உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆதரவளித்த மக்களுக்கு ஹசாரே நன்றி

ஆதரவளித்த மக்களுக்கு ஹசாரே நன்றி

புதுடில்லி : தனது போராட்டத்திற்கு ஆதரவு அளித்த மக்கள் அனைவருக்கும் அன்னா ஹசாரே நன்றி தெரிவித்துள்ளார். இந்த போராட்டம் வெற்றி அடைந்ததற்கு நாட்டின் இளைஞர்கள் அளித்த பெரும் ஆதரவே காரணம் எனவும், இந்த போராட்டம் உலக நாடுகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த போராட்டம் அஹிம்சைக்கு கிடைத்த வெற்றி எனவும் அவர் தெரிவித்துள்ளார். பார்லிமென்ட்டை விட மக்கள் சக்தி பெரியது எனவும், இது அனைத்து இந்தியர்களுக்கும் கிடைத்த வெற்றி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அரசியல், கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மாற்றம் ஏற்படுவதற்கான போராட்டம் நாடு முழுவதும் துவங்கி உள்ளது என அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான இந்த போராட்டம் வருங்காலத்தில் சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது அடுத்த கட்ட போராட்டம் தேர்தல் விதிமுறைகளை மாற்றி அமைப்பது தொடர்பானது எனவும், ஊழலில் ஈடுபடும் எம்.பி.,க்களை திரும்ப பெறும் உரிமை மக்களுக்கு கிடைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை