உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஊழலுக்கு எதிராக போராடுவது இல்லை: ராகுல் குற்றச்சாட்டு

அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஊழலுக்கு எதிராக போராடுவது இல்லை: ராகுல் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமலாக்கத்துறை, சி.பி.ஐ., மற்றும் ஐ.டி ஆகியவை ஊழலுக்கு எதிராக போராடுவது இல்லை என காங்கிரஸ் எம்.பி ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில் ஊழல்வாதிகளின் பொற்காலம் நடக்கிறது. ரூ. 777 கோடி செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதான சுரங்கப்பாதையை ஒரே ஆண்டில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பிரதமர் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்திலும் 'திட்டமிடுவதற்கு' பதிலாக 'மாடலிங்' தான் செய்கிறார். மேலும், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., மற்றும் ஐ.டி ஆகியவை ஊழலுக்கு எதிராக போராடுவது இல்லை. மாறாக ஜனநாயகத்திற்கு எதிராக போராடுகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

spr
பிப் 11, 2024 02:30

"அமலாக்கத்துறை, சி.பி.ஐ., மற்றும் ஐ.டி ஆகியவை ஊழலுக்கு எதிராக போராடுவது இல்லை" என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறுவதனை மறுக்க முடியாது பொதுவாக இவர் உளறுவது இயல்பு என்றாலும், இந்த முறை அவர் சரியாகவே பேசியிருக்கிறார்.


S.Ganesan
பிப் 10, 2024 23:02

அமலாக்க துறை, சி பி ஐ காங்கிரசுக்கு எதிராக போராடுவது என்பதும் ஊழலுக்கு எதிராக போராடுவதும் ஒன்றுதான். ஊழலின் உருவமே அவர்கள்தாம்


Gopalan
பிப் 10, 2024 21:18

திரு. ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரத்தை அளிக்க வேண்டும். காற்றில் சொன்னால் மட்டும் அவருடைய வார்த்தைகள் பாதிக்காது. முந்தைய அரசாங்க அமைச்சர்கள் ED ஐ எதிர்கொள்ள வரிசையில் உள்ளனர். திரு. ராகுல் காந்தி கூட ஊழல் வழக்கில் சிக்கி இருக்கிறார்.


M Ramachandran
பிப் 10, 2024 20:03

இந்த ஆள் எதைய்ய தான் முழுதாக தெரிந்து பேசுகிறார் எல்லாம் அறை குறை


Pandi Muni
பிப் 10, 2024 19:52

பப்பு கூறுவதுதான் சரி. I.N.D.I.A கூட்டணி கும்பல் இன்னமும் நடமாடிகிட்டுதானே இருக்கு.


Ramesh Sargam
பிப் 10, 2024 23:26

சரியாக கூறினீர்கள் நண்பரே.


பேசும் தமிழன்
பிப் 10, 2024 18:29

பப்பு வை யாராவது எழுப்பி விடுங்கள்...இன்னும் கான் கிராஸ் கட்சி ஆட்சி செய்த போது இருந்த நினைப்பில்.... பேசி வருகிறார்.


வெகுளி
பிப் 10, 2024 18:00

உண்மைதான்... அன் ஃபிட் பாலு, கேடி சகோதரர்கள் போன்றவர்கள் இன்னும் வெளியே இருப்பதை பார்த்தால் அமலாக்கத்துறை, சி.பி.ஐ., மற்றும் ஐ.டி ஆகியவை ஊழலுக்கு எதிராக முழுதாக போராடுவது இல்லை என்பதை முற்றிலுமாக மறுக்க முடியாது...


Pats, Kongunadu, Bharat, Hindustan
பிப் 10, 2024 17:50

ராகுலின் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிபிஐ, இடி இரண்டும் இனி வேகமெடுக்கும். கவலைப்படாதே சகோதரா...


S.Balakrishnan
பிப் 10, 2024 17:25

இந்த குற்றச்சாட்டுக்கு காரணம் அமலாக்க துறை மற்றும் CBI மெத்தனமாக செயல்படுவதும் நீதிமன்றங்கள் காலதாமதமாக வழக்கை முடித்து வைப்பதும் தான். இரு பெரும் துறைகளும் விரைந்து செயல் பட்டால் மக்களுக்கு சந்தோஷம். ராகுல் காந்தி இப்படி பேசவும் சந்தர்ப்பம் இருக்காது.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 10, 2024 17:24

அப்படி அவங்க நினைச்சிருந்தா உள்ளே இருக்கணும் கோவாலு ..........


மேலும் செய்திகள்



புதிய வீடியோ