உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐ.எம்.எப்., முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிருப்தி

ஐ.எம்.எப்., முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: பாகிஸ்தானுக்கு நிதி வழங்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிருப்தி தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள பாகிஸ்தான், ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடம், 1 பில்லியன் டாலர் கடன் கேட்டிருந்தது. ஆனால், ஐ.எம்.எப்., வழங்கும் நிதியை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் பயன்படுத்துவதாக, இந்தியா குற்றஞ்சாட்டி, அதற்கான ஓட்டெடுப்பை புறக்கணித்தது.இருப்பினும், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடன் கொடுக்க ஐ.எம்.எப்., சம்மதம் தெரிவித்ததாக, பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இது இந்தியாவை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த நிலையில், சர்வதேச நிதியத்தின் இந்த முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், 'துணைக் கண்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பதற்றத்தை குறைக்க முடியும் என சர்வதேச சமூகம் எப்படி நம்புகிறது என்று எனக்கு புரியவில்லை. ஏனென்றால், சர்வதேச நாணய நிதியம் வழங்கும் பணத்தை, பூஞ்ச், ரஜோரி, ஊரி உள்ளிட்ட இந்திய பகுதிகளை அழிக்கவே பாகிஸ்தான் பயன்படுத்துகிறது,' எனக் குறிப்பிட்டுள்ளார்.போர் நிறுத்தம்இதற்கிடையே, இரு நாடுகளும், இன்று மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

karthikeyan
மே 10, 2025 16:12

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வேண்டுமா ...... ? மூன்று நிபந்தைகள் மட்டும் இருந்தால் போதும் . 1. தீவிரவாதிகளை உன் நாட்டில் வளர்க்க வேண்டும் . 2. அந்த தீவிரவாதிகளை வைத்து மற்ற நாட்டில் உள்ள குழந்தைகள் உள்பட அனைவரையும் ஈவு இரக்கமின்றி கொல்ல வேண்டும். 3. அதனால் போர் வருமானால் அந்த தீவிரவாத நாட்டிற்கு அள்ளி கொடுக்கப்படும் . மேற்கண்ட நிபந்தைகளுடன் ஏதேனும் நாடுகள் இருந்தால் அணுகவேண்டிய முகவரி சர்வதேச நாணய நிதியகம் .


karthikeyan
மே 10, 2025 15:31

ஐ எம் எப் எரிகிற தீயில் எண்ணை ஊற்றுகிறது ..... இந்த மாதிரி ஒரு சர்வதேச நிதியம் தேவையில்லை .


kalyan
மே 10, 2025 13:37

பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் நிதி வழங்கியதிலிருந்தே ஐ எம் எப் Deep State ன் கைப்பாவை என்று தெளிவாகிறது. ஐ எம் எப் க்கு அமெரிக்கா கொடுக்கும் நிதியை நிறுத்திய Trump ன் செயலை கண்டித்தவர்கள் இப்போதாவது இதை உணருவார்கள் என நம்புகிறோம்


Sivagiri
மே 10, 2025 13:23

இவர் ஆக்சன் எல்லாம் நம்பற மாதிரியாவா இருக்கு ? . . .


Jayaraman Rangapathy
மே 10, 2025 12:47

Wrong decision and bad precedent.It should reverse the decision


Ramesh Sargam
மே 10, 2025 11:13

ஐ எம் எப் முடிவு சரியல்ல. முடிவை மாற்றவேண்டும். பயங்கரவாதிகளுக்கு நிதியா?


skrisnagmailcom
மே 10, 2025 10:36

பாகிஸ்தானின் உண்மை தன்மை அறிந்தும் ஐஎம்எஃப நிதி குடுககது என்றால். நமது நாட்டின் வெளியுறவு துறை பலவீனமாக உள்ளதா?


Bharathi
மே 10, 2025 10:30

Sahib...happy that at least you have now understood India and thanks for your reform. we must completely destroy and divide in 4 part then not to worry about IMF grant


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை