உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகரிக்கும் வெளிநாட்டு கல்வி மோகம்: குழந்தைகளுக்காக எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் பெற்றோர்

அதிகரிக்கும் வெளிநாட்டு கல்வி மோகம்: குழந்தைகளுக்காக எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் பெற்றோர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: குழந்தைகளை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பிய மற்றும் அனுப்பும் பெற்றோர்களில் 78 சதவீதம் பேர், தங்களது பணி ஓய்வுக்கு பிறகு தேவையான பணத்தை சேமித்து வைப்பது இல்லை என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.முன்பு பெரும் பணம் படைத்தவர்கள் மட்டுமே, தங்களது குழந்தைகளை வெளிநாட்டிற்கு சென்று படிக்க வைத்தனர். தற்போது இந்த நிலை மாறி உள்ளது. ஏராளமான இளைஞர்கள் வெளிநாட்டில் படிக்க வேண்டும் என விரும்புகின்றனர். அவர்களின் கனவை பெற்றோர்கள் நிறைவேற்றி வருகின்றனர். அத்தகைய பெற்றோர்கள் குறித்து எச்எஸ்பிசி வங்கி ஆய்வு ஒன்றை நடத்தியது. 1,456 பேரிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது.அதில், வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பிய மற்றும் அனுப்ப உள்ள பெற்றோர்களில் 78 சதவீதம் பேர், பணி ஓய்வுக்கு பிறகு தேவையான பணத்தை சேமித்து வைப்பது இல்லை என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் அதற்கான திட்டமிடலை விட குழந்தைகளின் கல்வியே முக்கியம் என கருதுகின்றனர்.2025ம் ஆண்டு வெளிநாடுகளில் 20 லட்சம் இந்திய மாணவர்கள் படிப்பார்கள் என கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதை போல் செலவும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. பெற்றோர்கள் தங்கள் ஓய்வுக்கு பிறகு தேவைக்காக சேமித்துவைத்த பணத்தில் 64 சதவீதத்தை தங்களது குழந்தைகள் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளில் 3 அல்லது 4 ஆண்டு பட்டப்படிப்புக்கு மட்டும் செலவு செய்கின்றனர்.53 சதவீதம் பேர் மட்டுமே, தங்களது குழந்தைகளின் கல்விக்கு தேவையான பணத்தை சேமித்து வைக்கின்றனர். எஞ்சிய 48 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் 51 சதவீதம் பேர் கல்வி உதவித்தொகையை நம்பி உள்ளனர். 40 சதவீதம் பேர் கடன் வாங்குகின்றனர். சிலர், குழந்தைகளின் படிப்புக்காக சொத்தை விற்கவும் செய்கின்றனர். இவ்வாறு அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Pichai
செப் 12, 2024 07:12

The trend has now changed. Previously parents used to send their children abroad to do post graduation in reputed universities and now they are sending for graduation. After completion of their studies, based on their merits they are being ed in very reputed companies such as Microsoft, Google, Apple etc. This is mainly due to non recognising the merit and opportunities available. The political parties in order to capture power are solely responsible for this. This trend will continue for ever.


Balamurugan
செப் 11, 2024 23:32

இந்தியாவில் இட ஒதுக்கீடை ஒழித்தால் வெளிநாடுகளில் சென்று படிக்கும் எண்ணிக்கை குறையும்.


