உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இமாச்சலில் நிதி நெருக்கடி: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் காங்., அரசு தவிப்பு

இமாச்சலில் நிதி நெருக்கடி: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் காங்., அரசு தவிப்பு

சிம்லா:அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் வரவேண்டி ய சம்பளம் வரவில்லை, மாநில வரலாற்றிலேயே முதன் முறையாக நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக காரணம் கூறப்படுகிறது.இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் காங்., ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு உள்ளார். இங்கு முன்னதாக ஆட்சி செய்து வந்த பா.ஜ.,வை தோற்கடித்து காங்.,ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் மாநிலத்தில் நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் தர வேண்டிய சம்பளம் தேதி மூன்று ஆன பின்னரும் வழங்கப்பட வில்லை என கூறப்படுகிறது.மேலும் நிதி நெருக்கடி காரணமாக மாநில முதல்வர் மற்றும் தலைமை செயலக அதிகாரிகள் ஆகியோர் தங்களது சம்பளத்தை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க உள்ளதாக அறிவித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து மாநில எதிர்கட்சி தலைவர் ஜெய்ராம் தாக்கூர் கூறியதாவது: அரசு இப்பிரச்னையை உரிய தீவிரத்துடன் நடத்த வி்ல்லை. முதல்வர் சில சமயம் பொருளாதா நெருக்கடி என்றும், சில நேரம் இல்லை என்றும் கூறி வருகிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் அளித்த பொய்யான வாக்குறுதியால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை மற்ற மாநிலங்களும் பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Kasimani Baskaran
செப் 04, 2024 05:54

இலவசத்தை வைத்து வாழ்பவர்கள் ஒரு நாள் இது போலத்தான் திவாலாக வேண்டிவரும்.


Indhuindian
செப் 04, 2024 05:44

எல்லாவற்றிலும் முதல் இடத்தில இருக்கும் தமிஷ்னாட்டை பின் தள்ளி விட்டார்களே. ஆனால் இந்த வெற்றி தற்காலிகமானது தமிஷ் நாடு முதல் இடத்தை பிடிக்கும் நாள் வெறு தொலைவில் இல்லை


Ganapathy
செப் 04, 2024 01:06

என்ன கருணாநிதியின் திராவிட மாடல் "எலிக்கறி மட்டும் கஞ்சித்தொட்டி" ஐடியாவை திருட்டுத்திராவிடிய களவாணிகழக மொக்க பயலுக தன்னோட கூட்டணி களவாணி காங்கிரசுக்கு சொல்லலாம்?


கல்யாணராமன்
செப் 04, 2024 00:01

இங்கே மகளிர் உதவித்தொகை மற்றும் மகளிர் இலவச பஸ் பயணத்திற்கு மாதம் ஏறக்குறைய ரூ 200 கோடி செலவு செய்ய படுகிறது. கிட்டத்தட்ட இது தேர்தலில் ஓட்டு வாங்க கொடுக்கப்படும் லஞ்சத்திற்கு சமம். அரசு கஜானாவில் இருந்து ஒரு கட்சி ஜெயிக்க கொடுக்கப்படும் லஞ்சத்திற்கு சமம். இந்த நிலை தொடர்ந்தால் இன்று இமாச்சல் பிரதேசத்தில் நடப்பது நாளை தமிழ்நாட்டிலும் நடக்கும்.


கல்யாணராமன்
செப் 04, 2024 00:01

இங்கே மகளிர் உதவித்தொகை மற்றும் மகளிர் இலவச பஸ் பயணத்திற்கு மாதம் ஏறக்குறைய ரூ 200 கோடி செலவு செய்ய படுகிறது. கிட்டத்தட்ட இது தேர்தலில் ஓட்டு வாங்க கொடுக்கப்படும் லஞ்சத்திற்கு சமம். அரசு கஜானாவில் இருந்து ஒரு கட்சி ஜெயிக்க கொடுக்கப்படும் லஞ்சத்திற்கு சமம். இந்த நிலை தொடர்ந்தால் இன்று இமாச்சல் பிரதேசத்தில் நடப்பது நாளை தமிழ்நாட்டிலும் நடக்கும்.


Sivagiri
செப் 03, 2024 23:28

அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை மட்டும் கொடுத்து விட்டு பஞ்சபடி அலவன்சுகளை நிறுத்தி விடலாம் , அரசாங்கமே பஞ்சத்தில் ஆடும் பொழுது , ? ?


தாமரை மலர்கிறது
செப் 03, 2024 22:53

திமுக மற்றும் காங்கிரஸ் காரர்கள் இலவசம் இலவசம் என்று கூவி கூவி நாட்டை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். கர்நாடகம், தமிழகம், இமாச்சல, கேரளா மாநிலங்கள் திவாலாகிவருகிறது. விரைவில் காங்கிரஸ் மற்றும் திமுகவை தேர்தலில் போட்டியிடும் இலவச வாக்குறுதிகள் கொடுப்பதை நிறுத்த சுப்ரிம் கோர்ட் தடைபோட வேண்டும். இல்லையெனில் மத்திய ஒரு சட்டத்தை நிறைவேற்றி இந்தியாவை காக்க நேரிடும்.


குமார்
செப் 03, 2024 22:11

எல்லா சேனல்லையும் ஒரு காங்கிரஸ் ஆள் பொருளாதார நிபுணர் சொல்லிக்கிட்டு கதை விடுவார். அவர் பிஜேபிக்கு பொருளாதாரம் தெரியாது. நிதியமைச்சர் சரியில்லை, அது எதுன்னு கதை விடுவார். அந்த ஆள் பேரு சீனிவாசனோ என்னமோ, இப்போ அவர் போயி ஆலோசனை சொல்லி அவங்க கட்சி ஆள்ற மாநிலத்த காப்பாத்தலாமே!


Sridhar
செப் 03, 2024 21:55

This will be the status in TN too very soon with all freebies


GMM
செப் 03, 2024 21:31

முன்பு உணவு பஞ்சம். தற்போது நிலை மாற்றம். கல்வி, மருத்துவம், வழக்கு, அரசு சேவை பெரும்பாலும் இலவசம். ஓட்டு பெற / ஊழல் மறைக்க ஏராள இலவசம். எதற்கும் கடன். மாநிலம் மிக பெரிய செல்வ செழிப்பில் இருக்க வேண்டும். ஊதாரி செலவுகள் அதிகம். ஒரு அடி எல்லை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு செய்ய வக்கில்லை? மாநில சுயாட்சி கோரிக்கை. காங்கிரஸ், திராவிடம், ஆம் ஆத்மி ருசி கண்ட பூனை. இலவசம் வழங்கி வென்றது. நீதிமன்றம் இலவசம் vs சமூக சேவை என்று குழம்பியது. இலவச கட்சிகள் பயன்படுத்தி வெற்றி. மாநிலம் திவால். நீதிபதிகள் சம்பளம் முதல் தேதியில் கொடுத்து விடுவீர்கள். அடுத்து போலீஸ். இலவச திட்ட ஒப்புதல் வழங்கிய அதிகாரிகள் / ஊழியர்கள் பலனை பெற்று விட்டனர்.?


சமீபத்திய செய்தி