உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 6 மணி நேரத்தில் எப்ஐஆர்: டாக்டர்களை பாதுகாக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு

6 மணி நேரத்தில் எப்ஐஆர்: டாக்டர்களை பாதுகாக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்கள் அல்லது பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் 6 மணி நேரத்திற்குள் போலீசில் புகார் அளிக்க வேண்டும் என அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்து உள்ளது.இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: சமீபத்தில் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து உள்ளன. சுகாதாரப் பணியாளர்கள் பணியின் போது அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். உடல்ரீதியிலான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இவை பெரும்பாலும் நோயாளிகள் அல்லது அவர்களின் உறவினர்களால் செய்யப்படுகின்றன. இனி பணியில் இருக்கும் சுகாதார பணியாளர்கள் தாக்குதலுக்கு அல்லது வன்முறைக்கு உள்ளானால் அடுத்த 6 மணி நேரத்திற்குள் போலீசில் புகார் அளிக்க வேண்டும். உடனே எப்ஐஆர் போடப்பட வேண்டும். தவறினால், இதற்கு சம்பந்தப்பட்ட அமைப்புகளின் தலைமையே பொறுப்பு. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Easwar Kamal
ஆக 16, 2024 22:49

பிஜேபி allatha மாநிலத்தில் ஏதாவது சின்னது/பெருசு எந்த ப்ரிச்சனை என்றாலும் தீயா வேளை செய்றானுவோ. அதுவா இவனுங்க மாநிலம்னா ப்ரிச்சனை வெளியில தெரியாம gamukama இருந்துவானுங்க. தனக்கு வந்த தக்காளி சட்னி mathavanunku வந்தா ரெத்தம். நல்ல இருக்கு உங்க ஆட்டம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 16, 2024 20:32

ஹத்ராஸ் அந்த பெண்ணின் உடலை கூட கொடுக்காமல் , எரிந்து சாம்பலை பொட்டலம் போட்டு கொடுத்த கூட்டம் , கிலேசரின் கண்ணீர் வடிக்கிறது


gmm
ஆக 16, 2024 19:53

மத்திய அரசின் உத்தரவு ஒன்றும் பலன் தராது. மாநில போலீசார் ஆளும் கட்சி மீறி ஏதும் செய்ய மாட்டார்கள். கருணாநிதி போலீஸ் மந்திரியாக இருக்கும் போது, இந்த அதிகார துஷ்பிரயோகம் அமுலுக்கு வந்தது. ?அதன் முன் எந்த ஒரு அரசு அலுவலகத்தில் / மருத்துவமனையில் பதிவேடுகள் பராமரிக்க வேண்டும். ஊழியர்கள் தவிர பிறர் உள் செல்ல விதிமுறைகள் உண்டு. போலிசார் போலிஸ் நிலையம், நீதிமன்றம் மட்டும் பாதுகாத்து வருகின்றனர். 6 நிமிடத்தில் FIR பதிவர். FIR உண்மை நிலையை பிரதி பலிக்காது. மத்திய அரசுக்கு மாநில போலீஸ் பற்றி இன்னும் புரியவில்லை.


Indian
ஆக 16, 2024 18:44

முதலை கண்ணீர் வடிக்கிறது.


அப்பாவி
ஆக 16, 2024 17:35

எல்லாம் நடந்து முடிஞ்சப்புறம் அதிரடி உற்றரவாம். இதுல சம்பந்தப் பட்டவங்களை சுட்டுத்தள்ளி அதிரடி காமிங்களேன்.


Gopalakrishnan
ஆக 16, 2024 17:26

கிழிஞ்சது....ஏற்கனவே ஏதோ அவர்கள் தர்மத்திற்கு பார்க்கிறோம் என்ன திமிரில் சிகிச்சை அளிக்கிறார்கள்.....இந்த உத்தரவு அவர்களை எங்கே கொண்டு போய் விடுமோ...


Hariharan S
ஆக 16, 2024 18:52

தயவு செய்து எந்த மருத்துவரையும் குறை சொல்லாதீர்கள் - அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள் மருத்துவமனை சுகாதாரம் மற்றும் வேலை பளு தயவு செய்து நேரில் சென்று அரசு மருத்துவ மனைகளில் பார்க்கவும்


ஆராவமுதன்,சின்னசேலம்
ஆக 16, 2024 19:10

நீ கருத்து போடுகிறேன் பேர்வழி என்று விஷத்தை கக்காதே...


Minimole P C
ஆக 18, 2024 07:31

Yes. Doctors who are in Govt. services also like other govt. servants. There need not special treatment for them as if they are from else where. As rightly said except few many do their services for name sake. But in corruption they are second to none.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை