உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா விஸ்வகுருவாக மாற வேண்டும்; மோகன் பாகவத் விருப்பம்

இந்தியா விஸ்வகுருவாக மாற வேண்டும்; மோகன் பாகவத் விருப்பம்

ஹைதராபாத்: உலக நலனுக்காக இந்தியா விஸ்வகுருவாக மாற வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: இந்தியாவில் சங்கத்தின் முயற்சிகளும், அந்தந்த நாடுகளில் உள்ள ஹிந்து சுயம்சேவக் சங்கங்களின் முயற்சிகளும் ஒரே மாதிரியாக இருப்பதைக் காண்கிறோம். சேவை பல காரணங்களுக்காகச் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் பிறகு, சேவை செய்ய விரும்பும் மக்களின் கூட்டத்தை பார்க்கிறோம். அவர்கள் கைகளைக் கூப்பி, பெரிய புன்னகையுடன் வீடு வீடாகச் சென்று, 'உங்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்' என்று கேட்கிறார்கள்.இப்போது இவ்வளவு பேர் இருக்கிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்களை மீண்டும் பார்க்க முடிவதில்லை. ஏனென்றால், அந்தச் சேவை பிற்காலத்தில் ஒரு வெகுமதியை எதிர்பார்த்து செய்யப்படுகிது. அது உண்மையான சேவை அல்ல. அது ஒரு கொடுக்கல் வாங்கல். நாங்கள் உங்கள் வேலையைச் செய்வோம், நீங்கள் எங்கள் வேலையைச் செய்யுங்கள் என்று கூறுகிறார். உலக நலனுக்காக இந்தியா விஸ்வகுருவாக மாற வேண்டும்.ஆனால் இது ஒரே இரவில் நடக்கும் ஒன்றல்ல. இதற்கு கடின உழைப்பு தேவை. இந்த கடின உழைப்பு பல்வேறு வழிகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. ஆர்எஸ்எஸ்ஸின் நோக்கம் ஹிந்து சமூகத்தை ஒழுங்கமைப்பதைத் தாண்டியது. தொழில்நுட்பம் மனிதகுலத்திற்கு சேவை செய்ய வேண்டும். அதைக் கட்டுப்படுத்தக்கூடாது. தொழில்நுட்பம் ஒருபோதும் மனிதகுலத்தின் எஜமானராக மாறக்கூடாது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலக நலனை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை