வாசகர்கள் கருத்துகள் ( 6 )
டபுள் இஞ்சின் சர்க்கார் மட்டும் இல்லேன்னா....
வீட்டிற்கு அருகில் உயர்ந்த மரமோ அல்லது குறைந்த அளவில் கூட தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுவும் இடி மின்னலில் இருந்து பாதுகாக்கும்.
மக்கள் நலனுக்கு எவ்வளவு செய்யலாம். உபயோகமற்ற பல செயல்கள் வட மாநிலங்களில் நடக்கின்றன. அறிவியல் சார்ந்த நிகழ்வுகள் குறைவு. முக்கியமாக மாநிலத்தை இரண்டு மூன்று மாநிலங்களாக பிரித்து முன்னேற்ற வேண்டும். மக்கள் தொகை கட்டுக்குள் வரவேண்டும். சிறு தொழில்களை வளர்க்க வேண்டும்.
யாகங்கள் வளர்த்து கடவுளின் அருளால் வேதவிற்பனர்கள் மழையைத் தருவிக்கிறார்கள் என்று காலங்காலமாக இந்த நடைமுறை உள்ளது. அவ்வப்போது செய்தித்தாளிலும் யாகத்தால் மழை பொழிந்தது என்று செய்திகள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றது. கடும் மழையை, அதிக அளவு மழையைத் தேவைக்கேற்ற வகையில் யாகங்கள் வளர்த்து மழையைக் கட்டுப்படுத்த வேதவிற்பனர்கள் அதற்குரிய முயற்சியில் இறங்கினால் ஏழை மக்கள் காப்பாற்றப்படுவார்கள். இராமபிரான் இருக்கும் உ.பி.யில் இந்த மழையால் ஏற்படும் அவலத்திற்கு வேதவிற்பனர்கள் முடிவு கட்டவேண்டும்.
நான் உத்தரபிரதேசத்தில் சிலகாலம் வாழ்ந்திருக்கிறேன். அங்கு நம் ஊர் போல அல்ல. மழைக்காலத்தில் உடல்நடுங்கும் அளவிற்கு மிகக்கடும் இடி மின்னல் ஏற்படும். மேற்கு, மத்திய மற்றும் வடமாநிலங்களில் எப்போதும் கடும் மழை, புழுதிப்புயல், கடும் பனி, கடும் வெயில் என அனைத்தும் பருவகாலத்திற்கு ஏற்ப அதிதீவிரமாக இருக்கும்.
கனமழைக்கு அப்பாவி மக்கள் உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும்