உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திராவில் ரூ.88 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது கூகுள்

ஆந்திராவில் ரூ.88 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது கூகுள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் தகவல் மையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு திட்டங்களில் கூகுள் நிறுவனம் ரூ.88 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: கூகுள் தகவல் மையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நிதி சீர்திருத்தம் செய்யப்பட்ட பிறகு, இந்தத் திட்டங்களுக்காக விசாகப்பட்டினத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் ஒரேயடியாக 88 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது. விசாகப்பட்டினத்தின் தார்லுவாடா, அடவிவரம் மற்றும் ராம்பில்லி ஆகிய இடங்களில் இந்த மையங்கள் அமைய உள்ளன. 2047 க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறிவிடும். அதில் முதன்மையான மாநிலமாக ஆந்திரா இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

V. Rajan
அக் 14, 2025 15:36

நாயுடு ஒரு விஷனரி லீடர் . கடின உழைப்பாளி . மாநிலத்தை முன்னேற்ற நினைப்பவர்.


Venugopal S
அக் 11, 2025 10:28

இதே விஷயத்தை தமிழக முதல்வர் சொல்லி இருந்தால் பொய் என்று வாய் கூசாமல் சொல்லுவார்கள்,இதை அப்படிச் சொல்ல முடியாதே!


Priyan Vadanad
அக் 11, 2025 03:18

முதல்வர் சந்திரசேகரன் இந்த மாதிரி விஷயங்களில் வல்லவர். முதல்வர் ஸ்டாலின் அவர் பக்கத்தில் நெருங்க முடியாது.


vivek
அக் 11, 2025 06:03

.இன்னைக்கு இருநூறு வேண்டாமா...


Ramesh Sargam
அக் 11, 2025 01:56

நாயுடு அவர்களே, முன்பு ஆட்சியில் செய்த அதே தவரையே மீண்டும் செய்கிறீர்கள். மாநிலத்தை வளர்ப்பதற்கு வெறும் IT துறை மீது மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. அப்படி உங்களுடைய முந்தைய ஆட்சியில் செய்துதான் அடுத்து உங்களால் ஆட்சியை பிடிக்கமுடியவில்லை. இப்பொழுது ஆட்சியில் உள்ளீர்கள். இந்த முறையாவது IT துறைக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை, சொல்லப்போனால் அதைவிட அதிக முக்கியத்துவத்தை விவசாயத்துக்கு கொடுக்கவேண்டும். சாப்பாடு இல்லையென்றால் IT மற்றும் எந்த துறையும் இல்லை என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். விவசாயம், நிலம், நீர் இல்லையென்றால் சாப்பாடு இல்லை.


Ravi
அக் 10, 2025 23:53

நாயுடு காரு எங்ககிட்டேவா?ஆந்திரால்லாம் சும்மா சுஜுபி! வருது பார், வருது பார்! ஜெர்மனிலேர்ந்து 888 ஆயிரம் கோடி எங்க அப்பா ஈர்த்த முதலீடு வருது பார். அப்ப தெரியும் சந்திர பாபு நாயுடுவா? இல்ல முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினா? யாரு பெரியவருன்னு ?


Sun
அக் 10, 2025 23:43

நாயுடு காரு இது டிரம்புக்கு தெரியுமா? தெரிஞ்சா ஆந்திராவ அமெரிக்காவோட சேர்க்கனும்னு சொல்லப் போறரு.


vivek
அக் 11, 2025 06:04

சில அறிவாளிகள் சில பேர்தான் இருப்பார்கள்


Kannan Chandran
அக் 10, 2025 23:36

அமெரிக்கன் நிறுவனத்தை இந்தியாவில் இருந்தே டீல் செய்தால் அது மற்ற மாநில முதல்வர், பல ஆண்டுகளாக இங்கேயே இருக்கும் இந்திய நிறுவனத்தை அமெரிக்கா சென்று டீல் செய்தால் அது விடியல் முதல்வர்.


ஆரூர் ரங்
அக் 10, 2025 22:00

ஈர்க்கவா சென்றார்? முதலீடு செய்யவல்லவா போனார் ?. பிச்சை போன்ற ஆரியரின் தயவு அவருக்குத் தேவையில்லை.


Easwar Kamal
அக் 10, 2025 21:27

உலகில் உள்ள தலை சிறந்த CEO சுந்தர் பிச்சை போன்றோரை அழைத்து மரியாதை செய்து அவர்களுக்கு என்ன வித உதவிகள் உண்டோ அதை எல்லாம் செய்தால் கண்டிப்பாக தமிழகம் பக்கம் வருவார். சுடலை மட்டும் அல்ல ஜெயாவும் இதில் அடங்குவர். இவர்களுக்கு எல்லாம் அவர்கள் வந்து இவர்களை பார்த்து இந்த கூட்டங்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தால் ஏதாவது செய்வார்கள். அது சரி இந்த சுடலை அமெரிக்கா போன பொது சுந்தர் பிச்சை எல்லாம் பார்த்த மாதிரி தெரிய வில்லையே. சைக்கிளில் நல்லா ஊரை சுற்றி பார்த்த படங்கள் தான் நிறைய கண்ணில் பட்டது. இவர்கள் எல்லாம் அந்த நாயுடுக்கு ஏதாவது மிச்ச மீதி பாலங்கள் இருந்தால் பெயரை வைத்து போஸ் கொடுக்க சொல்லுங்கள்.


Venkataraman
அக் 10, 2025 21:14

இந்த மாதிரியான பெரிய முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வர வாய்ப்பில்லை. இங்கு வரும் முதலீடுகள் கருணாநிதியின் குடும்பத்திற்காக கொண்டுவரப்படுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை