உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜெயலலிதா சொத்துக்களை தீபாவிடம் ஒப்படைக்க முடியாது; கர்நாடகா ஐகோர்ட் உத்தரவு

ஜெயலலிதா சொத்துக்களை தீபாவிடம் ஒப்படைக்க முடியாது; கர்நாடகா ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரூ: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை தீபாவிடம் ஒப்படைக்க முடியாது என்று கர்நாடகா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அசையும், அசையா சொத்துக்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடந்ததால், வழக்குக்காக முடக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றை ஏலம் விடும் பணிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qj0qza67&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனிடையே, சென்னையில் உள்ள ஜெயலலிதா சொத்துக்களை, அவரது அண்ணன் மகளான ஜெ.தீபாவிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. அந்த ஆவணத்தை வைத்து, பெங்களூரூ உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும் ஜெயலலிதாவின் சொத்துக்களை, தன்னிடம் ஒப்படைக்குமாறு, கர்நாடகா சிறப்பு கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. 'ஜெயலலிதாவின் சொத்துக்களை தீபாவிடம் ஒப்படைக்க முடியாது' என்று ஐகோர்ட் நீதிபதி அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளார். மேலும், ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய சிறப்பு கோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் மிகத் தெளிவாக உத்தரவிட்டுள்ளதை குறிப்பிட்ட நீதிபதி, தீபாவின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார். ஏதேனும் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று விரும்பினால், சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Laddoo
ஜன 14, 2025 07:22

தாயே தீபா ஆனாலும் ஒன்கு இவ்ளோ பேராச கூடாது. கோர்ட்டில் மாட்டியது உண்மையான Jaya அவர்களின் சொத்து. அதை விட லட்சம் மடங்கு சுருட்டிய கூட இருந்தே குழி பறித்த சசிகலா மேல் ஏன் கேஸ் குடுக்கவில்லை?


தமிழ்வேள்
ஜன 13, 2025 20:46

இவள் சிலுவை அணிந்து பெந்தகோஸ்து கும்பலின் பிடியில் சிக்கியதால் தான் ஜெ. இவளை விலக்கி வைத்தார்..அப்படி இருக்க ஒரு ஹிந்துவின் சொத்து எப்படி அல்லேலூயா அங்கத்தினருக்கு கொடுக்க முடியும்?..ஜெ.வின் குல தெய்வ கோவில் அல்லது ஏதாவது வைஷ்ணவ ஸ்தலத்திற்கு உரிமை ஆக்குவேன் சிலாக்கியம்


GMM
ஜன 13, 2025 15:04

ஜெயாவிற்கு வாரிசு இல்லாததால், சொத்து அரசு ஏலம் விட்டு, ரிசர்வ் வங்கியில் செலுத்த வேண்டும். அல்லது அவரது குல தெய்வ கோவிலில் அல்லது அவரது சமூக மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். தீபா சட்ட பூர்வ வாரிசுஅல்ல. இவரிடம் ஒப்படைக்க கூடாது. மெட்ராஸ் நீதிமன்ற உத்தரவு தவறு. பல குடும்ப வழக்கை உருவாக்கும். கர்நாடக உத்தரவை உச்ச நீதிமன்றம் ஏற்க வேண்டும்.


ஆரூர் ரங்
ஜன 13, 2025 14:42

இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் முன்பு குற்றம்சாட்டப்பட்ட நபர் இறந்து விட்டால் வழக்கு நீர்த்து போய் ABATE ஆகிவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு. அப்போதெல்லாம் சம்பந்தபட்ட சொத்துக்கள் திரும்ப அளிக்கப்படும் என்பதுதானே சட்டம்??. ஊழலில் சம்பாதித்து சேர்க்கப்பட்ட சொத்து என சுப்ரீம் கோர்ட் அறிவித்தால் மட்டுமே கர்நாடக அரசு ஏலம் விட முடியும். வழக்கு ABATE ஆனதாக சுப்ரீம் கோர்ட்டால் அறிவிக்கப்பட்ட நிலையில் ஏலம் செல்லுபடியாகுமா என்பது கேள்விக்குறியே.


Sivasankaran Kannan
ஜன 13, 2025 14:32

திராவிட கும்பல்களின் திருட்டு கொள்ளை சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியுமா? பாவம் ஜே. சயின்டிபிக் ஊழல் என்றால் என்ன என்று தெரியாத அப்பாவி பெண்மணி..


Mediagoons
ஜன 13, 2025 14:12

அனைத்தும் சினிமாவிலும், அரசியலிலும் மக்களை ஏமாற்றி கொள்ளையடித்தது


N Sasikumar Yadhav
ஜன 13, 2025 15:35

உங்க எஜமான் கோபாலபுரத்தாரைவிட வேறு யாரும் விஞ்ஞானரீதியாக ஊழல் செய்ய முடியாது


A Viswanathan
ஜன 13, 2025 16:06

இங்கு கோடான கோடி கொள்ளை அடித்தவர்களின் சொத்துக்களை அமலாக்க துறையினால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று நினைக்கும் போது வருத்தமாக உள்ளது.


Laddoo
ஜன 13, 2025 16:13

நீ சொன்னது கட்டுக் குடும்பதுக்கும் சசிகலா போன்றவர்களுக்கும் ஓகே. ஜெயாவை நம்ப வைத்து ஏமாற்றிக் கொள்ளையடித்தது சசிகலா. அமைதிப்படை அமாவாசை கொள்ளையடித்தது அது தனிக் கணக்கு