உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை: வாக்குறுதிகளை அள்ளி விடுகிறார் தேஜஸ்வி

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை: வாக்குறுதிகளை அள்ளி விடுகிறார் தேஜஸ்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரில் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.பீஹாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. நவ., 6ல் 121 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், நவ., 11ல் மீதமுள்ள 122 தொகுதிகளில் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. இவற்றில் பதிவாகும் ஓட்டுகள் நவ., 14ல் எண்ணப்படுகின்றன. இதனையடுத்து தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என கட்சிகள் மும்முரமாக உள்ளன.இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் 'மகாபந்தன்' கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: பீஹாரை எப்படி முன்னேற்றப் போகிறோம் என மக்கள் கேட்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக மாநிலத்தை ஆட்சி செய்யும் நிதீஷ்குமார் அரசு, வேலைவாய்ப்பின்மை பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளதை உணரவில்லை.ஐக்கிய ஜனதா தளமும், பாஜவும் வேலைவாய்ப்பு உறுதி வழங்காமல், அதற்கான நிதியுதவி குறித்த அறிவிப்பை வெளியிடுகின்றன. பீஹாரில் உள்ள அரசு வேலையில் இல்லாத குடும்பம் இருந்தால், அவர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். இதற்காக ஆட்சிக்கு வந்த 20 நாளில் புதிய சட்டம் கொண்டு வருவோம். 20 மாதங்களில், அரசு வேலையில்லாத குடும்பம் பீஹாரில் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம். தகவல் அடிப்படையில் இந்த வாக்குறுதியை அளிக்கிறேன். இது எனது வாக்குறுதி. இதனை நிச்சயம் நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

SIVA
அக் 10, 2025 21:43

இங்கு டாஸ்மாக் அரசு எடுத்து நடத்துவது போன்று அங்கு பீடா கடைகளையும் , பாணி பூரி கடைகளையும் அரசுடமை ஆகி வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை கொடுங்கள் ......


ராமகிருஷ்ணன்
அக் 10, 2025 10:34

இந்தாண்டு மிக சிறந்த மன்னர் என்ற பட்டத்தை கொடுத்து பெருமை படுத்துவோம்.


சந்திரசேகர்
அக் 10, 2025 08:43

சராசரியாக ஒரு கோடி குடும்பத்திற்கு தலா ஒருவருக்கு இருபதாயிரம் சம்பளம் கொடுத்தால் மாசம் இருபதாயிரம் கோடிகள் செலவாகும். இதன் மூலம் ஊர்க்காவல் படை மற்றும் ஆசிரியர்கள் அடிப்படை தொழிலாளிகள் கட்டுமான தொழிலாளி என எல்லா துறைகளிலும் ஊழியர்களை சேர்த்து எல்லா வேலைகளையும் அரசாங்கம் எடுத்து செய்ய வேண்டும். டெண்டர் விட வேண்டிய அவசியம் இல்லை. தனியார் நிறுவனத்திற்கு தொழிலாளிகளை சப்ளை செய்யலாம்


ஆசாமி
அக் 10, 2025 06:43

அப்பா போல பிள்ளை.


G Mahalingam
அக் 09, 2025 21:33

யாராவது கோர்ட்டில் வழக்கு தொடரவும். எப்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் அல்ல அரசு வேலை கொடுப்பார்கள் என்று அந்த திட்டத்தை சொல்ல வேண்டும். இந்தியா முழுவதும் கூட்டினால் கூட 2 கோடி அரசு ஊழியர்கள் கிடையாது. பீகாரில் மொத்த வாக்காளர்கள் 6.5 கோடி. இதில் குடும்பங்கள் குறைந்தது 2 கோடி இருக்கும்.


Nathansamwi
அக் 09, 2025 21:09

முதலில் ஜி யும் கூட இலவசம் வழங்கமாட்டேன் என்றார் ....ஆனால் இப்பொது ஜி யும் மாறி விட்டார் ...


தத்வமசி
அக் 09, 2025 21:05

இருக்கும் ஊழியர்களுக்கு சரியாக சம்பளம், படி, எல்லாம் தடையில்லாமல் கொடுக்கவும். புதிதாக வருபவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு பணம் இருக்கிறதா ? இல்லை தமிழகம் போல இருபதாயிரம், முப்பதாயிரம் என்று சம்பளம் கொடுத்து வேலைக்கு அமர்த்தப் போகிறீர்களா ? ஆயிரம் ரூபாயிக்கே நாக்கில் நுரை தள்ளுகிறது. இதில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பல லட்சம் சம்பளம் எப்படி வழங்க முடியும் ? அட நாடும் கஜானாவும் எப்படி போனால் என்ன ? திராவிடம் சென்ற வழியில் ஆட்சியை பிடிப்போம் என்று நினைக்கிறார்கள். வாக்குறுதிகளை அள்ளி வீசுங்கள்.


C.SRIRAM
அக் 09, 2025 20:48

. எப்படி இவ்வாளவு பேருக்கு அரசு வேலை ? . இவனை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது


பேசும் தமிழன்
அக் 09, 2025 19:02

நீங்கள் இதுவரை பிடுங்கிய ஆணிகள் போதும்..... இனி ஆணியே புடுங்க வேண்டாம்.... போதுமடா சாமி.... மாட்டுக்கு புண்ணாக்கு வாங்கியதில் மட்டும் 900 கோடி ஊழல் !!!


ஆரூர் ரங்
அக் 09, 2025 18:46

ரூபாய்க்கு மூணு படி, குடும்பத்துக்கு ரெண்டு ஏக்கர் லிஸ்டில் இன்னொரு உருட்டு. எல்லாத்துக்கும் தமிழ்நாடுதான் முன்னோடி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை