உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிருஷ்ண ஜெயந்தி விழாவில் யானைகள் அணிவகுப்பு

கிருஷ்ண ஜெயந்தி விழாவில் யானைகள் அணிவகுப்பு

பாலக்காடு; பாலக்காடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குன்னத்துார்மேடு கிருஷ்ணர் மற்றும் பாலமுரளி கோவிலில், அலங்கரிக்கப்பட்ட ஒன்பது யானைகளில், கிருஷ்ணனின் தங்கச்சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பாலக்காடு நகரில் மாலையில், 'பாலகோகுலம்' என்ற அமைப்பின் சார்பில் ராதா-,கிருஷ்ணர் வேடம் அணிந்த ஏராளமான சிறுவர், சிறுமியர் பங்கேற்ற ஊர்வலம், கோர்ட் ரோடு வழியாக கோட்டை வாசலை அடைந்தது. குருவாயூர் கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கிருஷ்ண ஜெயந்தி விழா துவங்கியது. காலை, 7:00 மணிக்கு, பெருவனம் குட்டன் மாரார் தலைமையிலான, 50க்கும் மேற்பட்ட வாத்தியக் கலைஞர்கள் செண்டை மேள வாத்தியங்கள் முழங்க, மூன்று யானைகளின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. மிரண்ட யானையால் பரபரப்பு பாலக்காடு குன்னத்தூர்மேடு ஸ்ரீ கிருஷ்ணர், பாலமுரளி கோவில் கிருஷ்ண ஜெயந்தி விழா அணிவகுப்பிற்கு வந்த 'செருப்புளச்சேரி மணிகண்டன்' என்ற யானை மிரண்டு ஓடியது. சரியான நேரத்தில் பாகன்கள் தலையிட்டு யானையை கட்டிப்போட்டதால் அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்கப்பட்டது. இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கோவில் விழா நிகழ்ச்சிகள் நடந்தன.

மிரண்ட யானையால் பரபரப்பு

பாலக்காடு குன்னத்தூர்மேடு ஸ்ரீ கிருஷ்ணர், பாலமுரளி கோவில் கிருஷ்ண ஜெயந்தி விழா அணிவகுப்பிற்கு வந்த 'செருப்புளச்சேரி மணிகண்டன்' என்ற யானை மிரண்டு ஓடியது. சரியான நேரத்தில் பாகன்கள் தலையிட்டு யானையை கட்டிப்போட்டதால் அசம்பாவிதம் நடக்காமல் தப்பியது. இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது. தொடர்ந்து கோவில் விழா நிகழ்ச்சிகள் நடந்ததன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