உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டவிரோத சுரங்க தொழில் மாஜி மத்திய அமைச்சருக்கு ரூ.25.30 கோடி அபராதம்

சட்டவிரோத சுரங்க தொழில் மாஜி மத்திய அமைச்சருக்கு ரூ.25.30 கோடி அபராதம்

கலபுரகி: சட்டவிரோதமாக சுரங்க தொழில் செய்த முன்னாள் மத்திய அமைச்சர் பகவந்த் கூபா, 25.30 கோடி ரூபாய் அபராதம் செலுத்தும்படி, காலகி தாசில்தார் 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளார். கர்நாடக மாநிலம், பீதர் தொகுதி பா.ஜ.,வின் முன்னாள் எம்.பி., பகவந்த் கூபா. பிரதமர் நரேந்திர மோடியின் முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். கலபுரகி மாவட்டம், சித்தாபுரா தாலுகாவின், வச்சா கிராமத்தில் 2 ஏக்கரில் சுரங்க தொழில் நடத்த, மாநில அரசிடம் அனுமதி பெற்று உள்ளார். ஆனால், 8 ஏக்கருக்கும் அதிகமான பகுதியில், சட்டவிரோதமாக சுரங்க தொழில் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, சஞ்சீவ் குமார் திப்பண்ணா ஜவகர் என்பவர், சுரங்கம், நில ஆய்வியல் துறையில் சில மாதங்களுக்கு முன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், காலகி வருவாய் அலுவலர்களுடன் இணைந்து சுரங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, 2014 ஜூலை 19 முதல், 2019 ஜூலை 18 வரை, சட்டவிரோத சுரங்க தொழில் நடந்திருப்பது கண்டறியப்பட்டது. இதை பற்றி காலகி தாசில்தாரிடம் அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். அறிக்கை அடிப்படையில், சட்டவிரோத சுரங்க தொழில் நடத்தியதால், 25.30 கோடி ரூபாய் அபராதம் செலுத்தும்படி உத்தரவிட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் பகவந்த் கூபாவுக்கு, காலகி தாசில்தார் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீசை எதிர்த்து, சட்டப்போராட்டம் நடத்த பகவந்த் கூபா முடிவு செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

c.mohanraj raj
அக் 26, 2025 12:02

தவறாக தொழில் செய்திருந்தால் எந்த கட்சிக்காரர் ஆக இருந்தாலும் அவராலும் கட்டட்டும் அதில் தவறில்லை இது மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும் ஆனால் இது உள்நோக்கம் கொண்டதாக இருக்கக்கூடும்


KOVAIKARAN
அக் 26, 2025 07:13

இவர் ஊழல் செய்ததால் தான் அடுத்த தேர்தலான 2019 ல் அவருக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை. அந்த சமயத்தில் கர்நாடகாவிலும் பாஜக ஆட்சிதான் நடைபெற்றது. எனவே புகார் வந்தவுடனே, மாநில பாஜக அரசு அவர்மீது உ6டனே நடவடிக்கை எடுத்தது. அதன் விளைவுதான் இப்போது அந்த ரூ. 25.30 கோடி அபராத நோட்டீஸ். தமிழகத்திலும் இவ்வாறு கனிமவளக் கொள்ளைகள் ஏகப்பட்டது நடைபெற்றுள்ளது. ஏதாவது நடவடிக்கை உண்டா இங்கே?


அப்பாவி
அக் 26, 2025 06:08

சௌக்கிதாருக்கு தெரிய வாய்ப்பில்லை...


SANKAR
அக் 26, 2025 02:28

after going thro washing machine governor post parcel


Venugopal, S
அக் 26, 2025 19:00

டீ மூ கா வுக்கு வந்த ஒடனே கரூர் நபருக்கு kozutha துறையில் அமைச்சர் பதவி வழங்கி ஒவ்வொரு முறையும் daleevaru அவரைப் புகழ்ந்து புளகாங்கிதம் அடைந்து வருகிறது. அதைப் போலவா sankar முட்டு?


ஜெய்ஹிந்த்புரம்
அக் 26, 2025 01:41

மே நஹி காவூங்கா, கிஸி கோ கானே நஹி தூங்கா - பிரதமர் மோடி.. எப்படி சாப்பிட்டான் இந்த மாஜி ??


SANKAR
அக் 26, 2025 00:31

oru governor post parcel after going thro washing machine


முக்கிய வீடியோ