உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாதகத்தை மட்டுமே பேசுகிறது வரலாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

சாதகத்தை மட்டுமே பேசுகிறது வரலாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''அனைத்து சமூகத்திலும் வரலாறு என்பது சிக்கலானது. அன்றைய அரசியல் நிலவரம் குறித்து பெரும்பாலும் சாதகமான அம்சங்களை மட்டுமே எடுத்துரைக்கிறது. திப்பு சுல்தான் விஷயத்திலும் இதுவே நடந்துள்ளது,'' என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.வரலாற்று ஆய்வாளர் விக்ரம் சம்பத் எழுதிய, 'திப்பு சுல்தான்: தி சாகா ஆப் மைசூர் இன்டரெக்னம் 1761 - 1799' என்ற புத்தகத்தை, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டில்லியில் வெளியிட்டார்.அப்போது அவர் பேசியதாவது:கடந்த 10 ஆண்டுகளில் நம் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், மாற்றுக் கண்ணோட்டங்கள் மற்றும் சமநிலையான கருத்துக்கள் தோன்றுவதற்கு ஊக்கமளித்துள்ளன.நாம் ஓட்டு வங்கி சிறையில் சிக்கிக் கொள்ளவில்லை. மேலும், சங்கடத்துக்குரிய உண்மைகளை வெளிக்கொண்டு வருவது அரசியல் ரீதியாக தவறு அல்ல. திறந்த மனதுடன் கூடிய புலமையும், உண்மையான விவாதமும் பன்மைத்துவ சமூகம் மற்றும் துடிப்பான ஜனநாயகம் உருவாக மையமாக உள்ளன.திப்பு சுல்தானை பொறுத்தவரை இந்திய வரலாற்றில் அவர் ஒரு சிக்கலான மனிதர். ஒருபுறம், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்ததில் முக்கிய நபராக அவர் புகழ் பெற்றார். இந்திய தீபகற்ப தலைவிதியைப் பொறுத்தவரை அவரது தோல்வியும், மரணமும் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படலாம் என்பது உண்மைதான். அதே நேரத்தில் அவர் பாதகமான உணர்வுகளை துாண்டியதாக மைசூரு, கூர்க் மற்றும் மலபாரின் சில பகுதிகளில் கருதப்படுகிறது.சமகால வரலாறு என்பது நல்லனவற்றை கூறுகின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை; அதேநேரம் பாதகங்களையும் தவிர்க்க தவறுவதில்லை.அனைத்து சமூகத்திலும் வரலாறு என்பது சிக்கலானது. அன்றைய அரசியல் நிலவரம் குறித்து பெரும்பாலும் சாதகமான அம்சங்களை மட்டுமே எடுத்துரைக்கிறது. திப்பு சுல்தான் விஷயத்திலும் இதுவே நடந்துள்ளது.இந்த புத்தகம் திப்பு சுல்தான் பற்றிய உண்மைகளை பேசுவதோடு, வாசகர்களின் சொந்த முடிவுக்கும் இடம் அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

veeramani hariharan
டிச 02, 2024 12:01

INDIAN HISTORY SHOULD BE REWRITTEN. FIRST REMOBE GEROGE STATUE OR WRITE ON ITS WALL HE WAS A THIEF


veeramani hariharan
டிச 02, 2024 12:01

INDIAN HISTORY SHOULD BE REWRITTEN.


ஆரூர் ரங்
டிச 02, 2024 10:56

திப்புசுல்தான் தான் பல நாடுகளைப் பிடித்து சக்கரவர்த்தியாக திகழ வேண்டும் என்பதற்காக ஆலய அர்ச்சகர்கள் பலரை மிரட்டி தன் பெயரில் வேள்விகளை நடத்த வைத்தான். அதற்கு தான் ஹிந்து மக்களிடம் பறித்த சொத்துக்களிலிருந்து ஒரு பகுதியை தானமாக அளித்தான். இதைத்தானே கடைத் தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடையும் வேலை என்பர்? மீதி ஆக்கிரமிப்பு நிலத்தை ஜக்காதாக வக்ஃபு க்கு அளித்தது வரலாறாகக் கூறுவர். கேரளாவில் பல ஹிந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்தான். இவனையெல்லாம் மதசார்பற்ற சுதந்திர வீரனாக விவரித்து பாட நூல்கள். அட அரசியல் சாசனத்தில் கூட அவன் படம் இடம் பெற்றுள்ளதாம். வெட்கக்கேடு.


AMLA ASOKAN
டிச 02, 2024 09:26

வரலாற்று பாதகங்களை நினைவு கூறுவது இந்தியாவின் அறிவாளிகளின் கண்ணோட்டம். ஆனால் ஜப்பான் போன்ற நாடுகள் 80 ஆண்டுகளுக்கு முன் அணுகுண்டு மூலம் பாதிப்புக் குள்ளாகி யிருந்தாலும் அதையெல்லாம் மறந்து அமெரிக்காவுடன் நட்புறவு கொண்டு மாபெரும் வளர்ச்சியை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது . இங்கே நாம் சரித்திரத்தை சொல்லியே இந்து முஸ்லீம் பகைமையில் வளர்ச்சி அடைந்து வருகிறோம். உலகிலேயே இந்து முஸ்லீம் வேற்றுமையை விரும்பும் ஒரே நாடு இந்தியா தான். அதனால் மற்றைய நாடுகளில் புது புது பிரச்சினைகள் உருவாகி வருகின்றன .


Thiruvengadam,Srikakulam
டிச 02, 2024 09:51

வரலாற்றில் மறைக்கப் பட்ட உண்மையை சொன்னால் மதம் மாறிகளுக்கு ஆத்திரம் வருவது இயல்புதானே!


Mettai* Tamil
டிச 02, 2024 10:16

இந்தியா சுதந்திரம் பெற்று நேரு முதல் பிரதமர் ஆனவுடன் ,1947 to 1977 வரைக்கும் 20 வருஷங்கள் பொறுப்பில் இருந்த முஸ்லீம் கல்வி அமைச்சர்கள் , இந்தியாவின் உண்மையான வரலாற்றை மறைத்ததில் முக்கிய பங்குண்டு . இந்த துரோக வேலையை பிளான் பன்னிதான் நேரு செய்திருக்கிறார் . நம் நாட்டின் வரலாற்றினை தவறாக படித்து கொண்டிருப்பது நியாயமா ?


AMLA ASOKAN
டிச 02, 2024 11:02

பழைய வரலாறு முக்கியமா, நாளைய வளர்ச்சி முக்கியமா? 100 ஆண்டுகளுக்கு முன் தாத்தா பாட்டி காலத்தில் பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை போட்டார்கள் என்பதற்காக இன்றும் அவர்களுடன் அதை தொடரவேண்டும் என இன்றைய தலைமுறையை வற்புறுத்துவதா? பல நூறு ஆண்டுகளாக இந்து முஸ்லீம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்த இந்தியாவை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்த வேண்டும் என சிலர் விரும்புகின்றனர். இந்தியா என்ற நாடு இங்கு வாழும் குடிமகன்கள், மதம் மாறியிருந்தாலும் அனைவருக்கும் உரியது. ஹிந்துக்கள் பெரும்பான்மை என்பது வரலாற்று உண்மை. அமெரிக்காவோ, பிரிட்டனோ, ஆஸ்திரேலியாவோ, தங்களது நாட்டை கிறிஸ்துவ நாடாக அறிவித்துக்கொள்ளவில்லை. அங்கு பல்லாண்டுகளாக வாழும் இந்துக்களை பிரித்துப் பார்க்கவில்லை இந்தியாவில் மட்டும் ஏன் இந்த முஸ்லீம் வெறுப்பு என்ற வன்மம் ? சில ஆயிரம் தீவிரவாதிகளுக்காக அமைதியுடன் வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம்களையும் வெறுப்பதா ?


Mettai* Tamil
டிச 02, 2024 13:41

அசோகரே , நாளைய வளர்ச்சி கண்டிப்பா முக்கியம் தாங்க . அதே போல நம்ம பழைய வரலாறும் முக்கியம். சண்டையை எல்லோரும் மறந்துட்டாங்க .பல நூறு ஆண்டுகளாக இந்து முஸ்லீம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்த இந்தியாவை மதத்தின் அடிப்படையில் பாக்கிஸ்தான் ஆக பிளவுபடுத்தியதும், உடனே ஒரு முஸ்லீம் நாடாக அறிவிச்சதும் யாருன்னு எல்லோருக்கும் தெரியும் ...இந்தியா என்ற நாடு இங்கு வாழும் குடிமகன்கள், மதம் மாறியிருந்தாலும் அனைவருக்கும் உரியது. யாரையும் வெறுக்கவில்லை வன்மமும் இல்லை, அதே போல மத அடிப்படையில் இல்லாமல் மத சார்பற்ற அமைப்பு வேண்டும் என்று தான் அனைவருக்கும் சமமான பொதுவான சட்டம் தேவை என்று சொல்வது தவறா ?.


SUBBU,
டிச 02, 2024 09:12

நம் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து பிரதமர் நேரு தலையிலான காங்கிரஸ் ஆட்சியின் அமைச்சரவையில் நீண்ட காலமாக கல்வி அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் பெரும்பாலும் முஸ்லீம்கள்தான். 1947 ல் இருந்து 1958 வரை கல்வி அமைச்சராக இருந்தவர் மௌலானா அப்துல்கலாம் ஆசாத் என்பவர். அடுத்து ஹூமாயூன் கபீர், அவருக்கு அடுத்து M.C. சாக்லா என்ற முகம்மதுஅலி கரீம் சாக்லா என்பவர். அவருக்கு அடுத்து ஃபக்ருதீன் அலி அகம்மது என்பவர் கடைசியாக நூருல் ஹசன் என்பவர் இப்படி அனைவருமே நமது நாட்டின் அதிக ஆண்டுகள் கல்வி அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள். இவர்களுக்கு இடையிடையே ஓரிரு வருடங்கள் இந்துக்கள் கல்வியமைச்சர்களாக இருந்திருக்கின்றனர். இந்த முஸ்லீம் அமைச்சர்கள் மத்தியில் பதவி வகித்த காலகட்டத்தில்தான் நம்முடைய பல இந்திய மன்னர்களின் வீர வரலாறு மறைக்கப் பட்டு நம் நாட்டின் மீது படையெடுத்து வந்த முகலாயர்கள் மிகப் பெரிய வீரர்களாகவும், ஹீரோக்களாகவும் சித்தரிக்கப் பட்டனர். எ.கா பாரததேசத்தின் மீது 17 முறை படையெடுத்து சோம்நாத் கோவில் உட்பட பல கோவில்களின் செல்வங்களை கொள்ளையடித்து சென்ற முகலாய மன்னன் என்று பெருமையோடு கூறப்பட்ட கஜினி மஹ்மூதுவையும் அவனின் புகழ்பாடும் வரலாற்றையும் படித்த நமக்கு அந்த பதினேழு முறையும் அவனிடம் போரிட்ட ராஜ புத்திர மன்னர்கள் யார்? அவர்கள் எத்தனை பேர் அவர்களின் பெயர்கள் என்ன என்ற விபரம் யாருக்கும் தெரியாது. ஏனென்றால் நமது கல்வித் திட்டத்தை உருவாக்கிய முஸ்லீம் கல்வி அமைச்சர்கள் இது போன்ற பல இந்திய மன்னர்களின் வீர சரித்திர வரலாற்றை நயவஞ்சகமாக திட்டமிட்டு மறைத்து இஸ்லாமிய மன்னர்களை வீரர்களாக நம் பாடத்தில் புகுத்தியதுதான். இப்படிப் பட்ட இந்த முஸ்லீம் கல்வி அமைச்சர்களிடம் இருந்து தப்பி பிழைத்த ஒரே மன்னன் மராட்டிய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி சத்ரபதி வீரசிவாஜி ஒருவர்தான் அவரின் வீரதீர சாகசத்தையும் புகழையும் இவர்களால் எவ்வளவோ முயன்றும் மறைக்க முடியவில்லை. நமது பாரதநாட்டின் சரித்திரம் இப்படித்தான் மாற்றி எழுதப் பட்டது. அது இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதுதான் வருத்தமளிக்கும் விஷயம்.


Kalyanaraman
டிச 02, 2024 07:37

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்வி கம்யூனிஸ்டுகளின் கையில் இருந்தது. ஆதலால், நமது நாட்டின் உண்மையான வரலாறு மறைக்கப்பட்டிருந்தது. தற்போது உண்மையான வரலாறு வெளிவருகிறது. வாழ்க பாரதம் வளர்க பாரதம்


அப்பாவி
டிச 02, 2024 06:06

நேற்றைய வரலாறு இன்றைய ஆட்சியாளர்களால் திருத்தப் படும். இன்றைய வரலாறு நாளைய ஆட்சியாளர்களால் திருத்தப்படும்


ghee
டிச 02, 2024 07:41

தமிழ்நாட்டில் தொடங்கவேண்டும் கோவாலா


Mettai* Tamil
டிச 02, 2024 10:22

நேற்றைய உண்மையான வரலாறு, இன்றைய ஆட்சியாளர்களால் கொண்டு வரப்படும். தவறான வரலாற்றை திருத்துவதில் தவறில்லை ... என்றைக்கும் வாய்மையே வெல்லும் ...


Kasimani Baskaran
டிச 02, 2024 06:05

திப்புவின் இந்து விரோத அடிப்படை எண்ணங்கள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டவை - ஆனால் காங்கிரஸ் அரசு அதை வெள்ளையடித்து சரித்திரத்தை மறைத்து வைத்தது.


K V Ramadoss
டிச 02, 2024 06:04

இந்தியாவின் வரலாறு திருப்பி திருத்தி எழுதப்பட வேண்டும்.


K V Ramadoss
டிச 02, 2024 06:01

இந்தியாவின் வரலாறை திருப்பி, திருத்தி எழுதப்பட வேண்டும்.


முக்கிய வீடியோ