உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேஜஸ் போர் விமான இன்ஜின் 2 ஆண்டுக்கு பின் ஒப்படைப்பு

தேஜஸ் போர் விமான இன்ஜின் 2 ஆண்டுக்கு பின் ஒப்படைப்பு

புதுடில்லி : தேஜஸ் போர் விமானத்திற்கான முதல் இன்ஜினை, இரண்டு ஆண்டுகள் தாமதத்திற்கு பின் அமெரிக்க நிறுவனம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. நம் ராணுவத்துக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய தேஜஸ் மார்க் 1ஏ போர் விமானங்களை தயாரிக்க, கர்நாடகாவின் பெங்களூரை சேர்ந்த ஹெச்.ஏ.எல்., எனப்படும், 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்' நிறுவனத்துடன், 2021ல் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. இந்த விமானத்தின் இன்ஜினை, அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் ஏரோஸ்பேஸ் நிறுவனம் வடிவமைத்து தர ஒப்பந்தம் மேற்கொண்டது.இதற்கிடையே, புதிய இன்ஜின்களை ஒப்படைப்பதில் அந்நிறுவனம் தொடர்ந்து காலம் தாழ்த்தியதால், ஒப்பந்தத்தின்படி இதுவரை நம் விமானப்படையிடம் தேஜஸ் போர் விமானங்களை ஹெச்.ஏ.எல்., நிறுவனம் ஒப்படைக்கவில்லை.இதை, நம் விமானப்படையின் தலைமை தளபதி வெளிப்படையாகவே பல முறை கூறியிருந்தார். சமீபத்தில், அமெரிக்காவுக்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசியபோது, தேஜஸ் போர் விமான உற்பத்தி தாமதம் குறித்தும் எடுத்துரைத்தார்.இந்நிலையில், தேஜஸ் போர் விமானத்திற்கான முதல் இன்ஜினை, அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் ஏரோ ஸ்பேஸ் நிறுவனம், ஹெச்.ஏ.எல்., நிறுவனத்திடம் நேற்று முன்தினம் ஒப்படைத்தது. இதுகுறித்து ஹெச்.ஏ.எல்., நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'எங்களிடம் இன்ஜின் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், விரைவில் உற்பத்தியை துவக்கி, நம் விமானப் படையிடம் மேம்படுத்தப்பட்ட தேஜஸ் போர் விமானங்களை அளிப்போம்.'ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 2028ம் ஆண்டுக்குள் போர் விமானங்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுப்போம். இதற்காக, உற்பத்தி திறனை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Varuvel Devadas
மார் 27, 2025 11:07

Fitting imported engines for Thejas aeroplane fighter plane is known as indigenous Indian fighter flight. What a great invention It is ironic to state that India produces world-class technocrats through the IITs, IISc, etc., and exports them for a pittance, and these technocrats work for their nation wherever they are exported. Later, India imported technology from the same group that produces high-tech at a higher cost. Is it Indias policy of development? It is known as stupidity. This stupid activity has been continuing since the day 1 India got its freedom. This should be looked into seriously, and plausible laws should be enacted in the parliament to protect our country from the brain drain, which serves other nations.


Yasararafath
மார் 27, 2025 10:05

மகிழ்ச்சி


ratheesh T
மார் 27, 2025 08:54

கிகி


Nagaraj A
மார் 27, 2025 07:42

மின்சார இயந்திரத்தின் மூலம் உந்து விசை கொடுக்கும் திட்டம் என் ஆய்வில் உள்ளது தற்போது இந்தஇயந்திரத்துக்கு தேவையான மின்சாரம் வழங்கும் இயந்திரம் செய்துகொண்டுருக்கிறேன் பணம் பற்றாக்குறைனால் தாமதம் ஆகிறது இதை செய்துகாட்டிய பின் மத்திய அரசு எனக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தால் நாம் நினைத்தை சாதிக்கமுடியும்


N Sasikumar Yadhav
மார் 27, 2025 09:34

அண்ணாமலை அவர்களை அணுகினால் உங்க தேவையும் நாட்டின் தேவையும் உடனடியாக நிறைவேறும்


Kasimani Baskaran
மார் 27, 2025 05:22

சிறப்பு.. ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் போடவேண்டும். இல்லை என்றால் அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்கவேண்டும். குறைந்த பட்சம் உள்ளூரில் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்க முயலவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை