உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு கால நிர்ணயம் செய்வது வரம்புமீறல் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் வாதம்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு கால நிர்ணயம் செய்வது வரம்புமீறல் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் வாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'நாடு முழுதும் வழக்கமான இடைவெளியில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கான எந்த உத்தரவும், தேர்தல் கமிஷனின் பிரத்யேக அதிகார வரம்பை மீறுவதாகும்' என, தேர்தல் கமிஷன் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பீஹாரில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதனால், தகுதியான வாக்காளர்கள் நீக்கப் பட்டதாகவும், பா.ஜ., வுக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே, நாடு முழுதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ள தேர்தல் கமிஷன் ஆர்வம் காட்டி வருகிறது. இது தொடர்பாக, தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், நாடு முழுதுமான பணி அடுத்த மாதம் துவங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், குறிப்பிட்ட இடைவெளியில் நாடு முழுதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை நடத்த தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதிலளித்து, தேர்தல் கமிஷன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: வாக்காளர் பட்டியலை சுருக்கமாக திருத்துவது அல்லது தீவிர திருத்தத்தை மேற்கொள்வது என்பது தேர்தல் கமிஷனின் விருப்பத்துக்கு உட்பட்டது. இதில், உச்ச நீதிமன்றம் உட்பட எந்த அமைப்பும் தலையிட முடியாது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் - 1950 மற்றும் தேர் தல் பதிவு விதிகள் - 1960 ஆகியவற்றின்படி, இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷனுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட வேண்டும் என வரையறுக்கப்படவில்லை. எந்த ஒரு தொகுதியின் அல்லது ஒரு பகுதியின் வாக்காளர் பட்டியலையும் பொருத்தமான காலத்தில் திருத்தம் செய்ய, தேர்தல் கமிஷனுக்கு சட்டம் அதிகாரத்தை வழங்கியுள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என உத் தரவிடுவது, தேர்தல் கமிஷனின் பிரத்யேக அதிகார வரம்பை மீறுவதாகும். வாக்காளர் பட்டியலை முறையாக பராமரிக்க வேண்டிய சட்டப்பூர்வமான கடமையை, தேர்தல் கமிஷன் முழுமையாக அறிந்துள்ளது. வரும் 2026 ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு, நாடு முழுதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள நடவடிக்கையை துவக்குமாறு, அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியுள்ளது. இந்த பணியை மேலும் வலுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் மாநாட்டையும் தேர்தல் கமிஷன் கூட்டியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

பெரிய குத்தூசி
செப் 14, 2025 17:37

தமிழகத்தில் 2026 தேர்தல் தில்லுமுல்லாக திமுக தீட்டியிருக்கும் மஹா பெரிய சதி. இன்றய தேதிவரை உறுதி செய்யப்பட்ட சதி. ஒரு பூத் க்கு 100 முதல் 200 வாக்காளர் களின் வாக்காளர் அடையாள அட்டையை இரு மடங்காக, அதாவது ஒரு வாக்காளருக்கு இரண்டு வாக்காளர் அடையாள அட்டை களாக பூத் களத்தில் பணியாற்றும் மாநில அதிகாரிகள், பொதுவாக வாக்காளர் அட்டையில் திருத்தும் சேர்த்தல் பணியில் திமுக ஆதரவு பெற்ற ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் வாக்காளர் அட்டையில் திருத்தும் சேர்த்தல் பணியில் ஈடுபடுவர். அவர்களின் உதவியோடு ஒரு பூத்துக்கு கூடுதலாக 200 வாக்காளர் என டூப்ளிகேட், அதாவது ஒருவருக்கு இரு வாக்குகள் என சேர்த்து வைத்துள்ளார். என்னிடம் சென்னையில் உள்ள இரண்டு பூத்துகளுக்கான ஆதாரம் உள்ளது. எதிர்கட்சிகள் ஒவொரு பூத்துக்கும் verify செய்தால் இந்த திமுக சதியை அறியலாம். விஷயத்துக்கு வருவோம், ஒவொரு பூத்துக்கும் 200 டூப்ளிகேட் டாக வாக்காளர் அடையாளத்தை உருவாகியுள்ளதால் தேர்தல் நடைபெறும் நாள் அன்று இதர கட்சி பூத் ஏஜென்ட் களுக்கு லட்சங்கள் வரை பணம் கொடுத்து கூடுதலாக உருவாகியுள்ள வாக்காளர்களின் பெயரில் அங்கு உள்ள திமுக பூத் ஏஜென்ட் பூத் அலுவலரின் ஒப்புதலோடு டூப்ளிகேட் வாளர் பெயரை டிக் செய்து கட கட வென வாக்கு பதிவு இயந்திரத்தில் பூத்துக்கு 200 ஒட்டு களுக்கு மேல் கள்ள ஒட்டு போட திமுக திட்டமிட்டுள்ளது. இதற்காக பூத் ஒன்றுக்கு ஏஜென்ட், திமுக ஆதரவு வாக்குப்பதிவு ஆசிரியர் அதிகாரிகள் என அனைவருக்கும் அளிக்க 10 லட்சம் முதல் 25 லட்சம் செலவு செய்ய செந்தில் பாலாஜி தலைமையில் குழு நியமிக்கப்பட்டு இருக்கிறது.


Kayal Karpagavalli
செப் 14, 2025 14:26

DIGITAL ELECTION CARD CAN BE ISSUED TO AVOID PROBLEMS....LIKE PAN CARD,ADHAAR CARD. THE VERIFICATION IS ONLINE NOT PERSON TO PERSON......


Iyer
செப் 14, 2025 13:49

20 - 30 வருடங்களாக பைசல் செய்யப்படாமல் பல லக்ஷம் வழக்குகள் நம் SC மற்றும் HC க்களில் தேங்கி கிடக்கின்றன. நீங்கள் முதலில் உங்கள் வேலைகளை ஒழுங்காக செய்து வழக்குகள் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.


hariharan
செப் 14, 2025 13:23

ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒரு வழக்கிற்கு நீதிமன்றங்கள் தீர்ப்பு கொடுக்க முடியுமா? அல்லது நிலுவையில் நீதிமன்றங்களில் இருக்கும் தேர்தல் தொடர்புடைய வழக்குகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்ப்பு வழங்கவேண்டும் என்று தேர்தல் கமிஷன் நீதிமன்றத்திற்கு ஆணை பிறப்பிக்க முடியுமா? அப்படி ஆணை பிறப்பித்தால் நீதிமன்றங்கள் கடுப்பாகிவிடும், அதுபோல் தான் இதுவும். ஒவ்வொரு சட்டங்களினால் செயல்படக்கூடிய அமைப்புகளும் அவர்கள் வேலையை அவர்கள் பார்ப்பார்கள். நீதிமன்றம் எல்லா விஷயங்களிலும் தலையிட வேண்டிய அவசியமில்லை. இவர்கள் என்ன சூப்பர் பவரா?


Subburamu K
செப் 14, 2025 12:58

In general electoral roll is not prepared with duty conscious government staff. They are preparing the role with a lot of errors. Voter list not arranged by door number. Many dead person names are in the roll years together. Names are listed in many places. Even if we give the voters name in the old place, they are not doing correction to remove in the previous residence. Electoral officers at booth level or in a assembly segment level are not accountable to Chief Electoral Officers of the states. District Collectors are also not taking responsibility to prepare the roll accurately All the revenue officials must concentrate on their jurisdiction to prepare accurate electoral roll


kannan
செப் 14, 2025 11:44

ஆதாரைக் கொடுப்பதும் எல்லையைக் காப்பதுவும் யார் வேலை? ராணுவத்தை குறை சொல்வது ஏற்ப்புடையது இல்லை, போலி தேசபக்தர்கள் இம்சை அசர வைக்கிறது.


Shivakumar
செப் 14, 2025 11:04

எல்லாவற்றிலும் ஏன் உச்சநீதிமன்றம் தன் மூக்கை நுழைக்கவேண்டும். இது முற்றிலும் தவறான செய்கை. உச்ச நீதிமன்றம் அதனுடைய வேலையை மட்டும் பார்த்தால் போதும். நாட்டில் ஏகப்பட்ட வழக்குகள் தேங்கிக்கிடக்கு, அவற்றை எடுத்து விரைவாக தீர்ப்பை கொடுத்தால் போதும்.


kannan
செப் 14, 2025 11:52

பாதிக்கப் பட்டதாக கருதுவோர் நீதிமன்றத்துக்கே போக க்கூடாது, நீதிமன்றம் இந்த கோரிக்கையை ஏற்க கூடாது என்று வாதிடுவது எல்லாம் பாசிசத்தின் உச்சம்


பாரதன்
செப் 14, 2025 09:01

தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் உச்ச நீதிமன்றம் நுழைய அனுமதிக்க கூடாது. உச்ச நீதிமன்றம் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தேசம் முக்கியம். தேச விரோத சக்திகளுக்கு உச்ச நீதிமன்றம் துணை போக கூடாது.


GMM
செப் 14, 2025 06:56

முதலில் மனுவில் உள்ள குறைபாட்டை நீதிமன்றம் நிவர்த்தி செய்ய வேண்டும். மனுதாரர் குறிப்பிட்ட இடை வெளியில் தேர்தல் ஆணையம் பணியை செய்ய அரசிடம் மனு செய்யாமல், மாநில உயர் நீதிமன்றம் நாடாமல் நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும் காரணம் உள்நோக்கம் என்ன? இன்னொரு அரசியல் சாசன அமைப்பு மீது விசாரணை சட்ட விரோதம். சட்ட விரோத விசாரணை மீது அரசு நிர்வாகம் நீதிபதிகளை விசாரிக்க முடியும். தீர்வை ரத்து செய்ய முடியும். நீதிபதிகள் சிலர் சட்ட குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர்.


GMM
செப் 14, 2025 06:48

தகுதியான நீக்கப் பட்ட வாக்காளர் தேர்தல் ஆணையத்தில் / நீதிமன்றத்தில் முறையிடலாம். குறிப்பிட்ட இடைவெளியில் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணியை நடத்த கூறும் சட்ட விதி என்ன? விதி இல்லை என்றால் எதன் அடிப்படையில் மனு தாக்கல் மற்றும் நீதிமன்ற விசாரணை? தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்பு மீது விசாரணை சட்ட விரோதம். நீதிபதி விண்ணப்பிக்கலாம்.


சமீபத்திய செய்தி