Duruvesan
செப் 11, 2024 23:00

அந்த முரசொலி உபி இனியன் என்ற மூர்கனுக்கு போட்டது


குரு, நெல்லை
செப் 11, 2024 22:35

எனது நண்பர் ஒருவர் பொதுத்துறை வங்கியில் பணியாற்றுகிறார் அவரது வங்கியில் இது குறித்து நான் விசாரிக்க போது அந்த வங்கியானது உலகின் தலைசிறந்த 169 யூனிவர்சிட்டி அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு பல்வேறு நாடுகளில் குறிப்பாக ஆஸ்திரேலிய கனடா இங்கிலாந்து ஜெர்மனி அமெரிக்கா நியூசிலாந்து போன்ற நாடுகளில் உள்ள தலைசிறந்த யுனிவர்சிட்டிகள் நமது மாணவர்களை வரவேற்கின்றார்கள் இதற்கு முழு முதல் காரணம் அந்த நாட்டில் நிலவும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை ஆகும் கோவிட்டுக்கு முன்பு இந்த நிலை உலகில் இல்லை ஆனால் தற்போதைய நிலையில் மிகவும் வளர்ந்த நாடுகள் என்று கருதப்படும் அமெரிக்கா கனடா ஜெர்மனி இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இன்றும் முழுமையாக பொருளாதார வீழ்ச்சியிலிருந்து வேலை வர முடியவில்லை. ஆகையால் அங்கே உள்ள அனைத்து யுனிவர்சிட்டிகளும் கலந்து ஆலோசித்து ஒருமனதாக வெளிநாட்டு மாணவர்களை குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு வரவேற்கின்றனர் சுமார் பத்து வருடம் முன்பு நான்கு லட்சம் ரூபாய் கடன் தருவதற்கு யோசித்த தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகள் இப்பொழுது தாராளமாக கண்ணை மூடிக்கொண்டு 40 லட்சம் ரூபாய் வரை எந்த பிணயமும் இல்லாமல் செக்யூரிட்டியும் இல்லாமல் கடன் அளிக்கின்றனர் இதில் 20 லட்ச ரூபாய் அந்த யூனிவர்சிட்டிக்கும் பாக்கி இருபது லட்ச ரூபாய் அங்கு தங்குவதற்கும் செலவிடப்படுகின்றது இது குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்த போது நமது நாட்டின் சிறந்த பொதுத்துறை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா யூனியன் பேங்க் ஆப் இந்தியா பேங்க் ஆப் பரோடா கனரா பேங்க் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் தனியார் வங்கிகளான ஆக்சிஸ் பேங்க் ஹெச்டிஎஃப்சி ஐசிஐசிஐ போன்ற வங்கிகள் இதற்கு சிறப்பான முகாம்களை ஏற்படுத்தி கடந்த 2022ல் மட்டும் 4 லட்சம் மாணவர்கள் மேலே குறிப்பிட்ட நாடுகளுக்கு சென்றனர். 2023 இது ஒன்பது லட்சம் என்ற அளவை தாண்டி விட்டது 2020 நாளில் இந்த மாதம் வரை சுமார் பதினோரு லட்சம் மாணவர்கள் வெளிநாடு சென்றுள்ளனர் இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இங்கே தலைசிறந்த கல்லூரிகளில் பிஇ மற்றும் பி டெக் போன்ற கல்விகளை படித்துவிட்டு இங்கே வேலை கிடைக்காமல் ஏஜென்சி மூலம் கடன்களை பெற்று வங்கியில் கடன்களை பெற்று வெளிநாடு சென்றது செல்கின்றனர் இது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகும் அங்கே எனது நெருங்கிய நண்பர்கள் அனைவரிடமும் விசாரித்த போது அவர்கள் கூறும் செய்தியானது மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளது ஒரு மாணவன் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களை அழைத்துக் கொண்டு மூன்று வருடங்கள் ஸ்டூடன்ட் விசாவில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து அந்த யூனிவர்சிட்டி அவர்களிடம் இருந்து 40 லட்சம் ரூபாய் வரை பணத்தினை பெற்றுக்கொண்டு கல்வி போதிக்கின்றது ஆனால் வேலை உண்டா என்றால் அது இல்லை இது நமது மாணவர்களுக்கு பெரும்பாலும் தெரியவில்லை அவர்கள் எதிர்பார்ப்பதை எல்லாம் என்னவென்றால் வெளிநாட்டுக்கு செல்லலாம் இரண்டு வருடம் படிக்கலாம் படித்துக் கொண்டே உழைக்கலாம் என்ற நிலையில் செல்கின்றனர் உண்மை என்றால் என்னவென்றால் படித்துக்கொண்டே வேலை பார்ப்பது என்பது இரண்டு வருடங்கள் முதல் மூன்று வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் அதன் பின் அவர்களுக்கு வேலை வழங்கும் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கனடா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் கடந்த வருடம் மட்டும் கனடாவில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர் இன்னும் நமக்கு புத்தி இல்லை புத்தி வரவில்லை. ஒரு வருஷ என்றால் அனைவரும் சென்று விழும் தவளை கூட்டம் போல மேலே குறிப்பிட்ட நாடுகளுக்கு சென்று படிக்கின்றனர் 4 இலட்சம் ரூபாய் கடன் கட்டவே நமது முந்தைய மாணவர்கள் தடுமாறிய இந்த காலகட்டத்தில் இன்னும் ஐந்து வருடங்கள் பொறுத்து இந்த மானக்கர்கள் தலையில் ஒவ்வொரு மனிதர்கள் தலையிலும் சுமார் 60 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை கடலும் வட்டியும் சேர்ந்து இருக்கும் இதை அடைக்க முடியும் என்றால் முடியாது இவர்கள் அப்படி என்னதான் வேலை படிக்கின்றார்கள் என்று எண்ணினால் 12 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான அடிஷனல் கோர்ஸ் எனப்படும் மாஸ்டர் எம் எஸ் சி போன்ற மேலாண்மை கல்வியை கற்கின்றனர். படித்து முடித்த பின் எவ்வளவு சம்பளம் வரும் என்றால் ஒரு லட்சம் ரூபாய் வந்தாலே பெரிய விஷயம். இதை அறியாமல் இங்குள்ள பெற்றோரும் தங்கள் மகன் வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்ற மனக்கணக்கில் கல்வி கடன் பெற்ற வருகின்றனர். பத்து வருடங்களுக்கு முன்பு பெற்ற கடமையை அடைக்க முடியாமல் திராவிட ஆட்சியை நம்பி அதில் முக்கியமான வாக்குறுதியாக கூறப்பட்ட கல்வி கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்ற வாக்கினை நம்பி ஏமாந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சுமார் 28 ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் உள்ளனர் அவர்கள் வாங்கிய கடனானது தோராயமாக 40 ஆயிரம் கோடி ரூபாய் வட்டியும் முதலுமாக உள்ளது இந்த 40 ஆயிரம் ரூபாய் அடக்கவே இந்த அரசு மூன்று வருடங்களாக போராடி அந்த வாக்குறுதியை மறக்கடிக்க செய்துவிட்டது. இப்பொழுது இந்த மாணவர்கள் செய்யும் தவறான செயலால் பிற்காலத்தில் அவர்களது பெற்றோரும் அவர்களும் கடும் துன்பத்தினை சந்திக்க நேரிடும். உதாரணமாக ஒருவர் 40 லட்சம் செலவு செய்து ஒரு வீட்டினை வாங்கினால் என்றால் அவருக்கு குறைந்தபட்ச வருமானமாக மாதம் பத்தாயிரம் கிடைக்கும் வருடத்திற்கு ஒன்றாய் முதல் இரண்டு லட்சம் வரை கிடைக்கும். ஆனால் இந்த கல்வி இந்தக் கடன் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்குமா என்றால் அது அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் பத்து பேர் இருக்கும் இடத்தில் இரண்டு முதல் மூன்று பேருக்கு மட்டுமே நல்ல வேலை கிடைக்கிறது இப்பொழுது லட்சக்கணக்கில் வேலை தேடி வெளிநாடு சென்றாலும் பரவாயில்லை படிக்க சென்று அங்கே பல இன்னல்களை சந்தித்து திரும்ப இவர்கள் அங்கேயே இருந்து வர முடியாமல் இங்கேயும் வந்தாலும் அதற்கு தகுந்த ஊதியம் கிடைக்காமல் அல்லது படுவது உறுதி. இது செய்தி அல்ல பல நண்பர்கள் வங்கித் துறை நண்பர்கள் முன்னாள் என்னால் நண்பர்கள் மூலம் திரட்டிய தொகுப்பு இது


Duruvesan
செப் 11, 2024 22:00

தெரிஞ்சா பேசு இல்லை மூடிட்டு இரு, இங்க quota la படிச்சி அங்க போனா அதான் நடக்கும், மெரிட்ல டாப் 10 யூனிவர்சிட்டி ல படிச்சா நல்ல வேலை உறுதியாக கிடைக்கும். மூர்கனுக்கு,முரசொலி உபிசுக்கு,படிப்பின் அருமை புரிய வாய்ப்பு இல்லை


VishaForCM
செப் 11, 2024 20:56

Yes, Remove EWS reservation.


Iniyan
செப் 11, 2024 20:28

நிதர்சனமான உண்மை! மேலை நாடுகளில் அப்படிப்பட்ட சிறந்த வேலைகள் ஒன்றும் லேசில் கிடைக்காது. இவர்கள் அங்கே போய் மளிகை கடையிலும், பெட்ரோல் பங்கிலும் வேலை செய்து செலவை சரி கட்ட வேண்டும் . எல்லோரும் இப்படி செய்து முன்னேற முடியாது.


தத்வமசி
செப் 11, 2024 19:44

ஆங்கிலேயன் நம்மை பிரித்து ஆளுவதற்காக உருவாக்கிய ஜாதி அரசியலை அப்படியே இப்போதைய கட்சிகள் தங்களுக்கு சாதகமாக தூக்கிப் பிடிக்கின்றனர். அதனால் பல சமுதாயத்திற்கு அல்லது நன்றாக கல்வி பயிலும் மாணவர்களுக்கு இங்கு சரியான கல்லூரிகள் அல்லது படிப்பு கிடைப்பதில்லை, வேலையும் கிடைப்பதில்லை என்பது நிதர்சனம். அதுவும் இல்லாமல் லஞ்சம் இந்தியாவில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. நேரத்தில் எதுவும் அரசு அலுவலகம் முதல் அரசு வங்கி வரை எதுவும் சரியாக நடப்பதில்லை. இன்றைய இளைஞர்கள் இதனால் வெளிநாடு சென்று பயில விரும்புகிறார்கள். அப்படி வெளிநாடு சென்று படித்தால் திரும்ப வருபவர்கள் மிகவும் குறைவு. பத்து சதவிகிதம் கூட கிடையாது. அதனால் இதை மோகம் என்று கூறாதீர்கள். இந்திய அரசியல்வாதிகளின் மேல் உள்ள வெறுப்பு. இந்தியாவில் ஜாதிய கல்வி ஒதுக்கீடும், வேலை வாய்ப்பும் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் கொண்டிருக்கிறது.


ஃyts
செப் 11, 2024 19:24

நன்றாக படிப்பவர்களுக்கு இங்கு மரியாதை இல்லைஇங்கே நன்றாக படிப்பவர்களுக்கு கல்லூரி இடம் கிடைப்பதில்லையே அதைவிட மதிப்பெண் குறைவாக வாங்குபவர்கள் எல்லாம் சுலபமாக இடம் கிடைத்து விடுகிறது.


gvr
செப் 11, 2024 18:56

The abomination called Reservation is killing India.


rama adhavan
செப் 12, 2024 00:55

உலகத்துல இந்தியாவில் மட்டுமே ஜாதி முறை ஒதுக்கீடு முறை உள்ளது.நம்மை விட வசதி இல்லாத நாட்டில் கூட இம்முறை இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை