வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஒலிம்பிக் போட்டிகளில் முதல் ஐந்து இடங்களிலாவது மெடல்கள் வாங்கி இருந்தால் இதை நடத்துவதில் ஹிந்துஸ்தானுக்கு பெருமை. பாரதம் ஒலிம்பிக் போட்டி நடத்தி அதில் நூற்றி நாற்பதாவது இடத்தில் இருந்தால் காரி உமிழ்வார்கள். இதை நாம் உணரவேண்டும்.
எலிக்கு பயந்து வீட்டை கொளுத்த நினைப்பது மடத்தனம். ஒலிம்பிக் போட்டிகளில் மெடல் வாங்குவதில் வேண்டுமானால் நாம் பின் தங்கி இருக்கலாம். ஆனால் போட்டிகள் நடத்துமளவு நம்மிடம் திறமை தொழிநுட்பம் இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும். தமிழ் மிகவும் பழைமையான தொன்மையான மொழி எனக் கூறிக்கொண்டு இருப்பதால் ஒரு பயனும் இல்லை. பாரத கலாச்சாரம் தொன்மையான கலாச்சாரம். எனக்கூறி கொள்வதில் பயனில்லை. நம்மிடையே உலக நாடுகள் கண்டு வியக்கும் வண்ணம் ஒருங்கிணைத்து நடத்த முடியும் என உலகிற்கு பறை சாற்ற வேண்டும். அப்பொழுது தான் நமது மொழி தமிழ் உட்பட பாரத நாட்டின் மொழிகள் கலாச்சாரம் உலகில் வேகமாக பரவும். ஆசிய விளையாட்டு போட்டிகள் முதன் முதலில் இந்திரா காந்தி பிரதமர் காலத்தில் நடந்த போது தற்போது உள்ள அளவு தொழில்நுட்பம் இல்லை. ஆனால் கோயமுத்தூர் UMS ரேடியோ நிறுவனத்தினர் தற்போதைய அவினாசி ரோட்டில் உள்ள அன்னாசிலை எதிர்ப்புறம் உள்ள வோடாபோன் அலுவலகம் அப்பொழுதே டெல்லி தொலைகாட்சியில் கலரில் ஒளிபரப்பான அந்த சமயத்தில் கோவையில் தூர்தர்ஷன் இல்லை ஆசிய விளையாட்டு போட்டிகள் வீடியோ கேசட்ல் பதிவு செய்து அன்றைய தினம் டெல்லியில் இருந்து கோயமுத்தூர் வரும் விமானத்தில் கொண்டு வந்து மிகப் பெரிய டிவி வைத்து UMS ரேடியோ நிறுவனத்தில் பொது மக்கள் கண்டு களிக்க இலவசமாக திரையிட்டார்கள். ஆகவே யாரும் காரி உமிழ மாட்டார்கள். பாராட்ட தான் செய்வார்கள். விளையாட்டு போட்டிகளில் எப்பொழுதும் வெற்றி பெற வேண்டும் என நினைக்கக்கூடாது. அனால் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாட வேண்டும். சூழ்ச்சி செய்து வெற்றி பெற கூடாது திறமையை காட்டி வெற்றி பெற வேண்டும். பொறாமை குணம் கூடாது அனால் போட்டி மனப்பான்மை வேண்டும். கோபம் கூடாது எதையும் தாங்கும் மனப்பக்குவம் வேண்டும். உலக அரங்கில் நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என காட்டுவோம் 2036.
இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் ஒரு கனவு. நடக்குமா இங்கு?. நடந்தால் சிறப்பு.