உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகாரிகள் தவறுக்கு முதல்வர் பொறுப்பா?

அதிகாரிகள் தவறுக்கு முதல்வர் பொறுப்பா?

பெங்களூரு : ''வால்மீகி வளர்ச்சி ஆணையத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் வங்கி மேலாளர் தவறு செய்துள்ளார். சித்தராமையா ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.'வால்மீகி வளர்ச்சி ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணை முடியும் வரை, முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும்' என்று பா.ஜ., - ம.ஜ.த.,வினர் சட்டசபை உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று சிவகுமார் அளித்த பேட்டி:இந்த ஊழலுக்கும், முதல்வருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதிகாரிகள் தவறு செய்தால், முதல்வர் எப்படி பொறுப்பேற்க முடியும். ஒரே நாளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வங்கி அதிகாரி ஒருவர், கடன் வழங்கி உள்ளார். இதற்கு மத்திய நிதி அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்.சட்டசபை நடவடிக்கைகள் பற்றி எதிர்க்கட்சியினருக்கு எதுவும் தெரிவதில்லை. நாங்கள் பேச அனுமதித்தோம். முதல்வரை பேச அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், கொடுக்கவில்லை. இவ்விஷயத்தில் எதிர்க்கட்சி அரசியல் செய்கிறது.நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. அரசு ஊழலில் ஈடுபடவில்லை. சில அதிகாரிகள் தவறு செய்ததை, அரசியல் ரீதியாக எங்களுக்கு எதிராக பயன்படுத்துகின்றனர்.நாங்கள் சிறப்பு விசாரணை அமைத்து உள்ளோம். ஒரு பெரிய நிறுவனத்தில், யாரோ ஒரு பணியாளரின் தவறுக்காக, நிறுவனத்தின் தலைவரை குறி வைக்கலாமா.இவ்வாறு அவர் கூறினார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ravichandran S
ஜூலை 20, 2024 05:25

அண்ணன் சிவகுமார் சரியாக சொல்லிவிட்டார்


RAJ
ஜூலை 19, 2024 21:11

Yes Mr. Sivakumar you are responsible.


Sudarsan Ragavendran
ஜூலை 19, 2024 18:28

ஒரு திட்டத்தை அதிகாரிகள் திறம்படுத்த, அதனால் கிடைக்கும் நல்ல பெயர் கிடைத்தால், அது முதலமைச்சரின் சீரிய தலைமையிலான ஆட்சிக்கு அடையாளம். அப்போ மட்டும் எதுக்கு வரீங்க? அதிகாரிகள் தவறிழைத்தால் அரசு அல்லது முதல்வர் பொறுப்பு என திமிறாக பேசுவது


மேலும் செய்திகள்



புதிய வீடியோ