உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இனி ரயிலில் பொது பெட்டியில் உள்ள பயணிகளுக்கும் உணவு !

இனி ரயிலில் பொது பெட்டியில் உள்ள பயணிகளுக்கும் உணவு !

புதுடில்லி : ரயிலில் பொது பெட்டிகளில் உள்ள பயணிகளுக்கும் உணவு வழங்கிட ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. பொதுப் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்திய ரயில்வே ஒரு சிறப்பு வசதியைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சில குறிப்பிட்ட ரயில்களில் மட்டும் இந்த சேவை துவங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதிக ரயில்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெரும் துறையான ரயில்வேயில் நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயணித்து வருகின்றனர். தொழில்நுட்பம் வளர ரயில்களில் மேலும் பல்வேறு சிறப்பு சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ரயிலில் பயணிப்போருக்கு உணவு பெரும் முக்கியமாகவும் மற்றும் சுத்தமானதாகவும் தேவைப்படுகிறது. இதற்கென வந்தேபாரத், ஏ.சி., பொருத்தப்பட்ட ரயில்களில் பயணிகளுக்கு கூடுதல் பணம் உணவுக்கென வசூலித்து உணவு விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் சாதாரண மக்கள் பயணிக்கும் பொது ரயில் பெட்டிகளில் ரயில்வே மூலம் உணவு கிடைக்காமல் இருந்து வருவது பெரும் குறையாக உள்ளது. இந்நிலையில் மத்திய ரயில்வே ஐ.ஆர்.சி.டி.சி பொதுப் பெட்டிகளுக்கும் ஒரு புதிய வசதியைத் தொடங்கியுள்ளது. இதன் கீழ் பொதுப் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு அவர்களின் இருக்கைகளுக்கே பேக் செய்யப்பட்ட உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்படும். வெறும் ரூ.80க்கு நல்ல தரமான உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்படும். இந்த உணவில் சாதம், பருப்பு, ஏதேனும் ஒரு குழம்பு, காய்கறிகள், ரொட்டி, ஊறுகாய் ஆகியவை அடங்கும். உணவு சாப்பிட கரண்டிகள் வழங்கப்படும். ஒரு சராசரி பயணியின் வயிற்றை நிரப்பும் அளவிற்கு போதுமானதாக இருக்கும். அதிவேக எக்ஸ்பிரஸ் ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் ரயில்வேயால் பேக் செய்யப்பட்ட உணவு வழங்கப்படுவது போலவே, பேக்கிங்கும் மிகவும் நல்ல தரமாக இருக்கும். தற்போது 6 ரயில்களில் பொதுப் பெட்டி பயணிகளின் இருக்கையில் உணவு பரிமாறும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி தொடங்கியுள்ளது.

3 ரயில்களில்

கோமதி எக்ஸ்பிரஸ், ஸ்ரீநகர் கங்காநகர்- புது டில்லி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், கைபியத் எக்ஸ்பிரஸ், அயோத்தி எக்ஸ்பிரஸ், பரானி-லோனி எக்ஸ்பிரஸ் மற்றும் தர்பங்கா-புது டில்லி குளோன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் உணவு சேவை துவங்கி உள்ளது. மிக விரைவில் வாரணாசி, கோரக்பூர் மற்றும் லக்னோ போன்ற 3 ரயில்களிலும் வழங்கப்பட உள்ளது. இந்த ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இப்போது மலிவு விலையில் அவர்களின் இருக்கைகளில் நல்ல தரமான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்கிறது. இந்த வசதியை விரைவில் அதிக ரயில்களில் செயல்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதனால் அதிகமான பயணிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

V.Hari Theertham
ஜூலை 25, 2025 20:16

Already the quality of food supplied to passengers even in vande bharat trains are extremely poor. First try to improve the quality and hygiene Then think about extending to normal passengerslity


Damodaran G
ஜூலை 25, 2025 17:34

80 ரூபாய் இன்றைய விலைவாசிக்கு உட்பட்டதாக இருந்தாலும் பயணசீட்டின் விலையை ஒப்பிடும்போது பயணியர்கள் வாங்கும் சக்தி குறைவாகவே தோன்றுகிறது. 50 ருபாய்க்கு உட்பட்டதாக இருந்தால் சிறந்ததாக இருக்கும். பயணியர் தரம் இன்னமும் உயரவில்லை.


theruvasagan
ஜூலை 24, 2025 18:53

உணவு கிடைக்கும். ஆனால் தரம் சுவை சுகாதாரம் என்றுமே உயராது. ரயிலானாலும் சரி. விமானமானாலும சரி. காசையும் கொடுத்து தேளையும் கொட்டிக்கொண்ட கதைதான்


V RAMASWAMY
ஜூலை 24, 2025 18:00

Not a good thought. When even reserved compartments are dirty with foul smell, overcrowded unclean general compartments will become more dirty with food particles strewn all over with the unhygienic attitude of public, inviting insects and rodents making the general compartments more dirtier spreading diseases. Better give it up.


panneer selvam
ஜூலை 24, 2025 16:58

Choose external catering once you have booked the ticket .


visu
ஜூலை 24, 2025 16:48

தரமான உணவு வழங்காவிட்டால் அனுமதி ரத்து என்று உறுதி இருந்தால் நல்ல திட்டம்


skrisnagmailcom
ஜூலை 24, 2025 16:17

தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ஜி டி போன்ற நெடுந்தூர இரயில்களில் மதிய உணவு _140 கு கிடைக்கிறது தரம் சுவை சரியல்ல தேனீர் என வென்னீர் கேடுக்கிறார்கள் இரவு உணவு அதை விட மோசம் எல்லாம் வட நாட்டு ஒப்பந்ததாரர்கள் கொள்ளையடிக்க வழி


Keshavan.J
ஜூலை 24, 2025 15:56

In Railways in General compartments more people will be travelling than stipulated 102 seats. How will they have space to eat the food.


Jack
ஜூலை 24, 2025 15:54

சாப்பாட்டுடன் ஒரு பன்னீர் sabji என்று கேட்காமலேயே கொடுத்துவிட்டு 125 ரூபாய் கேட்கிறார்கள் ...டாய்லெட் பைப் தண்ணீரில் சமைப்பது டி போடுவது ..ஊறவைத்த கொண்டக்கடலைகள் மீது கரப்பு குடியிருப்பது ..விற்காத முட்டை பிரியாணியிலிருந்து முட்டையை மட்டும் எடுத்து அடுத்த வேளை பிரியாணியில் நிரப்புவது இதெல்லாம் அதிகாரிகளுக்கு தெரியாத விஷயமா ?


Manalan
ஜூலை 24, 2025 13:45

ஆனால் ரயில்வேயால் தரமான உணவுகளை வழங்க இயலாது.