உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உழைப்பின் மறுபெயர் இந்தியப்பெண்கள்; அதிக நேரம் வேலை செய்வதில் உலக அளவில் சாதனை!

உழைப்பின் மறுபெயர் இந்தியப்பெண்கள்; அதிக நேரம் வேலை செய்வதில் உலக அளவில் சாதனை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய ஐடி மற்றும் தொலைத்தொடர்பு துறையில் பெண்கள் வாரத்திற்கு 57 மணி நேரம் வேலைபார்ப்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது; இது உலக அளவிலான சாதனை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.கேரளாவை சேர்ந்த அன்னா செபாஸ்டியன்(26), சி.ஏ., படித்து முடித்தவர்; பிரபல எர்னஸ்ட் அண்டு யங் கணக்கு தணிக்கை நிறுவனத்தின் துணைநிறுவனமான எஸ்.ஆர்.பாட்லிபாய் புனே கிளையில் பணியில் சேர்ந்தார். நான்கு மாதங்கள் பணி செய்த நிலையில், கடுமையான உடல் சோர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜூலை 20ல் உயிரிழந்தார். இது குறித்து அவரது தாய், ' எர்னஸ்ட் அண்டு யங் ' நிறுவனத்திற்கு சில நாட்களுக்கு முன்பு எழுதிய கடிதத்தை தொடர்ந்து இந்த விவகாரம் விவாதப்பொருளானது. அதிகப்படியான வேலைப்பளு தான் தங்கள் மகள் உயிரிழப்புக்கு காரணம் என்பது அன்னாவின் பெற்றோர் புகார்.இந்நிலையில், இந்தியாவில் பெண்கள் எவ்வளவு நேரம் பணியாற்றுகிறார்கள் என்பது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தகவல் மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி இந்திய ஐடி செக்டார், மீடியா துறைகளில் பணியாற்றும் பெண்கள் வாரத்திற்கு 5 நாட்களில் தினமும் 11 மணி நேரம் பணியாற்றுகின்றனர். 6 நாட்கள் என்றால் தினமும் 9 மணி நேரம் பணியாற்றுகின்றனர். அதுவே 24 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்கள் வாரத்திற்கு 57 மணி நேரம் பணியாற்றுகின்றனர். தொழில்நுட்ப துறையில் அனைத்து வயது பெண்களும் வாரத்திற்கு 55 மணி நேரம் பணியாற்றுகின்றனர்.சர்வதேச அளவில் பெண்கள் அதிக நேரம் பணியாற்றுவது இந்தியாவில் தான். மற்ற நாடுகளை பொறுத்தவரை ஐடி மற்றும் மீடியாக்களில் ஜெர்மனி பெண்கள் வாரத்திற்கு 32 மணி நேரமும், ரஷ்ய பெண்கள் வாரத்திற்கு 40 மணி நேரமும் பணி புரிகின்றனர்.இந்தியாவில் தொழில்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணிகளில் 8.5 சதவீத பெண்களும், ஐடி துறையில் 20 சதவீத பெண்களும் பணியாற்றுகின்றனர். இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

yamuna Vinod
செப் 25, 2024 10:32

1. பெண்கள் பாதுகாப்பு, பல சமயங்களில் வீட்டிற்குள் தான் முதலில் தேவை படுகிறது . 2 . எத்தனை பெண்களுக்கு அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை எப்படி சேமிக்க வேண்டும் எப்படி செலவு செய்யவேண்டும் என்று முடிவெடுக்கு உரிமை ஆணுக்கு சமமாக குடுக்க படுகின்றது ???? . 3. பெண்களிடம் அல்லது பெண்வீட்டாரிடம் காசே வாங்காமல் காசே கேட்காமல் காசே எதிர்பார்க்காமல் திருமணங்கள் நடர்கின்றனவா?????? காசு என்பது காசு மட்டும் அல்லாம் பொருள் அசைய சொத்து அடங்கும் . 4. முந்தைய தலைமுறையில் பெண்கள் பெரும்பாலும் வேலைக்கு செல்லவில்லை, இப்போது மிக்ஸி, கிரைண்டர், போன்ற பல உபகரணங்கள் வந்திருந்தாலும் பெண்கள் பொது அறிவில் ஒரு ஆணுக்கு நிகராக போட்டி இட வேண்டியுள்ளது . அதோடு பெண்கள் என்றால் திருமணம் , குடும்பம் , குழைதை பேரு என்ற பல கரங்களால் நிராகரிக்க படுகின்றனர். 5. இப்போதைய பெண்கள் தன்னை சுத்தமாக, தூய்மையாக, ஆரோக்கியமாக, மற்றும் கேலிக்கு உட்படாமல் ப்ரெசென்ட்டப்பில் ஆகாவும் இறுக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது . 6. உன் அப்பன் வீட்டில் இருந்து என்ன கொண்டு வந்தாய்?? இந்த கேள்வி அடிக்கடி கேட்டது போலவே இருக்கின்றதா ???????? இதில் பெண்கள் போகும் இடமெல்லாம் தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டியுள்ளது. இப்படி பட்ட நெருக்கடியில் தான் பெண்கள் , பெண்களை பெற்றவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் . அதிலும் ஆன் வாரிசு இல்லாமல் பெண்களை மட்டுமே பெற்றவராகள் நிலைமை பல இடங்களில் மிக பரிதாபம் . இந்த நெருக்கடி எல்லாம் சமாளிக்க பெண்கள் சம்பாதிக்க வேண்டியுள்ளது . பெண்களை பலராலும் வீட்டுக்குளேயே வைத்துக்கொள்ள முடியாது. அப்படி பட்ட சூழலில் அவர் வெளியே சென்று வேலைபார்க்க வேண்டியுள்ளது . தினமும் செய்திகள் பாருங்கள் பெண்களின் பாதுகாப்பு எப்படியுள்ளது என்று உங்களுக்கு புரியும் . திருடனாக திருந்த வில்லை என்றால் திருட்டை நிறுத்த முடியாது. மக்கள் தாமாக திருத்தினால் மட்டுமே மாற்றம் நேரும் .........


Barakat Ali
செப் 24, 2024 19:54

நிறுவனத்தைக் குறை கூறிய தாய், மகள் உயிருடன் இருக்கும் போதே ஊருக்குத் திரும்ப அறிவுறுத்தியிருக்கலாமே ????


Ramesh Sargam
செப் 24, 2024 19:32

அவ்வளவு உழைத்தும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பலருக்கு கிடைப்பதில்லை. உழைப்புக்கு ஒரு அங்கீகாரம் இல்லை. என்ன செய்வது, குடும்பத்தினரை காப்பாற்றவேண்டும். அதற்காக எல்லா வலிகளையும் தாங்கிக்கொண்டு அதிக நேரம் உழைக்கிறார்கள் பெண்கள். ஆண்கள் அதைவிட அதிக நேரம் உழைக்கிறார்கள். அவர்களுக்கும் அதே கதிதான். மே ஒன்று மட்டும் தொழிலாளர்நல அமைச்சர் மற்றும் அத்துறை அதிகாரிகள் உழைக்கும் வர்க்கத்தினரை ஓஹோ என்று பாராட்டிவிட்டு, மே இரண்டாம் தேதியே தொழிலாளர்களிடம் அதிக வேலையை கறந்துவிடுவார்கள்.


Krishna
செப் 24, 2024 19:21

another point is that call centre companies will have shifts and it will not be more than 9hrs excl. lunch


Krishna R
செப் 24, 2024 19:16

Govt employees others who ate c9mparinf their salaries with it employees should see this statistics and here after no one should say that it peoples getting higher salary. they don't have any association like citu , it is not allowed asper joining letter.


சாம்
செப் 24, 2024 18:29

எப்போ பாரு ஊரு வம்பு, அரட்டை, ரீல்ஸ், வதந்தி, குழாயடி குடுமிப்புடி சண்டை, இ எம் ஏ... இதுல நம்பர் ஒன்னாம்.... ஹும்.. வேதனை...


BALAJI Ramanathan
செப் 24, 2024 18:28

In Govt departments north indian staff don't work properly.


Barakat Ali
செப் 24, 2024 19:52

Shut your mouth.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை