உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டின் 6வது செமி கண்டக்டர் தொழிற்சாலை: உ.பி.,யில் அமைகிறது

நாட்டின் 6வது செமி கண்டக்டர் தொழிற்சாலை: உ.பி.,யில் அமைகிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உ.பி.,யில் 6வது செமி கண்டக்டர் தொழிற்சாலை அமைக்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது: உ.பி.,யின் ஜீவர் பகுதியில் ரூ.3,706 கோடி செலவில் 6வது செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள 5 செமி கண்டக்டர் தொழிற்சாலை கட்டுமான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.(இவை அசாம், குஜராத்தில் அமைகிறது) . அதில், ஒரு தொழிற்சாலையில் இந்தாண்டே உற்பத்தி துவங்கும். 6வது தொழிற்சாலை HCL - FIXCONN இணைந்து அமைக்கின்றன. இந்த தொழிற்சாலையில் மொபைல்போன், லேப்டாப்கள், ஆட்டோமொபைல்கள் உள்ளிட்ட சாதனங்களுக்கு தேவையான 'டிஸ்ப்ளே டிரைவர் சிப்கள்' தயாரிக்கப்படும். இந்த தொழிற்சாலை 2027 ம் ஆண்டு செயல்பட துவங்கும். ஆண்டுக்கு 3.6 கோடி சிப்கள் தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 15, 2025 05:41

தமிழகத்தில் கருணாநிதி நிதி காலத்தில் இருந்து இன்றுவரை அரசியல் காரணங்களுக்காக மூடப்பட்ட தொழிற்சாலைகள் அனைத்தும் செளத் இண்டியா விஸ்கோஸ் மால்கோ முதல் ஸ்டெரிலைட் வரை அனைத்தும் மூடுவதற்கு முக்கிய காரணம் திமுக மற்றும் அதன் கிளை கட்சி கம்யூனிஸ்ட் திமுகவிலிருந்து பிறந்த கட்சிகள். மேற்கூறிய இந்த நிறுவனங்கள் மீண்டும் புதிதாக கட்டப்பட வேண்டும் என்றால் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் 30 முதல் 40 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்.


Murugan Gurusamy
மே 14, 2025 22:24

எதுக்கு பணம் எங்கே இருந்து வருகிறது,


கிஜன்
மே 14, 2025 20:45

அந்த ஊர்ல 15 சதவீதம் கமிஷன் இருக்கலாம் .... அது அல்ல பிரச்னை .... செமி கண்டக்டர் தொழிற்சாலை அமைக்க அதிக அளவு சுத்தமான நீர் தேவைப்படும் .... ஒரு நாளைக்கு 4கோடி முதல் 6 கோடி லிட்டர் குடிநீர் தேவைப்படும் திட்டம் .... அதனால் தான் அதிக அளவு நீர் வரத்து இருக்கும் ஆற்றுப்படுகைகளில் அமைக்கிறார்கள்


Venkataraman
மே 14, 2025 19:59

தமிழ்நாட்டில் இது,போன்ற பெரிய தொழிற்சாலைகள் வர வாய்ப்பில்லை. இங்கே தொழிற்சாலை தொடங்க வேண்டுமென்றால் 30% கமிஷன் தர வேண்டும். ஏராளமான சலுகைகளை அரசு தருவதாக அறிவித்து விட்டு, தொழிற்சாலைகளை தொடங்குவார்கள். பிறகு அவர்களிடமிருந்து கமிஷன் கொள்ளையை ஆரம்பித்து விடுவார்கள்.


SOUNTHARRAJAN
மே 14, 2025 19:43

திமுக ஆட்சியில் எத்தனை தொழிற்சாலைகள் வந்தன...?


ஆரூர் ரங்
மே 14, 2025 19:50

செமி யின் ஆட்சி.


SOUNTHARRAJAN
மே 14, 2025 19:35

கடுமையான எதிர்ப்பு இருந்தபோதிலும், மத்திய அரசு ஆதரிக்காவிட்டாலும் தமிழ்நாட்டில் சிறந்த உற்பத்தி வசதி உள்ளது.


தாமரை மலர்கிறது
மே 14, 2025 19:03

வெரி குட். பல தொழிற்சாலைகளை வடக்கே அமைத்தால், வடஇந்தியர்கள் தெற்கே வரவேண்டிய அவசியம் இருக்காது. இந்தியா முழுக்க சீரான வளர்ச்சி தேவை. அதனால், உபி, பீகார், ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிராவில் தொழிற்சாலைகள் அமைத்தால், வரிகள் குறைக்கப்படும். இலவச மின்சாரம் தரப்படும் என்று மத்திய அரசு சொல்வது நல்லது.


Sekar
மே 14, 2025 18:29

தொழில் நுட்ப பொறியாளர்கள் நிறைந்த தமிழகத்துக்கும் இது போன்ற நவீன அதிநுட்ப பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் கொண்டு வர வேண்டும். அதற்கு மாநில அரசு விரோத போக்கை கை விட்டு மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.


V Venkatachalam
மே 14, 2025 18:18

உ.பி மாநிலம் சங்கிளால் ஆளப்படுகிறது.‌தமிழ்நாடு மாநிலம் அப்படி இல்லை. திராவிடியா மாடல் ஆள்கிறார். திராவிடியா மாடல் கொள்கை வெரி சிம்பிள் நோ கமிஷன் நோ பிஸினஸ்.‌ அம்புட்டுதான்.


Arinyar Annamalai
மே 14, 2025 17:40

த்ரவிஷன்கள் நாட்ல சாராய தொழிற்சாலைகள் மட்டும்தான் அமைப்பானுங்க


SANKAR
மே 14, 2025 18:21

plans ready for factories in Sulur and Palladam.Fab lab not seen anywhere in Country will be in Chennai.all will start production s bit before UP starts production


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை