உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்வர் உமர் சந்திப்பு!

பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்வர் உமர் சந்திப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அடுத்து செய்ய வேண்டியவை பற்றி இருவரும் ஆலோசித்தனர்.காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதன் பின்னணியில் உள்ள பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இச்சூழ்நிலையில், டில்லி வந்துள்ள காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா , பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை, வரும் நாட்களில் எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தினர். பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பிறகு இருவரும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Vasan
மே 04, 2025 02:44

Both are wearing same colour dress. Same pinch.


ராமகிருஷ்ணன்
மே 03, 2025 22:51

தாக்குதலுக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். ஆட்சியை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொடுத்து தீவிரவாதிகள் முழுமையாக அழிக்கப்படும் வரைக்கும் பொருமையாக காத்திருக்க வேண்டும்.


MARUTHU PANDIAR
மே 03, 2025 21:51

பயங்கரவாதிகளின் அன்பும் ஆதரவும் இன்றி காஷ்மீரில் தொப்புள் கொடிகள் ஆட்சி புரிய முடியாது.


Ramesh Sargam
மே 03, 2025 20:35

மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை, வரும் நாட்களில் எடுக்கப்படும் நடவடிக்கை இவற்றை தெரிந்துகொண்டு காஷ்மீரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளுக்கு சொல்லி அவர்களை உஷார் படுத்துவான் இந்த உமர். இவனை நம்பவே கூடாது.


chandrakumar
மே 03, 2025 21:04

மிக சரியாக சொன்னீங்க. என்ன ஒரு திமிர் இருந்தால் பிரதமர் முன்னால் கால்மேல் கால் போட்டு உட்காருவார் இந்த முதல்வர்.


Murugan
மே 03, 2025 20:15

உடல் சமிக்ஞை தவறு செய்தவரை மாற்றிக்காட்டுகிறது .வருத்தமளிக்கிறது.


Murugan
மே 03, 2025 20:09

Looks like omar is questioning the accused. PM is worried and concerned.


சமீபத்திய செய்தி