| ADDED : ஜன 21, 2026 06:06 PM
மும்பை: மஹாராஷ்டிராவில் உள்ள கல்யாண்- டோம்பிவ்லி மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்ற ராஜ் தாக்கரேயின் மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியுடன் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கட்சி கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருகிறது.மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், பாஜ கூட்டணி மும்பை மாநகராட்சி உள்ளிட்ட முக்கிய மாநகராட்சிகளை கைப்பற்றி உள்ளது. இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா மற்றும் ராஜ்தாக்கரேயின் மஹாராஷ்டிரா நவ நிர்மான் சேனா கட்சி கூட்டணி அமைத்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9k1lhkuk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாஜ கூட்டணி கைப்பற்றிய மாநகராட்சிகளில் கல்யாண் - டோம்பிவ்லி மாநகராட்சியும் ஒன்று. இங்கு மேயர் பதவியை கைப்பற்ற 62 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை. அதில் பாஜ 50, ஏக்நாத் ஷிண்டே தரப்பு 53 இடங்களில் வெற்றி பெற்றது. மேயர் பதவிக்கு இரு கட்சிகளும் உரிமை கோருவதால், கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது.இந்நிலையில், மேயர் பதவியை கைப்பற்ற, மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியுடன் கூட்டணி வைக்க ஏக்நாத் ஷிண்டே தரப்பு முடிவு செய்துள்ளது. அக்கட்சிக்கு 5 கவுன்சிலர்கள் உள்ளனர். மேயர் பதவியை கைப்பற்ற இன்னும் 4 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது. இது தொடர்பாக இரு கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.