| ADDED : அக் 25, 2025 09:23 AM
புதுடில்லி: டில்லியில் தேடப்படும் பிரபல குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.இதுபற்றிய விவரம் வருமாறு; டில்லியில் ஆயுதங்கள் கடத்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவன் கோக்கு பஹாடியா. போலீசாரால் தேடப்பட்டும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவன்.பஹாடியாயை போலீசார் தேடி வந்த நிலையில், மெஹ்ராலி பகுதியில் கூட்டாளிகளுடன் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் பஹாடியாவை பிடிக்க அங்கு விரைந்தனர்.போலீசாரின் வருகையை அறிந்த பஹாடியா, தப்பிச் செல்வதற்காக அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். பதிலுக்கு போலீசார் துப்பாக்கியால் சரமாரியாக கூட்டனர்.இதில் பஹாடியா காயம் அடைந்து விழுந்தான். உடனடியாக அவனை பிடித்த போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவனது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.இந்த துப்பாக்கிச் சண்டையில் போலீசார் தரப்பில் இரண்டு போலீஸ் அதிகாரிகளும், ஒரு காவலரும் லேசான காயம் அடைந்தனர். இதுகுறித்து டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.