உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி; ஹரியானாவில் தடுத்து நிறுத்தம்; இணைய சேவை முடக்கம்

டில்லியை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி; ஹரியானாவில் தடுத்து நிறுத்தம்; இணைய சேவை முடக்கம்

புதுடில்லி: டில்லியை நோக்கி விவசாயிகள் இன்று (டிச.,14) மீண்டும் பேரணியாக செல்ல முயன்றனர். ஹரியானாவில் போலீசார் தடுத்தி நிறுத்தனார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம்; விவசாய கடன் தள்ளுபடி; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்., 13 முதல், 'டில்லி சலோ' போராட்டத்தை, ஹரியானா - பஞ்சாப் எல்லைகளான ஷம்பு, கானவுரி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டத்தால், டில்லியின் எல்லைகளில் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் ஷம்பு எல்லையில் இருந்து இன்று (டிச.,14) மீண்டும் டில்லிக்கு செல்ல முயன்ற விவசாயிகள் மீது, கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் தடுத்து நிறுத்தினர். ஹரியானா, பஞ்சாப் எல்லையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

எங்கள் உரிமை

'நாங்கள் பேரணி நடத்த அனுமதிக்க வேண்டும். தலைநகருக்கு சென்று போராட்டம் நடத்துவது எங்கள் உரிமை' என பேரணியில் பங்கேற்ற விவசாயி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையே, ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள 12 கிராமங்களில் இன்று (டிச.,14) முதல் டிசம்பர் 17ம் தேதி வரை இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வங்கி சேவைகள் தொடர்ந்து செயல்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

என்றும் இந்தியன்
டிச 14, 2024 18:25

இவர்கள் விவசாயிகள் இல்லவேயில்லை. நிலச்சுவான்தார்கள் / ஜமீன்ந்தார்கள் + ரூ 500 உபிஸ்.விவசாயி விவசாயம் செய்து கொண்டிருப்பான் இப்படி வீதியில் வேலையற்றுப்போய் நின்று ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கமாட்டான்


Raman
டிச 14, 2024 17:08

டில்லி தேர்தல் வரை இந்த பணக்காரர்கள் போராட்டம் தொடரும். மக்கள் கண்டு களிக்கவும் . இவனுங்க ஒரு ஆணியும் புடுங்க மாட்டானுங்க.


K Veerappan
டிச 14, 2024 16:12

மத்திய அரசு இந்த முறை கொஞ்சம் பக்குவமாகவும்,துரிதமாகவும் விவசாயிகள் பிரச்னையை கையாள வேண்டும். நிலைமை எல்லை மீறி போக விட்டு பிறகு எதிர் கட்சிகளை குறை கூறி ஒரு பிரயோஜனமும் இல்லை.


nagendhiran
டிச 14, 2024 14:45

டில்லி தேர்தல் வரை? போராட்டம் தொடரும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை