உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.86 லட்சம் கோடி: தமிழகத்தில் 9 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.86 லட்சம் கோடி: தமிழகத்தில் 9 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி: கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி ரூ.1.86 லட்சம் கோடி ரூபாய் வரிவசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வசூல் ஆன தொகையை விட 6 சதவீதம் அதிகம் ஆகும்.அதேநேரத்தில் தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட ஜிஎஸ்டி வசூல் 9 சதவீதம் அதிகரித்துள்ளது.ஜிஎஸ்டி கடந்த 2017 ம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு மாதம் 1ம் தேதியன்று முந்தைய மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி தொகை குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.இதனிடையே, கடந்த மாதம் சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி ஆற்றிய உரையில், ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக அறிவித்து இருந்தார். இதன்படி தற்போது நான்கு வரி அடுக்குகளாக உள்ள ஜிஎஸ்டி, இரண்டு வரிகளை கொண்ட அடுக்குகளாக மாற்றப்பட உள்ளது.இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 1.86 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் 6 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.1.75 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி இருந்தது.ஜிஎஸ்டி வருமானத்தில் மஹாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றனகடந்த ஆண்டு ஆகஸ்ட்டை விட மஹாராஷ்டிரா - ரூ. 28,900 கோடி (10 சதவீதம் அதிகம்)கர்நாடகா -ரூ.14,204 கோடி ( 15.4 சதவீதம் அதிகம்)தமிழகம் - ரூ.11,057 கோடி ( 9 சதவீதம் அதிகம்)உ.பி., -ரூ. 9,086 கோடி (10 சதவீதம் அதிகம்) ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது.சிறிய மாநிலங்களை பொறுத்தவரை சிக்கிம் (39 சதவீதம்) நாகாலாந்து (33 சதவீதம்) மற்றும் மேகாலயா(35 சதவீதம்) கடந்த ஆண்டு ஆகஸ்ட்டை விட அதிகரித்துள்ளது. அதேநேரத்தில்,சண்டிகரில் 12 சதவீதம்மணிப்பூரில் 24 சதவீதம்ஜார்கண்டில் 1 சதவீதம் ஜிஎஸ்டி வசூல் சரிவை சந்தித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Tamilan
செப் 01, 2025 22:33

அமெரிக்க வரிவிதிப்பால் எந்த குறையும் இல்லை . அம்பானி அதானிகள் கொள்ளையடிப்பது எல்லாவற்றையும் ஈடுசெய்துவிட்டது


தத்வமசி
செப் 01, 2025 19:57

வரி என்பது வாங்கப்படும் பொருளுக்கேற்ப மாறுபடுகிறது. ஆனால் வாங்கும் வரியில் மாநிலத்திற்கு நேரடியாக ஐம்பது சதவிகிதம் செல்கிறது. பிறகு மத்திய அரசின் ஐம்பது சதவிகித வரியில் சுமார் நாற்பத்தியொரு சதவிகிதம் பணம் பலவிதங்களில் அதே மாநிலத்திற்கே திரும்ப அளிக்கப்படுகிறது. இதில் அய்யய்யோ என்று அடிவயிற்றில் அடித்துக் கொள்பவர்கள் அவர்களுக்கு பிடித்த நாட்டில் குடியுரிமை பெற்றுச் செல்லலாம். இலவசம் வேண்டும், ஓட்டுக்கு பணம் வேண்டும், குவாட்டர் வேண்டும், பிரியாணி வேண்டும், வரி கட்டக்கூடாது என்றால் பாலைவனம், காடு இவற்றின் நடுவில் வசிக்கலாம். நடந்து போகலாம், இல்லை மாட்டு வண்டியில் செல்லலாம். எந்த வரியும் கட்ட வேண்டாம்.


திகழ்ஓவியன்
செப் 01, 2025 18:48

அவ்வளவும் ஏழை நடுத்தர மக்களின் கண்ணீர் , என்று தீருமோ விடிவு , எல்லோரும் தீபாவளிக்கு பரிசு என்ன கார் விலைக்கு GST வரி குறைப்பு , இது மட்டும் தான் வரப்போகுது , ஏன் என்றால் கார் எல்லாம் ஏழைகள் தானே உபயோகிரார்கள் , கார் விற்பனையாளர்கள் கார் சேல்ஸ் குறைந்ததை சொல்ல இப்படி ஒரு GIFT டு பணக்காரர்களுக்கு


தத்வமசி
செப் 01, 2025 19:50

அண்ணே உங்களின் இருநூறு ரூபாயை மறக்காமல் வந்து வாங்கிச் செல்லுங்கள்.


Ganesh
செப் 01, 2025 17:35

டொனால்ட் டிரம்ப் க்கு இந்த தகவலை யாராவது மெயில் அனுப்புங்களேன்... செத்த பொருளாதாரம் என்று போன மாசம் அமெரிக்காவில் சொன்னார் அவருக்கு இதை நாங்க சொல்ல சொன்னோம்னு


அப்பாவி
செப் 01, 2025 16:53

ஜூலை 2025 ஜி.எஸ்.டி வசூல் 1.96 லட்சம் கோடி. ஏன் குறையிது?


vivek
செப் 01, 2025 17:11

திமுக ஆட்டைய போட்டிருக்கும்...


ஆரூர் ரங்
செப் 01, 2025 16:06

உலகெங்கும் போர் பொறாமை பொருளாதார பாதிப்புக்கள் நிறைந்துள்ள நேரத்தில் இங்கு.பொருளாதார வளர்ச்சி ஆச்சர்யம்தான். வரி விகிதங்களை உயர்த்தாமல் இவ்வளவு வசூல் பிரமிக்க வைக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை