு தீர்ப்பாயமாகவே சபாநாயகர் செயல்படுகிறார். இந்த அதிகாரம் தற்போது கவனிக்கக்கூடியதாக மாறியிருக்கிறது. தகுதிநீக்க விவகாரத்தில், தற்போதைய வழிமுறையை பார்லிமென்ட் மறு ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.- டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 01, 2025 11:25

பேசாமல் ஆட்சி அதிகாரத்தை கோர்ட் வசமே ஒப்படைத்து விடலாம். பிரதம மந்திரிக்கும் இராணுவ தளபதிகளும் தான் இந்த கோர்ட்டுகள் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டியது தான் பாக்கி. சரிங்க யுவர் ஆனர் எப்போது நீதி மன்ற வழக்குகள் காலக்கெடுக்குள் முடிக்க முடிவெடுப்பீர்கள். 2500 திருட்டு வழக்கு 26 வருடங்களாக நடப்பதாக நேற்று தான் செய்தி வந்தது. அதை எப்போது முடிப்பதாக உத்தேசம். யுவர் ஆனர் உங்களுக்கு ஒரு நீதி அடுத்தவருக்கு ஒரு நீதியா. நியாயமா யுவர் ஆனர். செக் ரிட்டர்ன் வழக்குகளுக்காவது ஒரு காலக்கெடு நிர்ணயிக்கலாமே யுவர் ஆனர். ஓ ஓ சாரி சாரி அதற்கு தான் லோக் ஆதலத் உள்ளதே. அங்கு வக்கீல்களே கட்டப்பஞ்சாயத்து செய்து முடித்து விடுவார்கள். அதை மறுத்து விட்டேன் யுவர் ஆனர். சாரி..


Anand
ஆக 01, 2025 10:45

சுப்ரீம் கோர்ட் சபாநாயகரை விளாசு விளாசு என விளாசிவிட்டது...


GMM
ஆக 01, 2025 08:40

ஆளும் காங்கிரசுக்கு தாவிய 10 எம்.எல்.ஏ.,க்கள். தகுதி நீக்கம் செய்யக் கோரி வழக்கு எதன் அடிப்படையில் மன்றம் விசாரிக்கிறது? தேர்தல் ஆணையம் பணி. நீதிபதி சட்டம் இல்லாமல் ஏன் வழக்கை விசாரிக்கிறார்? கட்சி தாவல் சட்டம் ஒரு வியாபார சட்டம். தாவினால் தகுதிநீக்கம் மற்றும் பதவி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் யாரிடமும் அனுமதி பெற கூடாது. அந்த தொகுதியில் அடுத்த குறைந்த வாக்கு பெற்றவருக்கு பதவி அல்லது தேர்தல் ஆணைய நாமினி. நீதிபதி, மருத்துவர், குறைபாடுகள் மீது மத்திய தணிக்கை கட்டாயம். சபாநாயகர் வரம்பு அறியாதவர். அம்பேத்கர் மக்கள் பிரதிநிதிக்கு அதிகாரம் கொடுக்கவில்லை. வறுமையில் வாடும் வக்கீல் வாதம் மூலம் அதிகாரம் கொடுத்து பணம் தேடி வருகின்றனர்.


Anbuselvan
ஆக 01, 2025 08:19

ஆமாம். இவர்கள் ஊருக்குதான் உபதேசம் செய்வார்கள். சில கேஸ்கள் நீதிமன்றங்களில் 50 வருடங்கள் 100 வருடங்கள் கிடப்பில் போடப்பட்டு அவற்றில் பல காலாவதி ஆகி கேஸ் போட்டவர்களும் கேஸ் போடப்பட்டவர்களும் இறந்தே போகின்றனர். இவற்றிற்கெல்லாம் இவர்கள் கால நிர்ணயம் எப்படி செய்ய முடியாதோ அதே போலத்தான். இவர்கள் சட்டத்தை திருத்த பரிந்துரை செய்யலாம். சபாநாயகரையோ ஆளுநரையோ அல்லது ஜனாதிபதியையோ இந்த காலத்திற்குள் முடிவு எடுங்கள் என சட்டம் இயற்ற இவர்களுக்கு உரிமை இல்லவே இல்லை. இப்போ சொல்லுங்கள் யார் வரம்பை மீறுகிறார்கள் என்று.


Jack
ஆக 01, 2025 08:12

செந்தில் பாலாஜி வழக்கு இந்த யுகத்தில் முடியாது என்று சொன்னதும் இதே நீதி மன்றங்கள் தானே ..


M S RAGHUNATHAN
ஆக 01, 2025 08:01

I wish Mr P H Pandiyan is alive today. He would have summoned the judges to TN assembly and would have taught them a fitting lesson. It is time for revamping the entire constitution and rewrite afresh.


VENKATASUBRAMANIAN
ஆக 01, 2025 07:50

இதேபோல் எல்லா நீதிமன்றங்களுக்கு சொல்ல முடியுமா


lana
ஆக 01, 2025 07:24

எங்களை தவிர வேறு எல்லாரும் குறித்த காலத்தில் வேலை செய்ய வேண்டும். நாங்கள் மட்டுமே பெயில் ஆ jail ஆ அமைச்சர் பதவி யா என கேட்டு யாருக்கு என்ன தேவை அதை வழங்கப்படும். எங்களுக்கு காலக்கெடு எதுவும் இல்லை


Parthasarathy Badrinarayanan
ஆக 01, 2025 06:44

இவர்களுக்கு அதைச் சொல்லத் தகுதி உண்டா. ஜனாதிபதி , கவர்னர் அதிகாரத்தில் இவர்கள் மூக்கை நுழைக்கலாமா? சபாநாயகர் என்ன செய்யவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. நீதி மன்றம் எல்லைக்குட்பட்ட இடங்களில் அதிகாரம் செலுத்தலாம். அதிகப் பிரசங்கித்தனம்


Kasimani Baskaran
ஆக 01, 2025 03:47

இந்திரா காங்கிரஸ் சுதந்திரத்துக்கு பாடுபட்ட பழைய காங்கிரஸ் அல்ல.. இந்திரா ஆரம்பித்த காங்கிரஸ் - நேரு குடும்பத்துக்கு மட்டும் சொந்தமானது.


சமீபத்திய செய்தி