உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனசாட்சி, பதவிப்பிரமாணம், சட்டத்துக்கு உண்மையாக இருக்கணும்: நீதிபதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அறிவுரை

மனசாட்சி, பதவிப்பிரமாணம், சட்டத்துக்கு உண்மையாக இருக்கணும்: நீதிபதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 'நீதிபதிகள், தங்கள் மனசாட்சி, ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணம் மற்றும் சட்டத்துக்கு உண்மையாக பணியாற்ற வேண்டும்' என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் கூறினார்.மும்பை கோர்ட், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியான பி.ஆர். கவாய்க்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தது. விழாவில் நீதிபதி கவாய் பேசியதாவது:அரசியலமைப்பின் விளக்கம் நடைமுறைக்கும், சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறும் இருக்க வேண்டும். நீதித்துறை அலுவலர்கள் சிலரது நடத்தை குறித்து எனக்கு புகார்கள் வந்துள்ளன. அவர்கள் நீதிமன்றத்தின் நற்பெயரை பாதுகாக்கும்படி நடந்து கொள்ள வேண்டும்.எந்தவொரு சட்டத்தையும் அல்லது அரசியலமைப்பையும், தற்போதைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் பயன்படுத்த வேண்டும்.நீதிபதிகள், தாங்கள் ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணம், மனசாட்சி, சட்டத்துக்கு உண்மையாக பணியாற்ற வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும்.ஒரு முடிவு எடுத்தவுடன் ஒருபோதும் கவலைப்படக்கூடாது. நீதிபதியாக இருப்பது, சமூகத்திற்கும், தேசத்திற்கும் சேவை செய்வதற்கான ஒரு வாய்ப்பு.நான் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் பணியாற்றிய காலத்தில் அளித்த தீர்ப்புகளை மக்கள் பாராட்டும்போது பெருமையாக இருந்தது. எந்த ஒரு சூழ்நிலையிலும், நீதித்துறையின் சுதந்திரம் ஒருபோதும் சமரசம் செய்யப்படக்கூடாது. சுப்ரீம் கோர்ட் அல்லது ஐகோர்ட் நியமனங்களை செய்யும்போது பன்முகத்தன்மை மற்றும் தகுதி பராமரிக்கப்படுவதை கொலீஜியம் உறுதி செய்கிறது.இவ்வாறு பி.ஆர்.கவாய் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

அப்பாவி
ஜூலை 06, 2025 20:51

உங்களுக்கு முன்னாடி தலைமை நீதிபதியா இருந்தவர் அரசு வீட்டை காலி பண்ணாம உட்கார்ந்திருக்காரு. கொஞ்சம் எடுத்து சொல்லுங்க யுவர் ஆனர்.


c.mohanraj raj
ஜூலை 06, 2025 20:10

சட்டம் தெரியாதவர்களை எல்லாம் நீதிபதிகளாகி விட்டார்கள் காலக்கொடுமை


Kulandai kannan
ஜூலை 06, 2025 11:41

இவரது தாயார், ஆம்ஸ்டிராங் மனைவியின் கட்சி தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பு. கிழியுது கிருஷ்ணகிரி.


Chandrasekaran
ஜூலை 06, 2025 06:42

வேடிக்கை விநோதம். வியப்பபுக்குரியது அதே நேரம் நகைப்புக்குரியது. கடமையை நினைவூட்டுவது எப்போது தேவைப்படும். புதியவர் பணியேற்ற காலந்தொட்டு கருத்துக்களை முன்வைத்து வருகிறார். ஆனாலும் இது சற்று வேறுபடுகிறது.


Mani . V
ஜூலை 06, 2025 04:57

நீங்க, இப்படி சிரிச்சிக்கிட்டே சொல்லும் பொழுதே தெரியும் பாஸ் அது ஜோக் என்று. சின்ன உதாரணம் நம்ம ஐந்து கட்சி அமாவாசை இப்பொழுது மந்திரி. அதுக்கு நீங்கள் நேர்மையாகவா தீர்ப்பு கொடுத்தீர்கள்? இளவரசர் உதயநிதி பேசாத பேச்சா. அவர் என்ன சிறையிலா இருக்கிறார். இன்னும் அந்த "சார்" யாருன்னே யாருக்கும் தெரியல. ஏதோ ஸ்டாண்டப் காமெடி மாதிரி இருக்கு இந்த ஷோ.


சிட்டுக்குருவி
ஜூலை 05, 2025 23:41

அரசாட்சி ,நீதிபரிபாலனம் ,பாதுகாப்புத்துறை இவ்வை மூன்றுமே மக்களுக்காக ,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ,மக்களால் நடைமுறைப்படுத்தப்படும் துறைகள் .இவர்கள் எல்லோருக்கும் முதலாளி மக்களேதான் .அதனால் இவ்வை ஒவோன்றும் ஒட்டுமொத்த மக்களுக்கும் சட்டப்படி எண்ணக்கடமை நிறைவேற்றவேண்டுமோ அதைத்தான் நிறைவேற்றவேண்டும் .மக்களுக்கு இந்நல்விளைவிக்கும் குற்றவாளிகளுக்கு ,மக்களின் வரிப்பணத்தை சூறையாடும் கயவர்களுக்கு எல்லாம் எந்தகாரணம் கொண்டும் உதவிக்கரம் நீட்டக்கூடாது . குற்றம் புரிபவனுக்கு இருக்கும் மனித உரிமையைவிட குற்றத்தில் பாதிக்கப்படுவனுடைய உரிமையே மேலானது .அதனால் குற்றவாளிகளுக்கு உடனடி தீர்வாக ஸ்டே ஆர்டர் போட்டு குற்றவழக்குகளை தடுக்காமல் மாநில உயர்நீதிமன்றங்களின்மீது நம்பிக்கைவைத்து எந்தஒரு வழக்கையும் தீர்ப்புவழங்கிய பிறகு அப்பீலுக்கு மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும் .தற்போது உள்ள குற்றவழக்கு நடைமுறைகள் குற்றங்களை ஊக்குவிப்பதாகவே இருக்கின்றது .குற்றங்கள் அதிகரிக்கவும் காரணியாக உள்ளது .அதனால் உச்சநீதிமன்றத்தில் உள்ள உடனடி ஸ்டே வழங்கும் டெல்லர் மெஷின்களை போல இல்லாமல் ,நாட்டு நலனுக்கு எதிரானது,, சமூக நலனுக்கு எதிரானது ,நாட்டு ,மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ,மீட்கப்படமுடியாத பணமும் பொருள் நஷ்டங்களை தவிர்க்க போன்ற சமூக நல பாதுகாப்புக்கு மட்டுமே உச்சநீதிமன்றத்தின் ஸ்டே வழங்கும் நெறிமுறைகளை வகுக்கவேண்டும். நாட்டில் உள்ள 51/2 கோடி வழக்குகளை விரைந்து தீர்ப்பது எப்படி என்று ஆய்ந்து 30 வருடங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்கும் வழிகளை ஆராய்ந்துமுடிக்கவேண்டும் .மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ப நீதிமன்றங்கள் பெருக்கவில்லையென்றால் உயர்நீதி மன்றங்களுக்கும் உச்சநீதிமன்றத்திற்கும் மத்தியில் ஒரு அப்பீல் கோர்ட்டுகளை ஏற்படுத்தவழி உள்ளதா என்பதையும் ஆராயவேண்டும் .பணம் உள்ளவர்களுக்குமட்டுமே உச்சநீதிமன்றம் என்று இல்லாமல் சாமானிய மக்களுக்கும் உச்சநீதிமன்றம் உதவ வழி இருக்கின்றதா என்றும் ஆராய்ந்து உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியபின் ஆலோசனைகள் வழங்கும் அமைப்பை உருவாக்கி ,இலவச அப்பீல் முறையை ஏற்படுத்திடவேண்டும் .அப்போதுதான் நீதி என்பது எல்லோருக்குமானதாக இருக்கும் .


Selvaraj K
ஜூலை 05, 2025 23:27

நீதி மன்ற என்ற விளையாட்டு மைதானத்தில் ஓடி கொண்டு இல்லை சட்டம் தெளிவா இருக்குது ஆனால் அதில் பணி செய்து லஞ்சம் வாங்கியே பழக்க பட்டவர்கள் மன சாட்சி படி சட்டப்படி நடப்பவர்கள் இல்லை


Ravi Kulasekaran
ஜூலை 05, 2025 22:35

நீங்க எல்லாம் கடவுள்களா!உங்கள் தவறுகளுக்கு யார் தண்டனை வழங்குவது ஏபிசி 142 பறித்தாலே போதும்.


K V Ramadoss
ஜூலை 05, 2025 22:14

இத்துடன் வழக்குகளை விசாரித்து நீதி வழங்குவதில் கால தாமதம் செய்ய அனுமதிக்கக்கூடாது ..Delayed justice is denied ஜஸ்டிஸ்.. என்றும் அவர் கூறியிருக்கலாம்..


Subburamu Krishnasamy
ஜூலை 05, 2025 21:44

Just preachings will not be of any use Many judgements are not in accordance with constitution. In many cases opinion of the judges is reflected in judgements. No provisions to punish the erroring judges. No FIR to the judge caught in cash accumulated illegally in his house. He is not all afraid of the law of the land. There is no accountability in judiciary. Judgements are not in concomitant from sessions courts to the Supreme Court


முக்கிய வீடியோ