உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 உயிரிழந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார கூட்டத்துக்கு வந்தோரில் 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை நியமித்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bcxdrck5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கிடையே, வழக்கு தொடர்பான கரூர் போலீசாரின் விசாரணைக்கு தடைவிதித்த சென்னை உயர் நீதிமன்றம், வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டது.

விசாரணை

அஸ்ரா கர்க்கும் கரூருக்குச் சென்று, உயிர் பலிக்கு காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்காத த.வெ.க., தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. 'சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது தவறு; நடந்த சம்பவத்தை சி.பி.ஐ., விசாரணைக்கு விட வேண்டும்' என்று முறையிட்டனர்.உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 'இந்த விஷயத்தில், சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவும் முரண்பட்டு இருக்கின்றன.'இதில் நீதிமன்ற நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை' என்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சாரியா ஆகியோர் கருத்து தெரிவித்து, வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பை தள்ளி வைத்தனர்.

அதிரடி உத்தரவு

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (அக் 13) வெளியானது. சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

* விசாரணையை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.* இந்த குழுவில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற வேண்டும். அவர்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்க கூடாது.* இது எப்படி கிரிமினல் ரிட் மனுவாக பதிவு செய்யப்பட்டது என்பதை சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் அறிக்கை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் உண்மையில் அவர்களால் தாக்கல் செய்யவில்லை என்று வக்கீல்கள் முறையிட்டனர். அதற்கு நீதிபதி மகேஸ்வரி, அது உண்மை எனில் நாங்கள் அதை கவனத்தில் கொள்வோம். சென்னை உயர்நீதிமன்றத்தில் செயல்பாடுகள் பற்றி தீவிரமாக கவனித்தோம். கரூர் மாவட்டம் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் வரம்பிற்கு உட்பட்டதாக இருக்கும் நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எப்படி அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துகொண்டார் என்று நீதிபதி கேள்வி எழுப்பினர். சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் முடிவை நீதிபதி கடுமையாக விமர்சித்தார்.இது மிகவும் கவலைக்குரிய விஷயம். அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அமைக்க கோரிய மனு, எவ்வாறு கிரிமினல் வழக்கின் வரம்பிற்கு உட்பட்டதாக இருக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் விளக்க வேண்டும். இதனால் தான், நாங்கள் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று விரும்புகிறோம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழிகாட்டு நெறிமுறைகள்!

சிபிஐ விசாரணையை மேற்பார்வையிடும் குழுவிற்கு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்வருமாறு:* சிபிஐ மேற்கொள்ளும் விசாரணையை கண்காணிக்க வேண்டும். * சிபிஐ அதிகாரிகள் விசாரணையின் போது சேகரித்த ஆதாரங்களை மதிப்பாய்வு செய்ய வேண்டும். * விசாரணை முடிவுகளை மேற்பார்வையிட குழுவுக்கு முழு சுதந்திரம் உள்ளது.* கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணமான எந்தவொரு விஷயத்திலும், நியாயமான, வெளிப்படையான விசாரணையை உறுதி செய்ய வேண்டும்.* முன்னாள் நீதிபதியின் வழிகாட்டுதல்களின்படி, குழுவினர் செயல்பட வேண்டும். சம்பவம் தொடர்பான எந்த இடங்களிலும் விசாரணை நடத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 119 )

spr
அக் 16, 2025 18:05

"சிபிஐ மேற்கொள்ளும் விசாரணையை செய்தித்தாள்களும், ஊடகங்களும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் இல்லையேல் முடிவும் 22 ஆம் நூற்றாண்டு இறுதியில்தான் வெளியாகும் ஏற்கனவே "இந்தி எதிர்ப்பு மசோதா" கையிலெடுக்கப்பட்டு அது குறித்தெல்லோரும் பேசத் தொடங்கிவிட்டனர் மத்திய அரசு தனது பங்கிற்கு அதனை திமுகவிற்கு எதிராகப் பயன்படுத்தும் .வேறு வேலையில்லாத அண்ணாமலை ஊதிப் பெரிதாக்குவார் அடுத்ததோர் மொழிப்போர் கரூர் விபத்து மறக்கப்படும்


Shankar
அக் 14, 2025 03:09

40 தமிழ் நாட்டு மக்களை சாகடித்த தி மு க கொலை வெறி கூட்டத்தை அடுத்த 40 வருடத்துக்கு தமிழ் நாட்டு அரசியலில் இருந்து தூக்கி எரிய நேரம் வந்து விட்டது...... ஆட்கள் பலம், அதிகாரபலம் இருப்பதினால் நாங்கள் என்ன வேண்டுமானாலும் பண்ணுவோம் எந்த இருமாப்பை கொண்ட தி மு க கட்சிக்கு வேட்டு வைக்க 2026 தேர்தல் தான் தீர்ப்பு எழுத போகிறது


Venkatesan Srinivasan
அக் 13, 2025 23:18

வாசகர்கள் கவனத்திற்கு: மெட்ராஸ் உயர்நீதிமன்றம். கிளைகள் எங்கும் இல்லை. மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு. சம்பவம், மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதி பரிபாலனம் எல்லைக்குள் நிகழ்ந்தது. ஆகவே அந்த நீதிமன்றம் மட்டுமே விசாரணை செய்ய அதிகாரம். மெட்ராஸ் உயர்நீதிமன்ற, சென்னை நீதி பரிபாலன நீதிமன்றத்தில் விசாரிக்க தகுதி இல்லை. மேலும் நிகழ்வு சம்பந்தமான அரசின், அரசியல் கட்சியின் செயல்பாடுகள் வழிகாட்டுதல்கள் குறித்து நடைபெற வேண்டிய விசாரணை எப்படி குற்ற விசாரணையாக உருமாற்றம் பெற்றது? அதை விசாரித்த உத்தரவு பிறப்பித்த நீதிபதி, பதிவு செய்த நீதிபதி அந்தஸ்து அதிகாரிகள் செயல்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி. ஆகவே இதற்கே அதிர்ச்சி ஆனால் எப்படி?. இன்னும் எவ்வளவோ இருக்கிறது.


Ram
அக் 13, 2025 18:25

தி.மு. கழகத்திற்கு ... படி கிடைத்துவிட்டது ... முதலில் செந்தில் பாலாஜியை தூக்கி உள்ளவையுங்க ... அவரால்தான் இதெல்லாம் நடக்குது


கனோஜ் ஆங்ரே
அக் 13, 2025 17:53

உச்ச நீதிமன்றம் மேற்பார்வையாளராக போட்டிருக்கிற ஆளு யாருன்னே தெரியாம குதிக்குறானுங்க... அவர்தான், ஜல்லிக்கட்டு, முத்தலாக் வழக்குகளில் தீர்ப்பை வழங்கிய அஜய் ரஸ்தோகி /... இவர்... உண்மை என்னென்னு புட்டு புட்டு வச்சிருவார்...? விஜய்யும், விஜய் கட்சிக்காரங்களும். அவனுங்களே தங்களுடைய தலையிலே தானே மண்ண வாரி போட்டுகிட்டானுங்க...?


Mariadoss E
அக் 14, 2025 17:10

100% தவெக என்னமோ கேசில ஜெயிச்ச மாதிரி குதிக்கிறாங்க. ஆப்பு ரெடி ஆகி கிட்டே இருக்கு பெருசா ரெடியா இருங்கப்பா....


Svs Yaadum oore
அக் 13, 2025 17:03

அடிப்படை சட்டம் ஒழுங்கு என்றும் அனைத்தும் சீரழிந்த தமிழ் நாடு ...இந்த நடிகன் களேபரத்தில் மறந்த விஷயம் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவன் மரண தண்டனையை அக்டோபர் 8 அன்று உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது...இவன் அவன் அம்மாவையும் கொன்னவன் ...சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மறுஆய்வு மனுவை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்.....இது பற்றி விடியல் பதில் என்ன ??..


chandru
அக் 13, 2025 16:51

மதுரை அமர்வுக்கு உட்பட்ட ஊர்களின் வழக்கைச் சென்னை அமர்வு விசாரிப்பது முறை அல்ல.சில சிறப்பு வழக்குகளைத் தலைமை நீதிபதி அமர்வு விசாரிகலாம். மற்ற சென்னை அமர்வுகள் விசாரிக்கக் கூடாது


என்னத்த சொல்ல
அக் 13, 2025 16:51

வந்திருப்பது இடைக்கால தீர்ப்பு தான். அடுத்து தீர்ப்பு மாறி வந்தால், இங்கு கருது சொன்னவர்கள் எல்லாம், நீதியை விலைக்கு வாங்கீட்டாங்கன்னு புலம்புங்க.. குறிப்பு..சிபிஐ விசாரணை கேட்டவர்கள் எல்லாம் அதை மறுத்திருக்கிறார்கள்.


Kjp
அக் 13, 2025 17:31

இப்படிச் சொல்லியே மனதை சாந்தப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். நீதிபதி செந்தில் அவர்கள் தீர்ப்பு கூறிய போது குளுகுளுவென்று உங்களுக்கு இருந்ததா?


karupanasamy
அக் 13, 2025 16:26

விடியலுக்கு தோல் ரொம்ப திக்கு இப்பயும் சிரிச்சுக்கிட்டு போஸ் கொடுத்துக்கிட்டு திரியுது. வாய் வேலை வீரன் குருமா இதுக்கு ரொம்பவே பொங்கணுமே.


SIVA
அக் 13, 2025 16:01

இந்த வழக்கில் ஆண்ட செந்தில் ஒரு நல்ல கருத்தை சொன்னார் பாதிக்கப்பட்ட பிள்ளையின் தந்தைக்கு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு போட பணம் இல்லயாம் அவரை யாரோ பணத்திற்க்காக தூண்டி விட்டு வழக்கு போட சொன்னார்களாம் , அப்ப நீட் வழக்கில் அனிதா எப்படி சுப்ரீம் கோர்ட் வரை சென்றார் , அவருக்கு யார் பணம் கொடுத்தது , அனிதா ஒரு பெட்டியில் தெளிவாக சொல்லி உள்ளார் நான் அக்ரி அல்லது வேறு எதாவது சேர்ந்து படிக்கலாம் இருக்கேன் என்று அந்த வீடியோ இப்பவும் யு TUBE வீடியோவில் உள்ளது , அப்ப அனிதாவை கொன்றது யார் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை